Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலத்தீவு அருகே குண்டுகளுடன் வந்த படகு மூழ்கடிப்பு: 5 பேர் கைது-விடுதலைப் புலிகளா?

Featured Replies

கொழும்பு: விடுதலைப் புலிகளின் படகை மாலத்தீவு கடலோரப் பாதுகாப்புப் படையினர் சுட்டு மூழ்கடித்தனர். இருப்பினும் அதில் வந்த ஒரு நபர் மலையாளத்தில் பேசியதால் அவர்கள் உண்மையில் விடுதலைப் புலிகள்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அகமது ஷகீது கூறுகையில்,

மாலத்தீவு கடல் எல்லைக்குள் வந்த அன்னிய படகை எங்கள் கடற்படை சுட்டு மூழ்கடித்தது. அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், படகில் இருந்த ஐந்து பேரில் ஒருவர் தானாக முன்வந்து மாலத்தீவு படையினரிடம் சரணைடந்தார்.

அவர் கூறுகையில், மற்ற நான்கு பேரும் தனது படகை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி ஏறியாதகவும் துப்பாக்கிகள், குண்டுகளை அவர்கள் வைத்திருந்தனர் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அந்த நபர் மலையாளத்தில் ேபசுவதால் மாலத்தீவு அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். எனவே பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 1988ம் ஆண்டு இலங்கையைச் ேசர்ந்த ஒரு போராளி அமைப்பு மாலத்தீவில் புரட்சியில் ஈடுபட்டது.

ஆனால் இந்திய விமானப் படையும் கடற்படையும் அங்கு விரைந்து போராளி அமைப்பைச் சேர்ந்தவர்களை மாலத்தீவை விட்டு வெளிேயற்றியது நினைவிருக்கலாம். http://thatstamil.oneindia.in/news/2007/05/17/ltte.html

கடந்த 1988ம் ஆண்டு இலங்கையைச் ேசர்ந்த ஒரு போராளி அமைப்பு மாலத்தீவில் புரட்சியில் ஈடுபட்டது.

ஆனால் இந்திய விமானப் படையும் கடற்படையும் அங்கு விரைந்து போராளி அமைப்பைச் சேர்ந்தவர்களை மாலத்தீவை விட்டு வெளிேயற்றியது நினைவிருக்கலாம்.

இதற்கு யார் காரணம் றோவே காரணம் புளட் அமைப்பை துத்துகுடி துறை முகத்திலிருந்து பாதுகாப்பாக கூட்டி சென்று வழியனுப்பி வைத்த இந்திய கடற்படை கப்பலே அவர்களை கைது செய்தது.இதுதான் சரியில்லாத தலமை எந்த போராட்ட குழுவுக்கும் சரிவராது என்பது புளட் அமைப்புக்கு இது சாலப்பொருந்தும் இதை இப்படி மாற்றினால் இன்னும் சிறப்பு றோவின் சதிவலையை இந்திய கடற்படையும் விமானப்படையும் சேர்ந்து முறியடித்தது என

சிங்கக்கொடியை ஏற்றிவாறு சென்ற இழுவைப் படகு மாலைதீவுக் கடற்பரப்பில் மூழ்கடிப்பு.

மாலைதீவு தென்கடற் பிரதேசத்தில் பயணித்த இழுவைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சிறீலங்கா கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாலைதீவு தென் கடற்கரை ஓரத்தில் சென்றுகொண்டிருந்த இழுவைப் படகை வழிமறித்த மாலைதீவு கரையோரக் காவல் கடற்படையினர் 12 மணி நேரம் இழுவைப் படகை முற்றுகைக்குள் வைத்துள்ளனர்.

