Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் தலைவர் ஹக்கீமுக்கு அரசியல் அச்சுறுத்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி
.

.
2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் செய்திருந்தார். காலை மாவனல்லவில் இருந்து விடைபெறும்போது இறுதிச் சந்திபென நான் உணரவில்லை,
.
தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களின் வலது கையும் கைவாழும் பிரிந்தபோது என்னைவிட யாரும் அதிகமாக கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியிலாவது ஒருவருக்கு ஒருவர்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தோழர் தலைவர் அஸ்ரப்பின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். இன்றைய நெருக்கடி சேதி முதலில் எனக்கு இச்சம்பவத்தைத்தான் நினைவு படுத்தியது.
.
ஒருபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் வன்முறையை ஆதரிப்பவரல்ல. ஒரு தலைவர் என்கிற முறையில் அவர் எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புகிறவர். அவர்மீது அவதூறுகூறி அரசியல் பழிவாங்கும் முயற்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த தருணத்தில் தோழர் பசீர், அன்பர் சேகு இசத்தின், மதிப்புக்குரிய அதாவுல்லா உட்பட தோழர் அஸ்ரப்பின் வழிவந்த அனைவரும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இளைக்கப்படும் அரசியல் பழிவாங்கலுக்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
.
இறுதியில் தர்மம் வெற்றி பெறும்.

 

.

1W9IAlmT_400x400.jpg

.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2020 at 10:53 AM, poet said:

செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

தனக்கு தனக்கு என வரும் போதுதான் சிலருக்கு தமிழனையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென யோசனை வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2020 at 12:23 AM, poet said:

 

எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி
.

.
2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் செய்திருந்தார். காலை மாவனல்லவில் இருந்து விடைபெறும்போது இறுதிச் சந்திபென நான் உணரவில்லை,
.
தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களின் வலது கையும் கைவாழும் பிரிந்தபோது என்னைவிட யாரும் அதிகமாக கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியிலாவது ஒருவருக்கு ஒருவர்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தோழர் தலைவர் அஸ்ரப்பின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். இன்றைய நெருக்கடி சேதி முதலில் எனக்கு இச்சம்பவத்தைத்தான் நினைவு படுத்தியது.
.
ஒருபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் வன்முறையை ஆதரிப்பவரல்ல. ஒரு தலைவர் என்கிற முறையில் அவர் எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புகிறவர். அவர்மீது அவதூறுகூறி அரசியல் பழிவாங்கும் முயற்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த தருணத்தில் தோழர் பசீர், அன்பர் சேகு இசத்தின், மதிப்புக்குரிய அதாவுல்லா உட்பட தோழர் அஸ்ரப்பின் வழிவந்த அனைவரும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இளைக்கப்படும் அரசியல் பழிவாங்கலுக்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். செல்வநாயகம் அவர்களது மரபையும் முன் உதாரணங்களையும் பின்பற்றி சம்பந்தர் ஐயாவும் கூட்டமைப்பும் தோழர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு துணை நிற்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
.
இறுதியில் தர்மம் வெற்றி பெறும்.

 

.

1W9IAlmT_400x400.jpg

.

தர்மத்தின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறதா ? 

மேலே உங்களால் குறிப்பிடப் பட்ட ஆட்கள் எல்லோரும் தர்மத்தின் வழி நின்றுதான் செயற்படுகிறார்களா ?

அல்லது

இறுதியில் தர்மம் வெல்லும் போது அதை பார்க்க தமிழ் இனம் என்கின்ற ஒன்று இலங்கையில் இருக்குமா ?

(எல்லாம் ஒரு சலிப்பில் வந்த கேள்விகள். கோவிக்காதீர்கள் கவிஞரே)

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

தர்மத்தின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறதா ? 

மேலே உங்களால் குறிப்பிடப் பட்ட ஆட்கள் எல்லோரும் தர்மத்தின் வழி நின்றுதான் செயற்படுகிறார்களா ?

அல்லது

இறுதியில் தர்மம் வெல்லும் போது அதை பார்க்க தமிழ் இனம் என்கின்ற ஒன்று இலங்கையில் இருக்குமா ?

(எல்லாம் ஒரு சலிப்பில் வந்த கேள்விகள். கோவிக்காதீர்கள் கவிஞரே)

 

இதில் என்ன கோபிக்க இருக்கிறது நியாமான கேள்விகள் தனக்கு எதிராக கைகள் திரும்பும் போதுதான்  தான் நல்லவன் எனக் காட்டமுனைகிறார்கள் இதில் ஹக்கீம் மட்டும் அல்ல சம்பந்தரும் பாராளுமன்றத்திலே தனது பங்களாவையும்  ஓடின கார் தூரத்தையும் சொல்லி விளக்குறார் என்றால் பாருங்கோவன் மக்கள் பிரச்சினைகள் எல்லாம் கையோடு கம்மாரிசு தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.