Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது மத்திய அரசு கைவிரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது மத்திய அரசு கைவிரிப்பு

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது மத்திய அரசு கைவிரிப்பு

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளதாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியிடபட்டு இருந்தது.

அதுபோல் இன்று பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறி இருந்தார்.இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை மந்திரி நித்தியானந்தா ராய் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என பதிலளித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-தமிழர்களுக்கு-இரட/

"அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என பதிலளித்தார்."

சட்டத்தை மாற்றலாம் ... மனம் இருந்தால் இடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-720x450.jpg

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க ஒப்பந்தம் செய்யும் எண்ணம் இல்லை – மத்திய அரசு

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான எந்த ஒப்பந்தத்தையும் அந்த நாட்டு அரசுடன் மேற்கொள்ளும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை ஒப்பந்தம் தொடா்பாக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் என். கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை)  எழுத்துப் பூா்வமாக கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த ராய் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  “ இந்திய அரசியல் சாசனத்தின் 9-ஆவது பிரிவின் படி,  ‘குடியுரிமைச் சட்டம் 1955’ -இன் 9 -ஆவது பிரிவு ஆகியவை இரட்டை க் குடியுரிமை வழங்க அனுமதிக்காது.

இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த இலங்கைத் தமிழா்கள் தொடா்பான பதிவுகள்  எதுவும் பராமரிக்கப்படவில்லை. 2006 வரை இலங்கையிலிருந்து வந்த 4 இலட்சத்து 61 ஆயிரத்து 639 தமிழா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

2003,  அக்டோபா் 7-இல் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி இலங்கையில் 1964 அக்டோபா் வரை இருந்த இந்திய வம்சாவளித் தமிழா்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

http://athavannews.com/இலங்கை-தமிழர்களுக்கு-இர-2/

நல்ல விடயம்..... இப்படியே  எல்லாரும் வெளி நாடு சென்றால் தாயகதில் யார் இருப்பது .,.???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.