Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி

அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது.
எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்தகாலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதன் ஊடாக சுபீட்சத்தை அடையும் அபிலாi~யுடனேயே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் புத்தாண்டில் தடம் பதிக்கின்றோம். அத்தோடு தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பலமானதொரு பொருளாதாரம் நாட்டுக்கு தேவையாகும். அதுவே சுயாதீனத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும்.
அதேபோன்று ஒழுக்கப் பண்பாடான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என்பதையும் நான் அறிவேன். அத்தகையதொரு சமூகத்திலேயே தற்கால மற்றும் எதிர்கால இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். வளர்ந்தவர்கள் என்ற வகையில் நாமும், பிறந்துள்ள இப்புத்தாண்டில் அந்த இலக்கினை நோக்கிப் பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக் கொள்வோம்.
நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே இந்த புதிய அரசாங்கமாகும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப்போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும்.
புத்தாண்டு பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது, புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ செயற்திட்டத்தை இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும்.
மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ
.-(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/அனைத்து-இலங்கையர்களுக்க/

  • கருத்துக்கள உறவுகள்

5-B81-FD54-C503-46-AB-98-D5-D2-F458-DAC9

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பெளத்த சிங்களவர்களுக்கும் சிங்கள தேசத்துக்கும் ஒரு மாற்றத்துக்காக.. உண்மையாக உழைக்கிறார் என்றே தெரிகிறது.

அரச நிறுவனங்களில் இருந்த அசமந்தங்களை நீக்கவும் அனாவசிய செலவுகளை குறைக்கவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்படுத்துவதாகத் தெரிகிறது.

அரச ஊழியர்கள் ஒருவித கிலியுடன் கடமை உணர்வு வலிந்து கொண்டு வரப்பட்டவர்களாக செயற்படுவதாக சொறீலங்காவில் இருந்து வரும் மக்களின் செய்திகள் சொல்கின்றன. 

Edited by nedukkalapoovan

16 hours ago, கிருபன் said:

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்த கொள்ளைக்காரர்களும் தன்ர பிள்ளைகளுக்கும் வாழ்த்து சொல்றார்!

11 hours ago, Kavi arunasalam said:

5-B81-FD54-C503-46-AB-98-D5-D2-F458-DAC9

சூப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

கோத்தா பெளத்த சிங்களவர்களுக்கும் சிங்கள தேசத்துக்கும் ஒரு மாற்றத்துக்காக.. உண்மையாக உழைக்கிறார் என்றே தெரிகிறது.

அரச நிறுவனங்களில் இருந்த அசமந்தங்களை நீக்கவும் அனாவசிய செலவுகளை குறைக்கவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்படுத்துவதாகத் தெரிகிறது.

அரச ஊழியர்கள் ஒருவித கிலியுடன் கடமை உணர்வு வலிந்து கொண்டு வரப்பட்டவர்களாக செயற்படுவதாக சொறீலங்காவில் இருந்து வரும் மக்களின் செய்திகள் சொல்கின்றன. 

இவர் அரசியலிலிருந்து விலகும் போது, பொதுத் தேர்தலின் பின்  பாப்போம் உண்மைதானா என்று.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.