Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..!

Dec 06, 2019 0 230
157565062491696.jpg

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார்  நாட்டு தூதரகம், சர்வதேச அகதியாக குடியேறுவதற்கு அனுமதி கேட்ட நித்தியின் கோரிக்கையை ஏற்காததால் தங்கள் நாட்டை விட்டு அவர் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தாவுக்கு உலகம் முழுவதும் 17 நாடுகளில் 108 ஆசிரமங்கள் உள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதபாத் ஆசிரமத்தில் பாலியல் பலாத்கார புகார் எழுந்தது.

சிறுமிகளை ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கடத்தல் உள்ளிட்ட வழக்கில் தேடப்படும் நித்தியானந்தாவை பிடிக்க இண்டர்போல் உதவியை அகமதாபாத் காவல் துறையினர் நாடியுள்ளனர்.

நித்தி தனது சிஸ்ய லேடிகளுடன் தெற்கு அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக தொடங்கி இருப்பதாக நித்தியின் www.kailasaa.org என்ற இணையத்தில் அறிவித்திருந்தார்

அதில் பாஸ்போர்ட், தனி கொடியுடன் 11 விதமான பாலியல் செய்கைகளுக்கு தனது தீவில் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டி தனிநாடாக அறிவிக்க கோரி ஐ.நா.சபைக்கு கடிதம் ஒன்றையும் நித்தி எழுதியுள்ளதாக இணையத்தில் தெரிவிக்கப்படிருந்தது.

ஈகுவடார் நாட்டின் தனி தீவை, நித்தி, கன்னி தீவாக மாற்ற முயற்சிக்கும் தகவல்கள் தொடர்ந்து செய்திகளாக வெளியானதால், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதை தொடர்ந்து மிரண்டு போன இந்தியாவுக்கான ஈகுவடார் தூதரகம் மறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுயமாக தன்னை தானே குருவாக அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த இடத்தையோ, அல்லது தீவுகளையோ வாங்க வில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சர்வதேச அகதிகள் குடியேற்ற விதியின் கீழ் நித்தியானந்தா அனுமதி கேட்டதாகவும், அதனை ஈகுவடார் அரசு ஏற்கவில்லை என்பதால் ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈகுவடார் நாட்டில் தனித் தீவு வாங்கியிருப்பதாக வந்த அத்தனை செய்திகளுக்கும், நித்தியானந்தா பீடத்தின் சார்பில் இயங்கிவரும் KAILASAA.ORG என்ற இணைய நிறுவனமும் அவரது பீடத்தில் பணிப்புரியும் அலுவலர்களே பொறுப்பு என்று ஈகுவடார் தூதரகம் கூறியுள்ளது.

எனவே, இனிவரும் நாள்களில் நித்தியானந்தா ஈகுடவார் நாட்டில் இருப்பதாக எந்த செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்றும் இந்தியாவுக்கான அந்நாட்டு அரசின் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கன்னிதீவு கதைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது

இந்த நிலையில் சிஷ்ய அடிபொடிகளுடன் கண்டம் விட்டு கண்டம் தாவியுள்ள நித்தி அடைக்கலம் தேடி அகதியாக வடக்கு அமெரிக்காவில் உள்ள ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே திருவண்ணாமலையில் சாதாரணமாக இருந்த தன்னை ஊர் ஊராக அடித்து துரத்தியதால், கைலாசா என்று தனி நாடு அமைக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதாக நித்தி முழங்கியுள்ளார்.