இதன்பின்னர் இழுவைப் படகை மாலைதீவின் கடலோரக் காவல்படையினர் பீரங்கிவேட்டுக்களைத் தீர்த்து மூழ்கடித்ததோடு படகில் இருந்து ஜவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தென்னிந்தியாவைச் சேர்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் மலையாள மொழி பேசுகின்றார் எனவும் மலைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஐவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அகமட் அகமட் ஹெசின் தனது கூற்றை வாபஸ் பெற்றுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரின் உரை தமிழ் மொழி போன்று இருந்ததால் முதல் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட நேர்ந்ததாகவும் மாலைதீவு தலைமைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தமது அமைப்பு எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவில் கைதான நபர் மலையாளத்தில்தான் பேசினார்: அரசாங்க பேச்சாளர் தகவல்- புலிகளும் மறுப்பு

[வியாழக்கிழமை, 17 மே 2007, 20:18 ஈழம்] [ப.தயாளினி]

மாலைதீவில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலிலிருந்து கைது செய்யப்பட்ட நபர் மலையாளத்தில்தான் பேசினார். அவர் பேசியது தமிழ் அல்ல என்று மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேபோல் கைது செய்யப்பட்ட நபர்கள் எமது இயக்கத்தினர் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் கூறியுள்ளார்.

மாலைதீவு கடற்பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான கப்பலின் நடமாட்டத்தை அவதானித்த மாலைதீவு கடற்படையினர் அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

எனினும் அந்த உத்தரவை மீறி அக்கப்பல் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்த காரணத்தால் உடனடியாக மாலைதீவு கடற்படையினர் அதன்மீது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அக்கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

"கப்பலை மூழ்கடித்து விட்டோம். அதிலிருந்த ஐந்து பேரை கைது செய்துள்ளோம்" என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அகமெட் சகீத், தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோரில் 4 பேர் விடுதலைப் புலிகள் என்றும் ஆயுதங்கள் அதில் இருந்தன என்றும் மாலைதீவு அரசாங்கத்தின் பேச்சாளர் கூறியிருந்தார்.

ஆனால் அதன் பின்னர் "இந்த விடயத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள்கிறோம். ஏனெனில் கைது செய்யப்பட்ட நபர் பேசியது தமிழ் அல்ல. மலையாளம்" என்றும் பேச்சாளர் மொகமெட் சரீப் தெரிவித்தார்.

மாலைதீவு கப்பல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், மாலைதீவு பகுதியில் நாம் இயங்கவில்லை. கைது செய்யப்பட்டோரும் எமது இயக்கத்தினர் அல்ல என்றார்.

மாலைத்தீவு அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் விளக்கம் அளித்துள்ள நிலையிலும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்றும் ஆயுதம் கடத்திய விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.

புதினம்

இப்படி எத்தனை படகுகள் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்.ஆ

என்னவோ நடக்க வேண்டியிருந்தது தவறிவிட்டது. அதனால்தான் எண்மைவிடயங்கள் வெளிவருகின்றன. ஆனாலும் பிராந்தியச் சண்டியர்கள் தலையிட்டு இதனை மறைத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புறம் ஈழத்தமிழினம் தமக்கான உறுதியான தீர்வை நோக்கிப் பயணிக்க, இதற்கு இடையூறாக இருக்கும் சக்திகள் தம்மாலான சகல முட்டுக்கட்டைகளையும் திட்டமிட்டு அரங்கேற்றியவாறே இருக்கின்றன. இவர்களிடம் இருக்கும் அரசு இயந்திரம் என்ற அதிகாரம் இவர்களது பல சதிகளை மங்கலாக்கி மறைத்துவிடுகின்றன. ஆனால் காலம் உண்மைகளை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கினறது.

- இந்த நாடகத்தால் வெளிவரும் விளைவுகள் எவை? பயனடைபவர் யார்? என்பதன் ஊடாக திட்டமிட்ட சக்தி மறைந்திருப்பதை இனங்காணலாம்.

- மாலைதீவு நாடகம் 80பதுகளிலும் நிகழ்ந்தது, இதன் முழுமையும் அம்பலமான கதை.

- கூட்டு ரோந்து தவறிப்போக இலங்கையைச் சுற்றிலும் ரோந்து செய்ய தகுந்த காரணங்கள் தேவையல்லவா? இதற்கு நட்புநாடுகளின் அழைப்பு வேண்டுமல்லவா?

- இந்து சமுத்திரத்தின் ஆளுகையை விரும்புபவர்கள், தீவகமான இலங்கையை ஆளுகைக்குள் கொண்டுவர விரும்புபவர்கள் இதன்பின் இருக்கக் கூடும்.

