Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலை விட்டு நீங்கினால் கூட்டமைப்பு பிழைத்துக்கொள்ளும் - விக்கி விசேட செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள்  விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ ஆ­கியோர் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறமாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி.

எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை என, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி..வி. விக்கி­னேஸ்­வரன் கேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ­ரு­ட­னான   நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு,

vike.jpg

கேள்வி : தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் இருந்­து­விட்டு நேற்று வரைக்கும் எத்­த­கைய கொள்கை ரீதி­யான கருத்­துக்­க­ளையும் கூறாது இன்று மாற்று அணியைத் தேடு­வ­தென்­பதும் ஒன்று சேரு­வ­தென்­பதும் இன்னும் ஒரு அணி­யா­கத்தான் இருக்­குமே தவிர, அது மாற்று அணி­யாக இருக்க முடி­யாது என விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. அவ்­வ­கையில் இவ்­வா­றான விமர்­ச­னங்­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் ?

பதில் : தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு 2013 இல் தனது விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கிய விட­யங்­க­ளையே நாங்கள் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆகவே புதி­தாக கொள்கை ரீதி­யாக நாங்கள் எத­னையும் கூற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கூட்­ட­மைப்­பினர் எமது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை காற்றில் பறக்க விட்­டு­விட்டு சுய­நல வாழ்க்­கையில் ஊறி நிற்­கின்­றார்கள் என்­பதே எமது குற்­றச்­சாட்டு. மாற்று அணி என்­பது இயற்­கை­யாக உதிக்க வேண்டும். பழைய போத்­தல்­களில் இருந்­த­வற்றை புதிய புட்­டி­களில் அடைத்­து­விட்டு மாற்று அணி என்று குதிப்­பது பயன் அற்­றது. தேர்­த­லுக்­கா­கவே சிலர் நீங்கள் கூறிய வாச­கங்­களைக் கூறி வரு­கின்­றார்கள். எமது மக்கள் சேவை தேர்­த­லுக்கு அப்பால் செல்ல வேண்டும். நாங்கள் மாற்று அணி­யி­னரா இல்லையா என்­பதை மக்­கள் தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் அனைத்தும் கூட்­ட­மைப்­புடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்ற கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­தி­ரனின் அழைப்­பினை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் ?

பதில் : காலம் கடந்த ஞான­மா­கவே கரு­து­கின்றேன். ஒன்­றி­ணைந்த கட்­சிகள் பல­வற்றை இது­காறும் ஓரங்­கட்­டி­விட்டு ஓர்­மை­யுடன் ஒற்­றுமை பற்றிக் கூறு­வது வியப்­பாக இருக்­கின்­றது. ஒரு வேளை இரா. சம்­பந்­தனும் எம்.ஏ. சுமந்­தி­ரனும் அர­சி­யலில் இருந்து ஓய்­வு­பெற்றுக் கொண்­டார்­க­ளானால் தமிழ்க்­கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை ஏற்­பட அது வழி­வ­குக்­கக்­கூடும்.

கேள்வி :- உங்­களின் தலை­மையில் புதிய மாற்று அணியைக் கொண்ட கூட்டு விரைவில் உரு­வாகும் என, ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்தின் போது கலந்­து­ரை­யாடி, ஊடக சந்­திப்­பிலும் அறி­வித்­தி­ருந்தார். அவ்­வ­கையில் மத்­திய குழுக்­கூட்­டத்தின் முடிவை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா ?

பதில் : கொள்கை அடிப்­ப­டையில் நாங்கள் சேர வேண்டும் என்ற முடிவை தமிழ் மக்கள் பேர­வையில் இருந்த போதே நாங்கள் எடுத்­து­விட்டோம். அந்த அடிப்­ப­டை­யில்தான் நாங்கள் வட­மா­காண சபையில் ஒரு­மித்துப் பய­ணித்தோம். கலா­நிதி சர்­வேஸ்­வரன் எங்­களின் பொறுப்­பு­மிக்க அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­றினார். ஆகவே ஏற்­க­னவே கூட்டு உரு­வா­கி­விட்­டது. அதன் பயணப் பாதையை இப்­பொழுது போட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். தேர்தல் கூட்டு உரு­வாகும். அது மாற்று அணியின் அத்­தி­வா­ரமா என்­பதை இருந்து பார்த்­துத்தான் கூற­மு­டியும். அவர்­களின் மத்­திய குழுக்­கூட்ட முடிவு என்ன என்று எனக்குத் தெரி­யாது. ஆகவே அது பற்றி என்னால் கருத்து வெளி­யிட முடி­யாது.