 

https://www.polimernews.com/dnews/91696?fbclid=IwAR33e9NSonMYxN5XRyeLE4o2Ekmwpnr3femBhIUwSMUm3wmkTXW649SrALA

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல பிழைகள்தான் சில கண்டுபிடிப்புகளுக்கும்,முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சீடரையும் சல்லாபத்துக்கு இழுத்தவர் நித்தி! கைலாசா நித்திக்கு எதிராக கன்னாபின்னா குற்றச்சாட்டுகள். .!

tedjplrv-jpg_1200x630xt.jpg

வெங்காய விலையேற்றம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென நித்தியானந்தாவின் தனி நாடு, தனி பாஸ்போர்ட், சிஷ்யைகளுடன் லீலைகள் என்று குஜால் விவகாரங்களாக  கூடி கும்மி அடிக்கின்றன நாட்டை. இதுவரையில் தென்னிந்தியாவை மட்டுமே கலக்கி வந்த நித்தி புராணம், இந்த முறை தேசம் முழுவதுமே பற்றி எரிகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் ‘தேசம் முழுவதையும் வெங்காய விலையேற்றம் போட்டு ஆட்டுவதால்தான்!’ என்கின்றனர் விமர்சகர்கள்.

இந்த பகீர் விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட நித்தியானந்தாவுக்கு எதிராக  கிளந்து எழுந்து நிற்போர், அவரைப் போட்டு புரட்டி எடுத்துக் கொண்டேதான் உள்ளனர். அந்த வகையில், நித்தியின் முன்னாள் சீடரும், அவரது ஆசிரமத்தின் முக்கிய நிர்வாகியுமான ஜனார்த்தன சர்மா இப்போது நித்தியை பின்னிப் பேர்த்து எடுக்கிறார். காரணம், நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு முக்கிய இளம் பெண்களில் இவரது மகள்கள் இருவரும் அடக்கம்.

ஜனார்த்தன சர்மா இப்போது ஒரு பேட்டியில்...”நித்தியானந்தா எங்கே இருக்கிறார் அப்படின்னு தெரிஞ்ச ஒரு பத்து பேர் இன்னும் ஆசிரமத்துக்குள்ளேதான் சுத்திட்டு இருக்கானுங்க. அவங்களை வகையா விசாரிச்சால், உண்மை தெரிஞ்சுடும். இந்துக்களுக்கு தனி நாடுன்னு திடீர்ன்னு அவன் சொல்றான்னா (நித்திதான்) அதுக்கு என்ன காரணம்? அதை புரிஞ்சுக்கணும். இதையெல்லாம் நாங்க அங்கே இருக்கும்போதே போட்ட்ட ஸ்ட்ராட்டஜீஸ்.

நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குள்ளே மிக தவறான வழியில் சிறுமிகளை நடத்துறாங்க. பெண்கள் கையில் பெங்களூரு ரோஸ் பூவை கொடுத்து,  லைட்டை அணைக்க வெச்சுட்டு என்னவெல்லாமோ பண்றாங்க. உள்ளே இருக்கிற பெண்களுக்கு ஆபாச படங்களை நித்தியானந்தாவே அனுப்புவார். ஆண்களை,  ஆண் சீடர்களை கூட சல்லாபத்துக்கு அவர் கூப்பிட்டிருக்கார், இது ஆதாரப்பூர்வமா உறுதியாகியிருக்குது. பாதிக்கப்பட்ட பையனே சொல்லியிருக்கான்.” என்று விளாசி தள்ளியிருக்கிறார்.

தனக்கு எதிராக இந்த தேசத்தில் பெரும் ‘பலான குற்றச்சாட்டு’ புயல் கிளம்பியிருக்கும் நிலையிலும், ஏதோ கடற்பரப்பில் உட்கார்ந்து கொண்டு  "கெக்கே பிக்கே" ன்னு சிரிச்சுகிட்டு ‘என்னை பார்த்தால் உனக்கு ஏன் வயிறு எரியுது? எனக்கு கூந்தல் இருக்குது, அள்ளி முடியுறேன்’ என்று லாஜிக்கலாக லந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
ஹும்! கொடுத்து வச்சவரு.

https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/controvesy-news-about-nithiyananda-q2726x

  • கருத்துக்கள உறவுகள்

 

On 12/6/2019 at 7:16 PM, விசுகு said:

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார்  நாட்டு தூதரகம்,

என் மனைவிக்கு பொட்டு வைத்த முகத்துடன் படமெடுத்துக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க கைலாச நாட்டை நம்பியிருந்தேன். கெடுத்துவிட்டார்களே பாவிகள்.😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.