- முன்னர் செய்த இடத்தில் மீண்டும்அதேமாதிரி நாடகம் போட முயல்வார்களா? நியாயமான கேள்வி இது. ஆனாலும் இதிகாசம் என்று கேட்டுப்புளித்த கதையை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிடும் மக்கள் கூட்டத்திற்கு இது ஒன்றும் பெரியவிடையமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைய்யா இது அநியாயம்! தமிழில் யாராவது பேசினால் படகை மூழ்கடித்துவிடலாமா? தமிழ் பேசினாலே புலிகளா? மலையாளம் பேசியதால் அவர்கள் புலிகள் இல்லையாம். தமிழன் எல்லாருக்கும் கிள்ளுக்கீரையாகிவிட்டான். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து மண்ணாங்கட்டி. :angry: :angry:

தமிழ்நாட்டிலும் எல்லாப்பக்கத்தாலயும் இடி! ஈழத்தில் சொல்லத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு எங்க வடிவேலு சார் வந்து பதில் சொன்னால் தான் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு சட்டவிரோதமான முறையில் ஆயுதக் கடத்தல் செய்கின்றதோ என்ற சந்தேகம் வலுக்கின்றது. சமீபத்தில் தூத்துக்குடியில் பிடிபட்ட ஆயுத வாகனம், சிறிலங்கா அரசிற்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட செய்தி நினைவில் இருக்கலாம். அது போல இவ்வாறு மாலைதீவில் பிடிபட்ட படகினைப் பார்க்கின்றபோதும் அதே மாதிரியான சந்தேகமே உள்ளது. இதனால் சிறிலங்காவினைப் பொறுத்தவரைக்கும் நிறைய அனுகூலம் உண்டு.

பொதுப்படையான ஆயுத சந்தையில் ஆயுதங்களை வாங்குகின்றபோது அதிகளவு பணம் செலவளிக்க வேண்டும்.அதை விடத் தரகர் கூலியும் மிகமிக அதிகம். ஆனால் கள்ளச் சந்தையில் குறைந்தவிலைகளில் ஆயதங்களைப் பெறலாம்.

ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றபோது, குறிப்பேட்டில் இடம்பெறாது என்பதால், அது பற்றிய தகவல்கள் வெளியே கசியாது.

வெளிநாடுகள் இரகசியமாகக் கொடுக்கின்ற பணத்தை இதற்குப் பாவித்துக்;கொள்ளலாம். இரண்டுமே இரகசிய விளையாட்டுக்களாக இருக்கும்.

இவ்வாறு நிறைய வேலைகளைச் செய்யமுடியும்.

தமிழகத்தில் இருந்து ஆயுதங்கள் தொடர்ச்சியாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட சம்பவங்கள் கூட சிறிலங்கா அரசிற்குக் கூட இருக்கலாம். இதனால் என்றுமொரு இலாபத்தையும் சிறிலங்கா அரசு சாதித்தது. அதைப் புலிகளின் மீது பழியைப் போட்டு இரட்டை இலாபத்தை அனுபவித்தது.

அப்படியென்றால் ஏன் வழியில் படகுகள் தாக்கியளிக்கப்பட்டதாகச் செய்தி வந்தன என்ற கேள்வி எழுதுதல்லவா? தனித்து வந்ததாகச் சொல்லப்பட்ட படகுகள் அழிக்கப்பட்டன என்று சொல்லுவதால் அது உண்மையாக இருக்க வேண்டுமென்றல்ல. பிடிபடும்போது புலிகளின் தலையை உருட்டுவதற்காக முதலே கிளப்பி விடப்பட்ட பொய்ச் செய்தியாகத் தான் இருக்கும்.

மாலைதீவில் மர்ம ஆயுதப்படகு அழிப்பு; கைதான ஐவர் யார் என்பதில் குழப்பம்! புலிகள் மீது முதலில் குற்றச்சாட்டு ஆனால் அவர்கள்அடியோடு மறுப்பு

மாலைதீவு கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்த "ட்ரோலர்' படகு ஒன்று தாக்கி மூழ்கடிக் கப்பட்டது. அதிலிருந்த ஐவரைத் தாம் கைது செய்துள்ளதாக மாலே தேசிய பாதுகாப்புப் படை யினர் தெரிவித்தனர்.

