Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெறுமதியான கடிகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Niedersachsen மாநிலத்தில் Aurich என்ற நகரில் இருந்த ஒருவருக்கு பழைய பொருட்கள் விற்கப்படும் அங்காடியில் இருந்த பழமையான ஒரு சுவர் மணிக்கூடு பிடித்துப் போயிற்று. அதனை வாங்கும் போது அது ஒரு பெறுமதி மிக்க மணிக்கூடு என்று அந்த மனிதனுக்கோ அல்லது சந்தையில் அதை விற்றவருக்கோ தெரிந்திருக்கவில்லை.

ஆசையோடு அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அந்த மணிக்கூட்டை ஆராய்ந்ததில், 80 செ.மீற்றர் அளவிலான மரத்தால் செய்யப்பட்ட அந்தக் கடிகாரத்தின் உட் பகுதியில் 50,000 டொச்சமார்க்குகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை கண்டிருக்கின்றார். அதனுடைய மதிப்பை இன்றைய யூரோக்களில் கணக்கிட்டால் 25,500 அளவில் வரும்.

நேர்மையான அந்த மனிதன்  பணத்தை கொண்டுபோய் Aurich நகரின், இழந்த பொருட்களை கண்டு பிடிக்கும் அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கின்றார். பணத்தின் உரிமையாளர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதற்கான உரிமையைக் கோராத பட்சத்தில் அந்தப் பணம் அதனைக் கண்டு பிடித்தவருக்கே போய்ச்சேரும். அப்படி அவருக்கு பணம் கிடைக்குமாக இருந்தால் பொருட்களை கண்டு பிடிக்கும் அலுவலகத்துக்கு 576 யூரோ கட்டணமாக கொடுக்கவேண்டி வரும்.

யேர்மனியச் சட்டத்தின் பிரகாரம் தவற விடப்பட்ட 10 யூரோக்களுக்கு குறைவான பணத்தை யாராவது கண்டு பிடித்தால் அதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றும்படி அதை அறிவிக்காவிட்டால்களவாடப்பட்டதுஎன்ற அடிப்படையில் மூன்று வருட சிறைத் தண்டனையோ அல்லது குற்றப் பணமோ செலுத்த வேண்டியோ வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

யேர்மனியச் சட்டத்தின் பிரகாரம் தவற விடப்பட்ட 10 யூரோக்களுக்கு குறைவான பணத்தை யாராவது கண்டு பிடித்தால் அதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றும்படி அதை அறிவிக்காவிட்டால்களவாடப்பட்டதுஎன்ற அடிப்படையில் மூன்று வருட சிறைத் தண்டனையோ அல்லது குற்றப் பணமோ செலுத்த வேண்டியோ வரலாம்.

இதுவரை... கேள்விப் படாத சட்டம்.  தகவலுக்கு... நன்றி, கவி அருணாசலம். :)

இதனைப் போல, சுமார்.... 27 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இது,

என்னுடன் வேலை செய்த...  🇹🇷 துருக்கி நாட்டை  சேர்ந்தவருக்கு  பிள்ளைகள் இல்லை.
அவர், 🇩🇪 ஜேர்மனியில்  30 வருடங்களாக வேலை செய்து வந்தவர்.
சென்ற தலைமுறையை... சேர்ந்தவர் என்பதால்....
ஜேர்மன்  மொழி, வடிவாக கதைக்க முடியாதவரும்,
ஜேர்மன் காரனை....  நம்பக் கூடாது, என்றும்  வாழ்ந்து வந்தவர். :33_unamused:

அந்தத்  துருக்கிக் காரனுக்கு,  இதுவரை.. எல்லாம் நல்ல படியாகவே நடந்து வந்தது.
அவர், ஒவ்வொரு வருடமும்....  கோடை  விடுமுறைக்கு,  
6 கிழமை துருக்கிக்கும்  சென்று வருவார். ✈️

இப்படி, விடுமுறைக்கு செல்லும் போது....
மனைவியின் சகோதரனிடம் (அதான்... மச்சான்)  :grin:
வீட்டை  பார்த்துக் கொள்ளும் படி செல்வது வழக்கம்.  
மச்சான்காரனும்... வீட்டில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி,
யன்னலை திறந்து... காத்துப் பிடிக்க விட்டு, நன்றாகவே... ✌🏿️ எல்லாவற்றையும் செய்து வந்தான். 

அந்த மச்சானுக்கு,  அக்கா வீட்டு வரவேற்பறையில்... உள்ள,
சோ(f)பா  கதிரைகள்.. கன  காலம் மாற்றப் படாமல்  அழுக்காக,
பழைய மொடல்களில்,   இருந்தது... பிடிக்கவே இல்லை. 👦🏿

அக்கா... துருக்கியால்... திரும்பி வரும் போது...
இன்ப அதிர்ச்சி... கொடுக்க நினைத்து.... 😍
அங்கு  இருந்த, சோ(f)பா எல்லாவற்றையும் தூக்கி எறிந்து  விட்டு,
நவீனமான புது,  சோ(f)பா வாங்கி, வரவேற்பறையை.. அழகு படுத்தி விட்டார்.     

