Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prabagaran-720x450.jpg

புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழிதவறி சென்றதால்தான் அவர் மீதான அ.தி.மு.க.வின் அனுதாபம் குறைந்ததாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது என்றும் ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது எனவும் விமர்சித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், பிரபாகரன் ஒரு தீவிரவாதி என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

துரைமுருகனுக்கு பதில் அளித்த செம்மலை, பிரபாகரன் நல்ல வழியில் சென்றபோது, அவரை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள் என்றும், ஆனால் அவர் வழி தவறியபோது அ.தி.மு.க.வுக்கு அவர் மீதான அனுதாபம் குறைந்தது எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்துப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மத்தியில் 12 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தராமல் எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும் வரை, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதன்போது குறிப்பிட்டார்.

http://athavannews.com/புலிகளின்-தலைவர்-பிரபாகர/

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இவை எல்லாம் சாதாரணமப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201902

அநேகமாக என்ர பேரப்புள்ளைகளின் எள்ளு பேரன்களும் இப்படியான கதை வசனங்களை கேட்டுதான் வளரும் என்டு நினைக்குறன் ..

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

roflphotos-dot-com-photo-comments-201902

அநேகமாக என்ர பேரப்புள்ளைகளின் எள்ளு பேரன்களும் இப்படியான கதை வசனங்களை கேட்டுதான் வளரும் என்டு நினைக்குறன் ..

கவுண்டர் செந்திலின் பல நகைச்சுவைகள்,  மிகப் பெரிய விடயங்களையும் மிகச் சாதாரண ஓரிருசொற்களில் நயம்பட நறுக்கென உரைப்பவை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கவுண்டர் செந்திலின் பல நகைச்சுவைகள்,  மிகப் பெரிய விடயங்களையும் மிகச் சாதாரண ஓரிருசொற்களில் நயம்பட நறுக்கென உரைப்பவை. 

101 % உண்மை.. 😊

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுச் சட்டசபையில் கழிசடைகள் எல்லாம் தேசியத்தலைவரைக் குறிப்பிட்டு விவாதம் செய்யுதுகள்.

தனது மண் தனது இனம் தனது மொழி இவற்றுக்காக எதுவித விட்டுக்கொடுப்பும் இல்லாது இறுதிவரை போர்க்களத்தில் நின்று போராடியது மட்டுமல்ல, போர்க்களத்தில் தான் மட்டும் சாவடைந்தால், சாவடைந்தாலும் பறுவாயில்லை தனது குடும்பத்துக்கு நிறையச் சொத்துக்களை சுவிஸ் வங்கியிலும் புலம்பெயர் தேசங்களிலும் பனாமாவிலும் சேர்த்துவைச்சுட்டுப் போயிட்டார் எனச் சொல்லுவார்கள் என்பதால் குடும்பத்தில் ஒருவர்கூட மிச்சமிருக்காது போன ஒரு பெருந்தலைவனை விமர்சனம் செய்கிறார்கள். குதா ஊழலிலும் வீராணம் ஊழலிலும் மலசலகூடம் கட்டினாலோ அல்லது சுடலைக்கு மதில் கட்டினாலோ வீதி போட்டாலொ எல்லாத்திலும் ஊழல் செய்து நாங்கள் எந்தக்கட்சியாக இருந்தாலும் ஊழல் செய்வதில் ஒற்றுமையாக இருப்போம் ஆனால் பாசாங்காகச் சண்டைபோடுவோம் எனக்கூறும் மோசமான கழிசடைகள் இப்போது தேசியத்தலைவரை இழித்துப்பேசி அதனை சட்டசபைக்குறிப்பிலும் சேர்த்திருக்கிறார்கள்.

எட கேவலங்கெட்ட ஈழத்தமிழா இயக்கம் நடத்துகிறம் ம... புடுங்கிறம் என புலம்பெயர்தேசங்களில் பொங்கல் திண்டுகொண்டிருக்கும் அமைப்புகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இதற்கு ஒரு கண்டண அறிக்கைகூட வெளியிட வக்கணை இல்லை இவர்கள் எல்லாம் வானமேறி வைகுண்டம் காட்டப்போகிறார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.