Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கி நோக்கி படையெடுக்கும் சிரிய அகதிகள்: தனியாக சமாளிக்க முடியாது என்கிறார் எர்டோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

turkey-can-t-bear-burden-of-new-wave-of-syrian-refugees-erdogan.jpg

துருக்கி நோக்கி படையெடுக்கும் சிரிய அகதிகள்: தனியாக சமாளிக்க முடியாது என்கிறார் எர்டோகன்

சிரியாவிலிருந்து வரும் அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியை நோக்கி வந்திருக்கிறார்கள்.

இதில் சிரியாவின் வடக்கில் இட்லிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 80,000 பேர் துருக்கி எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிரிய அகதிகளின் இந்தப் புதிய அலையை துருக்கியால் மட்டும் தனியாகச் சுமக்க முடியாது. இட்லிப் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் தாக்கம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உணரப்படும்” என்று எர்டோகன் தெரிவித்தார்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் சிரிய அகதிகளைக் குடியமர்த்துவது தொடர்பான தனது முடிவுக்கு ஆதரவு அளிக்காத இஸ்லாமிய நாடுகளையும் எர்டோகன் முன்னரே விமர்சித்திருந்தார்.

துருக்கியில் தற்போதைய நிலைவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக துருக்கி அறியப்படுகிறது.

முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்திஷ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் எனக் கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்ட நிலையில் அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் இராணுவத்தை  திரும்பப் பெற்றதன் பின்னர் குர்திஷ் படைகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்தும் சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி இராணுவம் குர்திஷ் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

http://athavannews.com/துருக்கி-நோக்கி-படையெடுக/

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

சிரியாவிலிருந்து வரும் அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

, துருக்கியில் இருந்து பழங்கள் ஏற்றி வந்த  (குளிர்)பார ஊர்தியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த14 முதல் 31 வயதினரான ஆண்களை யேர்மனியில் Passau  என்ற நகரத்தில் வைத்து மீட்டார்கள்  என்பது இன்றைய செய்தி.  

அகதிகளை துருக்கியில் வைத்து பராமரிப்பதற்கு ஐரோப்பிய யூனியன் துருக்கிக்கு பெருமளவு பணம் கொடுக்கிறது.

அகதிகளை ஐரோப்பாவுக்கு அனுப்பி விடுவேன் என ஏர்டோகான் சமீபத்தில் கூட ஐரோப்பாவுக்கு பயம் காட்டியிருந்தார்

ஐரோப்பாவிற்கு ஆபத்தான நாடாக துருக்கியும் அதன் தற்போதைய அதிபரும் உள்ளார். 

இந்த அதிபரின் நீண்ட கால திட்டம் - ஐரோப்பாவை முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக்குவதே :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

ஐரோப்பாவிற்கு ஆபத்தான நாடாக துருக்கியும் அதன் தற்போதைய அதிபரும் உள்ளார். 

இந்த அதிபரின் நீண்ட கால திட்டம் - ஐரோப்பாவை முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக்குவதே :rolleyes:

உண்மையும் தான்..... அதனைத் தான், இங்குள்ள துருக்கி மசூதிகளில்...
ஒரு, கொள்கையாக வைத்திருப்பதாக,  என்னுடைய... துருக்கி, நண்பர் சொன்னார். 

இங்கு, மூன்று வருடங்களுக்கு  முன்பு,  ஆறு மில்லியன் துருக்கியர்...
இப்போ... ஏழு மில்லியனை, நெருங்கிக் கொண்டு வருகிறார்கள். 

டிஸ்கி: ஒரு மில்லியன் ----  1 000 000

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மையும் தான்..... அதனைத் தான், இங்குள்ள துருக்கி மசூதிகளில்...
ஒரு, கொள்கையாக வைத்திருப்பதாக,  என்னுடைய... துருக்கி, நண்பர் சொன்னார். 