கேள்வி :- புதிய மாற்று அணியைக் கொண்ட கூட்­டுக்கு பொது­மக்­க­ளி­டையே எவ்­வா­றான வர­வேற்பு கிடைக்கும் ?

பதில் : முதலில் அது மாற்று அணி­யாக மக்­க­ளி­டையே ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். எமது கூட்­டுக்கு வடக்கு கிழக்கில் ஆங்­காங்கே நல்ல வர­வேற்பு இருப்­பதை நாம் கவ­னித்து வந்­துள்ளோம்.

 கேள்வி : கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடு­தலைக் கழகம் ஆகி­யன கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி மாற்று அணியில் இணை­ய­வுள்­ள­தாக அள­வ­ளா­வப் ­ப­டு­கி­றது. அவ்­வ­கையில் அவ்­வா­ற­ான­வர்­களின் இணைவு குறித்து ?

பதில் : தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள்  விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ஆ­கியோர் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேற மாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை.

கேள்வி : ஜனா­தி­ப­தியின் இந்­திய விஜ­யத்­தின்­போது பிரதமர் நரேந்­தி­ர­மோடி வலி­யு­றுத்­திய 13 ஆவது திருத்தச் சட்­டத்தை, கோத்­தபாய மற்றும் மஹிந்த ராஜ­பக்‌ஷ அணி­யினர் முன்­னெ­டுப்­பார்­களா ?

பதில் :- தற்­போ­தைய ஜனா­தி­பதி 13 ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம் என்றே முன்னர் கூறி வந்தார். தற்­போ­தைய பிர­தமர், காலத்­துக்கு காலம் 13 க்கு அப்பால் என்­றெல்லாம் கூறி­விட்டு எத­னையும் செய்­ய­வில்லை. தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை பகிர்ந்து கொடுப்­பதில் அவர்­க­ளுக்கு நாட்­ட­மில்லை. சிங்­கள மேலா­திக்­கத்தின் கீழ் தாங்கள் முன்­வந்து தரு­வ­ன­வற்றை நாங்கள் ஏற்­றுக்­கொண்டு வாயைத் திறக்­காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். இந்த யதார்த்த உண்­மையை மோடி­ய­வர்கள் உணர்ந்து கொள்­ள­வேண்டும். அவர் கூறிய பின்­னரும்

13 ஆவது திருத்தச் சட்டம் புதிய அர­சாங்­கத்தால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால் நாம் கூறு­வது சரி­யென்ற முடி­வுக்கு மோடி­ய­வர்கள் வரு­வார்கள் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

கேள்வி : எதிர்­வரும் பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் புதிய மாற்று அணி நிறை­வான ஆச­னங்­களை கைப்­பற்­ற­மாட்­டாது என்ற கதை­யா­டலை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் ?

பதில் :- மாற்று அணி­யொன்று வரு­வ­தை­யிட்டு பீதி­ய­டை­வ­துடன் வரப்­ப­டாது என்ற முனைப்பில் இருப்­ப­வர்கள் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தற்­போ­தைய உண்­மை­யான தலைமை ( அது மாவை அல்ல)  அர­சி­யலை விட்டு நீங்­கினால் ஒரு வேளை கூட்­ட­மைப்பு பிழைத்­துக்­கொள்ளும். இல்லை என்றால் தற்­போ­தைய தலை­மைக்கு எதி­ரா­கவே மக்கள் வாக்­க­ளிப்­பார்கள் என்று நாங்கள் எண்ண இட­முண்டு.

 கேள்வி : கிழக்கின் தலை­மைத்­துவம் எவ்­வா­றா­ன­வர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள் ?

