Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’

 

 

“கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (23) கருத்துரைத்த வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

“நல்லாட்சிமூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்துநிறுத்தியுள்ளது.தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுதிட்டங்களும் முடங்கியுள்ளன.

குறிப்பாக கண்டி அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களில் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது.நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும்.

இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கிவருகின்றனர்.

ஆட்சிமாறலாம் ஆனால், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டுவருகின்றது.

படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல், வெளியில் நல்லமுகத்தை காட்டிக்கொண்டு அடிமட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருகின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைகூட இதன் ஓர் அங்கமாகும்.” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/படபபத-தவரம-இடபபத-சவன-கவல/175-244456

11 hours ago, nunavilan said:

’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’

இப்ப ’படிப்பது பைபிள், இடிப்பது சிவன் கோவில்’ என்டு தான் சொல்லவேணும்.

போன சிவராத்திரிக்கு மன்னார்ல ஒரு கடையர் கூட்டம் இதை தான் செய்துது. அடுத்த சிவராத்திரி வந்திட்டு. காடையர் கூட்டம் இன்னமும் தண்டிக்கபடல்ல.

4 hours ago, Rajesh said:

இப்ப ’படிப்பது பைபிள், இடிப்பது சிவன் கோவில்’ என்டு தான் சொல்லவேணும்.

போன சிவராத்திரிக்கு மன்னார்ல ஒரு கடையர் கூட்டம் இதை தான் செய்துது. அடுத்த சிவராத்திரி வந்திட்டு. காடையர் கூட்டம் இன்னமும் தண்டிக்கபடல்ல.

இங்குதான் பிரதேச வாதம் வருகின்றது। அந்த இடம் கத்தோலிக்க மக்கள் உள்ள இடம்। இந்துக்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் எப்படி கோவிலை கடட முடியும்। அதுவும் அங்குள்ள இந்துக்களால் ஒரு பிரச்சினையும் இல்லை। அங்கு வந்து குடியேறியவர்களால்தான் பிரச்சினையே। வேணுமெண்டால் உங்களுக்கு அவர்களின் பெயரையும் இயக்கத்தின் பெயரையும் தருகிறேன்। சிலர் இதில் எழுதுவதை விரும்பாததால் தவிர்த்திருக்கிறேன்। அப்படி என்றால்  யாழில் எத்தனை கிறித்தவ ஆலயங்கள் காடையர்களால்  தாக்கப்பட்டிருக்கிறது। அதை எல்லாம் இலகுவாக மறந்து  விடுவீர்கள்। அண்மையில் அரியாலையில் கூட தாக்குதல் நடத்தப்பட்ட்து। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.