இப்போ.... அக்காவும், புருசனும் விடுமுறை முடிந்து, வீட்டிற்கு வந்து பார்த்தால்...
எல்லாம்.. புதுசாய் இருக்கு, என்று....  சந்தோசப் படுறதை விட,

இரண்டு பேரும்.... மயங்கி விழுந்து விட்டார்கள். :shocked:

காரணம்.... அந்த பழைய சோபாவில் உள்ள, மெத்தைக்குள் தான்....
அவர் உழைத்து சேமித்த... 30 வருட  காசும் இருந்தது.
 :shocked:

ஜேர்மன்  வங்கியை நம்பாமல்,  சொந்த மச்சானுக்கு, உண்மை சொல்லாமல்...
உழைத்து,  வாழ்ந்தவரின்  கதி இப்படியாக.... முடிந்து விட்டது. 😢

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

 

ஜேர்மன் காரனை....  நம்பக் கூடாது, என்றும்  வாழ்ந்து வந்தவர். :33_unamused:

 

சொத்தும் சுகமும் வக்கேசனுக்கு அவர் பிறந்த இடத்துக்கு அடிக்கடி போய் வரும் சொகுசு  வசதியையும்   தந்த ஜேர்மனியையும் ஜேர்மனியரையும் நம்பகூடாது என்று வாழ்ந்த இவருக்கு தண்டனை கொடுக்க  இப்படி மச்சான்தான் இறைவன் பரிசளிப்பார் .,

பின்ன என்ன பில்கேட்சையா அனுப்பி வைப்பார்?

இந்த வகையில் பார்க்கபோனால் வாழ்வு தந்த நாடுகளுக்கு விசுவாசமாய் இருப்பதில் ஈழதமிழரை   அடிச்சுக்கொள்ள உலகதிலயே யாருமில்லை.

ஐரோப்பாவில் அண்ணன் ஒரு நாட்டிலும் தம்பி ஒரு நாட்டிலும் வாழ்ந்தாலும், தாம் வாழும் நாட்டை சொந்த சகோதரனே குறை சொன்னாலும் கோபபடுவார்கள்.

கால்பந்து போட்டிகளை டிவியில் பார்க்கும்போதுகூட தான் வாழும் நாட்டின் அணி வெல்லவேணும் எண்டு வெறி தனமாய் இருப்பார்கள்.

ஆனால் அவர்களைதான் அந்த நாடுகள் அள்ளியள்ளி திருப்பி அவர்கள் நாட்டுக்கே அனுப்பியது அதிகம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

ஐரோப்பாவில் அண்ணன் ஒரு நாட்டிலும் தம்பி ஒரு நாட்டிலும் வாழ்ந்தாலும், தாம் வாழும் நாட்டை சொந்த சகோதரனே குறை சொன்னாலும் கோபபடுவார்கள்.

லண்டனில் வாழும் நம்மவரை  இப்படி குத்தி காட்டிடக்கூடாது 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இப்போ.... அக்காவும், புருசனும் விடுமுறை முடிந்து, வீட்டிற்கு வந்து பார்த்தால்...
எல்லாம்.. புதுசாய் இருக்கு, என்று....  சந்தோசப் படுறதை விட,

இரண்டு பேரும்.... மயங்கி விழுந்து விட்டார்கள். :shocked:

தமிழ் சிறி, உங்கள் வேலையிடத்து நண்பன், „ இந்த ஷோபாவுக்குள் நான் பணத்தை மறைத்து வைக்கவில்லை” என்று ஒரு காகித்ததில் எழுதி ஷோபாவில் ஒட்டியிருந்தால் பிரச்சனை வந்திருக்காது🤪

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

 

ஜேர்மன்  வங்கியை நம்பாமல்,  சொந்த மச்சானுக்கு, உண்மை சொல்லாமல்...
உழைத்து,  வாழ்ந்தவரின்  கதி இப்படியாக.... முடிந்து விட்டது. 😢

அவரை குறை சொல்லக்கூடாது. நானும் அவர் மாதிரித்தான்.அவரில் இருந்து  கொஞ்சம் மாறுபடுகின்றேன். அதுக்காகத்தான் நான் எப்போதும் வங்கிகளிடம் உசாராய்  இருப்பேன். அதாவது நான்தான் அவர்களுக்கு குடுக்கிறமாதிரி வாழ்க்கையை அமைத்து கொண்டுள்ளேன்.....!   😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.