Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேனிஷ் கனேரியா குறித்து சோயப் அக்தர் - ”ஓர் இந்து என்பதால் பாகிஸ்தான் வீரர்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டார்”

Featured Replies

டேனிஷ் கனேரியா

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'Game on Hai' என்ற கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

டேனிஷ் கனேரியாவின் அபாரமான பந்துவீச்சுக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சோயப் அக்தர், 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெல்ல டேனிஷ்தான் காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், "ஒருவரை மதம் அல்லது இடம் சார்ந்தோ பாரபட்சம் காட்டும்போது எனக்கு கோபம் வரும். பாகிஸ்தானில் பிறந்த ஓர் இந்துவுக்கு தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை உள்ளது. இந்த இந்துதான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என, டேனிஷிடம் பாரபட்சம் காட்டிய சக வீரர்களை நான் கடிந்து கொண்டேன்" என்றார்.
 
டேனிஷ் தங்களுடன் உணவு சாப்பிடும்போதும் சரி, தங்களுடைய மேஜையிலிருந்து உணவை பகிரும்போதும் சரி அணியின் கேப்டன் புருவங்களை உயர்த்துவார் என்று சோயப் அக்தர் தெரிவித்தார்.
 

 

"சோயப் சொன்னது அனைத்தும் உண்மைதான்"

சோயப் அக்தரின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏ.என்.ஐ முகமையிடம் கருத்து தெரிவித்துள்ள டேனிஷ் கனேரியா, "சோயப் அக்தருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் சொன்னவை அனைத்தும் உண்மைதான். நான் இதுபற்றி அவரிடம் எதுவும் கூறியது கிடையாது. ஆனால், எனக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்," என்றார் அவர்

தான் இந்து என்பதால் சக பாகிஸ்தான் வீரர்கள் தன்னுடன் பேச மறுத்ததாக கூறும் அவர், விரைவில் அந்த விளையாட்டு வீரர்களின் பெயர்களை வெளியிட இருப்பதாகவும், அப்போது இதுகுறித்து பேச துணிச்சல் இல்லை, இப்போது அந்த துணிச்சல் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் யூனிஸ் கான், இன்ஸமாம் உல்-ஹக், மொகமத் யூசஃப் மற்றும் அக்தர் போன்றவர்கள் தான் இந்து என்று தெரிந்தும் தன்னிடம் நன்றாக பழகியதாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.

சூதாட்ட புகார் ஒன்றில் சிக்கி விளையாட விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் இருக்கும் கனேரியா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் உதவி கோரியுள்ளார். தன்னுடைய வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை என்றும், ஒரு கிரிக்கெட் வீரராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தததாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் விளையாடிய 2வது இந்து வீரர் டேனிஷ் கனேரியா என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சாதி, பாக்கிஸ்தானில் மதம்.

 

  • தொடங்கியவர்

 

எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, எனக்கு உதவ எவரும் முன்வரவில்லை- பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு

பாக்கிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தவேளை அவமானப்படுத்தப்பட்டதையும் புறக்கணிக்கப்பட்டதையும் சுழற்பந்து வீச்சாளர் டானிஸ் கனேரியா உறுதிசெய்துள்ளார். 

பாக்கிஸ்தான் அணிக்காக சுழற்பந்து டனிஸ்  கனேரியா விளையாடியவேளை அவர் இந்து என்பதால் சகவீரர்கள் அவரை புறக்கணித்தனர் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாக்கிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடிய இரண்டாவதுஇந்து வீரரரான டனிஸ் கனேரியா 61 டெஸ்ட்களில் 261 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார் என சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சொயிப் அக்தர் தெரிவித்துள்ளது 100 வீதம் உண்மையான விடயம் என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள டானிஸ் கனேரியா அதேவேளை எனக்கு முழு மனதுடன் ஆதரவு வழங்கிய வீரர்களிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் இந்த விடயத்தை அரசியல் மயப்படுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இன்று நான் சொயிப் அக்தரின் தொலைக்காட்சி பேட்டியை பார்த்தேன்,உலகிற்கு உண்மையை தெரிவித்தமைக்காக நான் அவரிற்கு தனிப்பட்ட ரீதியில் நன்றியை தெரிவித்தேன்,ஒரு கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் எனக்கு முழுமனதுடன் ஆதரவை வழங்கிய வீரர்களிற்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்,எனது மதம் என்ன என்பதைமறந்து ஆதரவளித்த ஊடகங்கள்,நேர்மையான கிரிக்கெட் நிர்வாகிகள் பாக்கிஸ்தான் மக்களிற்கு  எனது ஆதரவை தெரிவிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமூகத்தில் உள்ள சில சக்திகள் எதிர்த்தன,ஆனால் அவர்கள் எதிர்ப்பு என்னை நேசித்தவர்களின்  முன்னாள் நீடிக்கவில்லை,நான் எப்போதும் சாதகமான மனோநிலையுடன் இருந்துவந்துள்ளேன் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

danish_kaneria.jpg

இதேவேளை எனது வாழ்க்கை சிறந்ததாகயில்லை,எனது விவகாரங்களிற்கு தீர்வை காணுமாறு பாக்கிஸ்;தானை சேர்ந்த பலரையும் உலகநாடுகளை சேர்ந்த பலரையும் கேட்டுள்ளேன் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானின் பல கிரிக்கெட்வீரர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டபோதிலும் எனது பிரச்சினைகளிற்கு யாரும் உதவவில்லை,எனவும் தெரிவித்துள்ள கனேரியாஒரு கிரிக்கெட்வீரராக நான்  என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கினேன் அது குறித்து பெருமிதம் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் மக்கள் உதவுவார்கள் என்றநம்பிக்கையுடன் உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் உட்பட அந்த நாட்டின் கிரிக்கெட்ஜாம்பவான்கள் அனைவரினதும் ஆதரவும் எனக்கு தேவை என டானிஸ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்தவேண்டாம் என தனிப்பட்ட ரீதியில்கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/71931

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.