Jump to content

இலங்கையில் கடலரிப்பால் மறையும் நிலங்கள்: தவிக்கும் கடலோர மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக
 
  •  
கடலரிப்பால் மறையும் நிலங்கள்

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஒலுவில் தொடங்கி நிந்தவூர் வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாக அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட பைகளை அடுக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரைப் பிரதேசங்களில் இவ்வாறு கடலரிப்பு தீவிரமடைவதற்கு, ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடலரிப்பால் மறையும் நிலங்கள்

புவியியல் பேராசிரியர் கலீல் கருத்து

ஆனால், சுனாமி ஏற்படுத்திய அதிர்வினால் புவித் தட்டுக்களில் ஏற்பட்ட இடைவெளிகளின் காரணமாக அலைகளின் வேகம் அதிகரித்துள்ளதாகவும், இந்நிலைமையால் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் பிபிசி தமிழுக்குத் தெரிவித்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் அமைந்துள்ளது கடலரிப்பை இன்னும் ஊக்கப்படுத்தியுள்ளதாக கூறினார்.

"அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 4,431 சதுர கிலோமீட்டர். இதில் கரையோரப் பிரதேசம் 1800 சதுர கிலோ மீட்டர்களாகும். கடற்கரையோரங்களில் இருக்கும் கனிம வளங்கள் தொடரச்சியாக அகழப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதோடு, இங்குள்ள கண்டல் தாவரங்களும் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன. ஜனத்தொகை அதிகரிப்பு மற்றும் மானிட நடவடிக்கைகள் இதற்கு பிரதான காரணங்களாகும். இதனால்தான் இங்கு கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது. பிறகு சுனாமிக்குப் பின்னர் இது இன்னும் தீவிரமடைந்தது" என்கிறார் அவர்.

"ஒலுவில் கடற்கரை வலயம் முருகைக் கற்கள் மற்றும் பாறைகளைக் கொண்ட பகுதியல்ல. இது சாய்வானதொரு பிரதேசமாகும். எவ்வாறாயினும், ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்டமை காரணமாகவே கடலரிப்பு ஏற்பட்டது என்கிற குற்றச்சாட்டை முழுவதுமாக ஏற்றுகொள்ள முடியாது" என்றும் பேராசிரியர் கலீல் கூறினார்.

புவியியல் பேராசிரியர் கலீல் Image caption புவியியல் பேராசிரியர் கலீல்

"கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் மண் அகழ்வு நடவடிக்கைகளும் அதிகரிக்கின்றன. கடற்கரையை அண்டிய இடங்களில் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படுகின்றமையினால் அங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. இவை போன்ற நடவடிக்கைகளால்தான் கடுமையான கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது.

2006ஆம் ஆண்டிலிருந்து பார்த்தோமானால், இந்தப் பிராந்தியத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 25 மீட்டர் நிலப்பகுதி கடலரிப்புக்குள்ளாகி வந்தது. ஆனால், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 60 முதல் 90 மீட்டர் நிலப்பரப்பு ஒவ்வொரு ஆண்டும் கடலரிப்பினால் பறிபோனது.

வன்மையான மண் கொண்ட நிலம் இல்லாமலானதே இவ்வாறான கடலரிப்புக்கு முக்கிய காரணமாகும். மேலும், உலக காலநிலை மற்றும் கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் கடலரிப்பை தீவிரப்படுத்தும் ஏனைய காரணிகளாக அமைந்துள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.

"கடலரிப்புக்கு நிரந்தர தீர்வினை காண வேண்டுமானால், கடற்கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்களை வளர்க்கும் நடவடிக்கையை நாம் ஆரம்பிக்க வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் பனை மரங்கள் மற்றும் மூங்கில் தாவரத்தை வளர்க்கலாம். இவை தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்".

"பேருவளை, மொரட்டுவ மற்றும் பாணந்துறைப் பிரதேசங்களும் இவ்வாறு கடலரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களில் பெரிய பாராங்கற்களை இட்டதன் மூலம் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளின் நிதியுதவி இதற்காகப் பயன்படுத்தப்பட்டன".