இங்கு, மூன்று வருடங்களுக்கு  முன்பு,  ஆறு மில்லியன் துருக்கியர்...
இப்போ... ஏழு மில்லியனை, நெருங்கிக் கொண்டு வருகிறார்கள். 

டிஸ்கி: ஒரு மில்லியன் ----  1 000 000

family-planning-1-638.jpg?cb=1456160623

தோழர் குடும்ப கட்டுபாடு எல்லாம் அங்கு நடைமுறை படுத்தபடுகிறதா..? இல்லையென்றால் கஸ்ரம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

family-planning-1-638.jpg?cb=1456160623

தோழர் குடும்ப கட்டுபாடு எல்லாம் அங்கு நடைமுறை படுத்தபடுகிறதா..? இல்லையென்றால் கஸ்ரம்..😢

தோழர்  புரட்சி ..... பகிடி, என்னவென்றால்....
இங்கு, ஜேர்மன் காரன்(ரி)கள்... கலியாணம் கட்டவே... விரும்புவதில்லை.  
சொண்டுக்கு, சொண்டு...  "பிரான்ஸ்  லிப்ஸ் கிஸ்"  கொடுத்து,
அலுவலை... முடித்து விடுவார்கள். 🤩

அதனால்... ஜேர்மன்  மக்கள் தொகை, மிக  வீழ்ச்சி அடைந்துள்ளது. :shocked:
அதனை, ஊக்குவிக்கும் முகமாகமாக... 
இங்கு,  "நாமிருவர், நமக்கு இருவர்"  என்ற விளம்பரங்கள் இல்லை. :)

இங்கு, திருமணம் செய்யாமல், ஒருவர் வேலை செய்து  வாழ்ந்ததால்...  
அதற்கு... வருமான வரித்துறை, அதிகமான பணத்தை அவரிடம் இருந்து, அறவிடும்.
அவர்.. திருமணம் செய்தால்,  வரி விலக்கு  அளிக்கப் படும்.
ஒரு பிள்ளை, பெற்றால்....  இன்னும்.. வரி விலக்கு  அளிக்கப் படும்.
இரண்டு, மூன்று, நான்கு... பிள்ளைகள் எனும் போது....
அரசாங்கமே.... காசு தரும்.

இதுவே... ஐந்து பிள்ளைகள்... பெற்ற, தாயாக  இருந்ததால்... 
அவருக்கு,  உடனடி ஓய்வூதியம் (பென்சன்) கிடைக்கும். :)

இதனை... முஸ்லீம்கள்,  நன்கு பயன் படுத்துகின்றார்கள். 😎

டிஸ்கி:  தமிழ் சிறியால்.... மூன்றுக்கு மேல், முடியவில்லை.   :grin:  🤩  😊

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  தமிழ் சிறியால்.... மூன்றுக்கு மேல், முடியவில்லை.   :grin:  🤩  😊

test.png

 

தங்களின் பால்ய விவாகத்தின் பலனாக, மூன்றே மிக அதிகம் 'தமிழ்சிறி ஐயா'..!  vil-roulelangue.gif

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

test.png

 

தங்களின் பால்ய விவாகத்தின் பலனாக, மூன்றே மிக அதிகம் 'தமிழ்சிறி ஐயா'..!  vil-roulelangue.gif

roflphotos-dot-com-photo-comments-20191208144001.jpg

ராஜவன்னியன் போன்ற, ஆட்களை... வைத்துக் கொண்டு,  
ஒரு கருத்தும், எழுத முடியாமல் இருக்கே.... :grin:

எல்லாவற்றையும்... கழுகு பார்வையில்,  எடுத்து வைக்கிறார்களே.... 🤩

235000 மக்கள் அளவில், துருக்கியை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றன. 

சிரிய அதிபரும் அவருக்கு ஆதரவான உருசிய படைகளும் தாக்குதலை மராத் அல் நுமான் மீது ஆரம்பிக்க உள்ளனர் என கூறப்படுகின்றது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.