பதில் : கிழக்கு மாகாண மக்­களின் குறை­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் ஒரு தலை­மைத்­து­வத்­திடம். ஆனால் அத்­த­லை­மைத்­துவம் மக்­களின் குறை­களை முன்­வைத்து அதி­காரம் பெற்ற பின் மக்களை உதாசீனம் செய்யுமாக இருந்தால் மக்களின் கதி அதோ கதி என்றாகிவிடும். கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக செயல்படும் அதே நேரம் தமக்கிடையே இருக்கும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் களைய முன்வர வேண்டும். அவ்வாறு களையாவிட்டால் மத்திய பெரும்பான்மையான கட்சிகளின் கை ஓங்கிவிடும். ஏற்கனவே தமது மக்கள் தொகையை கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகிதத்திற்கு பெருக்கிக்கொண்டிருப்பவர்கள் எமது பரஸ்பர சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் அடிப்படையாக வைத்தே எமது இருப்பை ஆட்டங்காண வைத்துவிடுவார்கள் என்பதை நாங்கள் உணர வேண்டும்.  

- நேர்காணல் - பாக்கியராஜா மோகனதாஸ்

https://www.virakesari.lk/article/71210?fbclid=IwAR2noL3NmS3EAIvwTkpixYDwJ1X4uvo6e65sbldn9juas2DG-MVxt3Yptlw

உங்கள் கண்டுபிடிப்பை வரவேட்கிறோம். அடைக்கலம், சித்தார்த் குறித்து நீங்கள் சொன்ன கருத்து உண்மை. அவர்களுக்கு இதை விடடாள் வேறு வழி இல்லை.

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலை விட்டுப்போனால் நிச்சயமாக நீங்கள் ஈழத்தை அல்லது வடக்கு கிழக்கு இணைந்த சமஷடியாவது பெற்றுக்கொடுப்பீர்கள் எண்டு சொல்லுகிறீர்கள். அறுபது வருடமாக கிடைக்காதது இப்போது கிடைக்கப்போவதை எண்ணி மிகவும் சந்தோசம்.

ஏன் என்றால் இப்போது இருக்கும் அரசு நீங்கள் கேட்டவுடன் எதையும்  கொடுத்து விடுவார்கள்.  நீங்களாவது எங்களை இலவு காத்த கிளியாக மாற்றி விடாதீர்கள். நன்றி. 

9 hours ago, Vankalayan said:

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலை விட்டுப்போனால் நிச்சயமாக நீங்கள் ஈழத்தை அல்லது வடக்கு கிழக்கு இணைந்த சமஷடியாவது பெற்றுக்கொடுப்பீர்கள் எண்டு சொல்லுகிறீர்கள். அறுபது வருடமாக கிடைக்காதது இப்போது கிடைக்கப்போவதை எண்ணி மிகவும் சந்தோசம்.

வங்காலையன், நீங்க விக்கிக்கும் உங்களுக்கும் நடந்த ரகசிய உரையாடலை இங்க போட்டு எங்களை இலவு காத்த கிளியாக மாற்றி விடாதீர்கள்.
நன்றி. 

15 hours ago, Gowin said:

வங்காலையன், நீங்க விக்கிக்கும் உங்களுக்கும் நடந்த ரகசிய உரையாடலை இங்க போட்டு எங்களை இலவு காத்த கிளியாக மாற்றி விடாதீர்கள்.
நன்றி. 

இங்கு ரகசியம் ஒன்றுமே இல்லை. எல்லாமே பரகசியம். இப்போ இருக்கிற அரசாங்கமும் விக்கி ஐயா கேட்டவுடன் கொடுத்துவிடுவார்கள். எனவே தமிழர்களுக்கு  விடிவு வாசட்படியில்.

On 12/20/2019 at 11:08 AM, Vankalayan said:

இங்கு ரகசியம் ஒன்றுமே இல்லை. எல்லாமே பரகசியம். இப்போ இருக்கிற அரசாங்கமும் விக்கி ஐயா கேட்டவுடன் கொடுத்துவிடுவார்கள். எனவே தமிழர்களுக்கு  விடிவு வாசட்படியில்.

வங்காலையன், நீங்க அரசுக்கும் உங்களுக்கும் நடந்த ரகசிய டீலை இங்க போட்டு பரகசியமாக்கி எங்களை இலவு காத்த கிளியாக மாற்றி விடாதீர்கள். நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.