கடலரிப்பால் மறையும் நிலங்கள்

"ஆனால், மிக நீண்ட காலமாக இந்தப் பகுதிகளில் யுத்தம் இடம்பெற்று வந்தமையினால், அப்போது அபிவிருத்திகள் இடம்பெறாமல் அம்பாறை மாவட்டம் கைவிடப்பட்டிருந்தது. அதன்போது கடலரிப்பை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆரம்ப நிலையில் கடலரிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும், அது தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளது" என்றும் பேராசிரியர் கலீல் சுட்டிக்காட்டினார்.

துறைமுகமே பிரதான காரணம்: விரிவுரையாளர் நிஜாமிர்

ஆனால், ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரே இந்தப் பிராந்தியத்தில் தீவிர கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் கே. நிஜாமிர். தாம் பெற்றுக் கொண்ட தொழில்நுட்ப ரீதியிலான தரவுகள் இதனை நிரூபிப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் சுட்டிக்காட்டினார்.

"கடலரித்தல் என்பது கடற்கரையோரங்களில் ஏற்படும் சாதாரணமானதொரு இயற்கை நிகழ்வாகும். ஆனால் இது சுழற்சி முறையில் நடப்பதால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

கடலரிப்பால் மறையும் நிலங்கள்

உதாரணமாக, ஓரிடத்தில் அலைகளால் அரிக்கப்படும் மணல், இன்னோரிடத்தில் படியும். பின்னர் காற்றின் திசையும் கடலின் நீரோட்டமும் மாறும் போது, மணல் படிந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலிருக்கும் மணல் - முன்னர் கடலரிப்பு ஏற்பட்ட இடத்தில் படியும். இதன்போது, கடலரிப்பினால் ஏற்பட்ட பாதிப்பு சீராகி விடும். இது இயற்கையாக மாறி மாறி நடைபெறும்.

ஆனால், இந்த இயற்கை செயல்முறையில் அசாதாரண நிகழ்வுகள் அல்லது குளறுபடிகள் ஏற்படுமாயின், அரித்தலும் படிதலும் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். இதுதான் ஒலுவிலிலும், அதன் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒலுவில் துறைமுக நுழைவாயிலில் இரண்டு அலைத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அலைகளால் அரிக்கப்படும் மணல் நகர்த்தப்படும் போது, அதனை துறைமுக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள அலைத் தடுப்புகள் தடுக்கின்றன. இதனால்தான் துறைமுக நுழைவாயில் பகுதியில் அதிக மணல் சேர்கிறது.

விரிவுரையாளர் நிஜாமிர் Image caption விரிவுரையாளர் நிஜாமிர்

ஒவ்வொரு கால ரீதியாகவும் செய்மதி (செயற்கைக் கோள்) படங்களை அவதானிக்கும்போது, ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அதன் வடக்குப் பிரதேசங்களிலுள்ள நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் அரித்தலும், துறைமுகத்தின் தென் பகுதிகளில் மணல் படிதலும் அதிகரித்துள்ளன.

அந்த வகையில், இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நில உருமாற்றத்துக்கு, ஒலுவில் துறைமுக நிர்மாணம் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் டென்மார்க் இல் உள்ள ஆல்பொர்க் (Aalborg) பல்கலைக்கழகத்தினால் மூன்றாந்தரப்பு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டுள்ள கடலரிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த கடலரிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீர்வுகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

அவற்றில் முதலாவது; மீன்முள் அமைப்பில் கடற்கரையோரத்தில் ஒரு கடடுமானத்தை மேற்கொள்வதாகும். அதாவது கடற்கரையோரத்துக்கு சமாந்தரமாக ஒரு கட்டுமானத்தினை செய்து, அதிலிருந்து குறுக்காக மேலும் சில கட்டுமானங்களை மேற்கொள்வதாகும். இதன்போது மணலை அலைகள் அரித்து வேறோரிடத்தில் படிய வைக்கும் செயன்முறை தடுக்கப்படும்.

இரண்டாவது செயன்முறை; கடலரிப்பினால் அலைகள் எடுத்துச் செல்லும் மணல் எங்கு படிகிறதோ, அந்த மணலை கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிக் கொண்டு வந்து, மீண்டும் அரிக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதாகும்.

கடலரிப்பால் மறையும் நிலங்கள்

மூன்றாவது முறைமை; அலைத் தடுப்புகளை உருவாக்குவதாகும். ஒலுவில் பிரதேசத்தில் அலைத் தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளபோதும் அவை உரிய பலனைத் தரவில்லை. அலைத்தடுப்புகள் அமைக்கும் போது அவை உரிய அளவிலும் உரிய இடைவெளிகளிலும் இருத்தல் வேண்டும்.

