Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழையா விருந்தாளியான சந்திரிகா; குழப்பத்தால் கூட்டம் இரத்து

Featured Replies

image_6062d2869e.jpg

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் குழப்ப நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில், சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.

சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அழய-வரநதளயன-சநதரக-கழபபததல-கடடம-இரதத/150-243691

  • தொடங்கியவர்

அப்பா - கட்சியை உருவாக்கியவர்
அம்மா- உலகின் முதலாவது பெண் பிரதமர்
மாமா இரத்தவத்தை   - ஒரு போர்க்குற்றவாளி

இன்று கட்சியிலேயே இருக்க முடியாத நிலை சந்திரிக்கா அவர்களுக்கு 🤨

 

  • தொடங்கியவர்

''என் தந்தையின் ஜனன தின நிகழ்விற்கு எனக்கு அழைப்பில்லை : சந்திரிகா என்றாலே அஞ்சுகின்றனர் "

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க , சந்திரிகா என்று கூறினாலே அனைவரும் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 121 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலை காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது சகோதரி சுனெத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் இன்று காலை 8.00 மணியளவில் வருகை தந்து பண்டாரநாயக்கவின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். 

எனினும் இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஜனன தின அனுஷ்டானங்களை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனவே அதற்கு முன்னர் வருகை தந்திருக்கிறீர்களே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

' எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. எனது தந்தையின் ஜனன தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் எனக்கு அது தொடர்பில் அறிவிக்கவில்லை.

எனவே வழமை போன்று நான் எனது சகோதரியுடன் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினேன். சந்திரிகா என்றால் அனைவரும் அஞ்சுகின்றனர். அது நோயாகும். அந்த நோய்க்கு மருந்து கிடையாது' என்று கூறினார்.

https://www.virakesari.lk/article/72824

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 10:39 AM, ampanai said:

அப்பா - கட்சியை உருவாக்கியவர்
அம்மா- உலகின் முதலாவது பெண் பிரதமர்
மாமா இரத்தவத்தை   - ஒரு போர்க்குற்றவாளி

இன்று கட்சியிலேயே இருக்க முடியாத நிலை சந்திரிக்கா அவர்களுக்கு 🤨

 

 வாசிக்க நன்றாக இருப்பினும் இவைகள் அனைத்தும் எமது இனத்திற்கு பயனற்றவை என்பதுதான் உண்மை.

On 1/7/2020 at 8:38 PM, ampanai said:

அழையா விருந்தாளியான சந்திரிகா; குழப்பத்தால் கூட்டம் இரத்து

அங்கை ஏதாவது உற்சாக பானம் கிடைக்கும் என்டு வந்திருப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.