Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியாவை வென்றது

Featured Replies

நேரம்: 19:00 (IST) 13:30(GMT) December 08, 2019
டாஸ் வென்றது: வெஸ்ட் இண்டீஸ்பவுலிங் தேர்வு
வானிலை: க்ளியர்
ஆட்ட நாயகன்: லென்டில் சிம்மன்ஸ்
தொடரின் நிலை: 3 டீ20ஐ தொடர் லெவல் 1-1
முடிவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியா வை வென்றது
அதிகாரிகள்: நடுவர்: அனில் குமார் சவுத்ரி, செட்டிதோடி ஷாம்ஷூதின், நிதின் நரேந்திர மேனன் | ரெஃப்ரி: டேவிட் பூன்

https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-t20i-thiruvananthapuram-inwi12082019190935

 

மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 171 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது. 

ELRV9KOX0AUb51C.jpg

தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ரோகிர் சர்மா 15 ஓட்டத்தையும், கே.எல்.ராகுல் 11 ஓட்டத்தையும், சிவம் டூப் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டத்தையும், விராட் கோலி 19 ஓட்டத்தையும், ஸ்ரேயஸ் அய்யர் 10 ஓட்டத்தையும், ஜடேஜா 9 ஓட்டத்தையும், வொஷிங்டன் சுந்தர் டக்கவுட்டுடனும், ஆட்டமிழக்க ரிஷாத் பந்த் 33 ஓட்டத்துடனும், தீபக் சாஹர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் ஹேடன் வால்ஷ் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹோல்டர், ஷெல்டன் கோட்ரல் மற்றும் கரி பியர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/70692

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி..👍

  • தொடங்கியவர்

மோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா!

இந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

171 என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. 

தீபக் சகார் வீசிய 3 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய லீவிஸ், வொஷிங்டன் சுந்தர் வீசிய 6 வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். 

இவருக்கு ஒத்துழைப்பு தந்த சிம்மன்ஸ், யுவேந்திர சகால் வீசிய 9 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்த போது சுந்தர் பந்தில் லீவிஸ் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சரை பறக்கவிட்ட சிம்ரன் ஹெட்மயர் 23 ஓட்டத்துடன், அதே ஓவரில் வெளியேறினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சிம்மன்ஸ், அரைசதம் கடந்தார். 

புவனேஷ்வர் வீசிய 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய நிக்கோலஸ் பூரன், தீபக் சகார் பந்தை பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. 

சிம்மன்ஸ் 67 ஓட்டத்துடனும், பூரன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ் வென்றார்.

இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கிறது.

இந்திய அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த பிடிய‍ெடுப்பு வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்த் ஆகியோர் நழுவ விட்டனர். 

பின், தீபக் சகார் வீசிய 17ஆவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த பிடியெடுப்பினை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்தியத்தீவுள் அணியினர் எளிதாக ‘சேஸ்’ செய்தனர்.

பவுண்டரி எல்லை அருகே களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஹெட்மயர் அடித்த பந்தை அபரமாகமாக பிடியெடுத்து அசத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70708

ELR1YPIUEAACh5b.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.