தென் பகுதியில் கிரிந்த மீன்பிடி துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், ஒலுவில் துறைமுக நுழைவாயிலில் அதிக மணல் படிவதைப் போன்று, அங்கும் மணல் படியத் தொடங்கியது. இதற்குத் தீர்வு காணும் நடவடிக்கைக்காக, குறித்த துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு செலவாகிய நிதியைப் போன்று ஐந்து மடங்கு நிதி செலவிடப்பட்டது. இப்போது ஓரளவு தீர்வும் கிடைத்துள்ளது" என்றும் விரிவுரையாளர் நிஜாமிர் தெரிவித்தார்.

நிந்தவூரில் மட்டும் 148 ஏக்கர்கள் மூழ்கியுள்ளன

இவ்வாறான நிலையில் கடலரிப்பு காரணமாக நிந்தவூர் பிரதேசத்தில் 148 ஏக்கர் தனியார் காணிகள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்ஸார் பிபிசி தமிழுக்கு கூறினார்.

அவற்றில் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் என்றும் 28 ஏக்கர் தென்னை மரங்கள் இருந்த காணிகள் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சுனாமி தாக்கத்தின் பின்னர் நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், தமது அவதானிப்பின் படி, ஒலுவில் துறைமுக வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

"நிலத்தினுள் கடல் உட்புகுந்தமை காரணமாக அங்குள்ள நெற்செய்கைக் காணிகளினுடைய மண்ணின் உவர்த்தன்மை மிகவும் அதிகரித்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பல ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது".

நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்ஸார் Image caption நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்ஸார்

"எவ்வாறாயினும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட ஒலுவில் பிரதேசத்துக்கே அரசாங்கத்தினால் அதிகளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் அமையப் பெற்றுள்ளமை காரணமாக, அங்கு பாதிக்கப்பட்டோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் நிலம் இழந்தவர்கள், கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் கிடைத்துள்ளன. ஆனால், நிந்தவூர் பிரதேசம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட போதும் உரிய அளவு அவதானம் பெறவில்லை.

இந்த நிலையில்தான் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேசத்தை கவனத்துக்குட்படுத்தும் நடவடிக்கைகளை கடந்த வருடம் தொடக்கம் ஆரம்பித்துள்ளோம். பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அழைத்து, இங்கு ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் ஆய்வு ஒன்றைச் செய்தோம்.

இதேவேளை, கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் செய்துள்ளோம்.

எவ்வாறாயினும் கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையினை கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்து தருவதாக கூறியுள்ளது. ஆனால், அதற்கான நிதியினைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கடலரிப்பால் மறையும் நிலங்கள்

தற்போது கடலரிப்பின் தீவிரத்தைக் குறைக்கும் தற்காலிக நடவடிக்கையாக மணல் பைகள் கரையோரங்களில் போடப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு திணைக்களம்தான் இதனைச் செய்துள்ளது. கடலரிப்பைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இந்த முறையினையும் பின்பற்றுகின்றனர். இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், மணல் நிரப்புவதற்கான ஒரு தொகைப் பைகளைக் கொள்வனவு செய்வதற்கு தனிப்பட்ட ரீதியில் உதவிகளை வழங்கினார்.

இதேவேளை நிலையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, கரையோரங்களில் பாராங்கற்களை போடுவதற்கான திட்டமொன்றினைத் தயாரித்து வழங்குமாறும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் கேட்டுள்ளோம்" என்றும் பிரதேச செயலாளர் அன்ஸார் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பைத் தடுப்பதற்காக அங்கு கரையோரங்களில் பாரிய பாறாங்கற்கள் இடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் காரணமாக கடலரிப்பின் தீவிரம் அங்கு கணிசமானளவு குறைந்துள்ளது.

ஆனால், நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகத் தீவிமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51078058

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பிரதேசங்களுக்கு அரசாங்கம் தானாக எதுவும் செய்யப்போவதில்லை. தங்கள் நிலங்களை அழிவுக்கு முன்னரே காக்கவேண்டும் என்ற எண்ணமும் எம்மவர்களிடம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.