கைதானவர்கள் யார் என்று இனங்காண்பதில் மாலைதீவு அதிகாரிகளிடம் பெரும் குழப்பம் நிலவுகிறது.

கைதுசெய்யப்பட்ட ஐவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்று அரச தரப்புச் பேச்சாளர் முதலில் சந்தேகம் வெளியிட்டிருந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் குறித்துக் குழப்பம் நிலவுவதாக மாலையில் அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் குறித்த ட்ரோலர் படகு புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்தி வந்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியது.

ஆனால் விடுதலைப் புலிகள் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அந்தப் பகுதியில் தாம் எந்தவிதமான நடவடிக்கை களிலும் ஈடுபடுபவர்கள் அல்லர் என்றும் கைதானவர்கள் தமது அமைப்பின் உறுப்பினர்கள் அல்லர் என்றும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

மாலைதீவின் தென்பகுதி கடலின் காவ் அலிவ் என்ற இடத்தில் சுமார் 12 மணிநேரம் தரித்து நின்ற பின்னர் அந்தப் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 8.25 மணியளவில் படகு மூழ்கியதாக உள்ளூர் வானொலி அறிவித்தது.

படகில் இருந்து மாலைதீவு கரையோ ரப் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்தே அதன் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார் அரச பேச்சாளர் முஹமட் ஷரீவ்.

அந்தப் படகில் இருந்தவர்களில் ஒரு வர் புதன்கிழமை மாலை படையினரால் கைது செய்யப்பட்டார். கடலோரக் காவற் படையினர் குறித்த ட்ரோலரை நெருங்கியதும் அவர் அதிலிருந்து குதித்துள்ளார்.

அவரைப் படையினர் மீட்டுக் கைது செய்தனர். ஏனைய நால்வரும் நேற்றுக் காலை ட்ரோலர் மூழ்கிய வேளையில் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முதலாவது நபர் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான மலையாளம் பேசுகிறார் என்று அதிகாரி கள் கூறினார். தான் அந்த ட்ரோலரின் தொழில்நுட்ப அதிகாரி என்றும் அதனை ஆயுதங்கடத்துவதற்காக ஏனைய நால் வரும் கடத்தினார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் என்றும் அதிகாரிகள் கூறினார் கள்.

ட்ரோலர் மூழ்கடிக்கப்பட்டது

""நாங்கள் அந்த ட்ரோலரை மூழ்கடித்து விட்டோம். அதிலிருந்த ஐவரை நாம் பிடித் துள்ளோம்'' என்று மாலைதீவு வெளி விவ கார அமைச்சர் டாக்டர் ஷஹீட் "ரோய்ட் டர்' செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். கரையோரக் காவல்படையின் தலைவ ரான சகாரியார் மன்சூர் இது தொடர்பில்

கருத்துத் தெரிவித்தபோது, குறித்த ட்ரோலர் ஆயுதக் கடத்தலில் தொடர்பு பட்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தி னார்.

முன்னதாக, குறித்த ட்ரோலரில் இருந்து உள்ளூர் படகுகள் இரண்டை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனை அடுத்து மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினர் தமது கடற்பரப்பில் பயணித் துக்கொண்டிருந்த அனைத்து வெளிநாட் டுக் கப்பல்களையும் எச்சரித்தனர்.

உள்ளூர் படகுகளான எம்.வி.தோன் மற்றும் எம்.வி.துனா ஆகியவற்றில் இருந்த 16 மாலுமிகள், குறித்த ட்ரோலரை புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் கண்டுள்ளனர். அதில் இலங்கைக் கொடி பறந்துகொண்டிருந்ததாகவும் தெரிவித் துள்ளனர். அந்த ட்ரோலரிலிருந்து கடலை நோக்கியும் ஆகாயத்தை நோக்கியும் துப் பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படகுகளில் ஒன்று ட்ரோலரைப் பின்தொடர்ந்தது.

இந்தத் தாக்குதலை அடுத்து அங்கி ருந்து நழுவிய எம்.வி.துனா, ஹாவ் அலிவ் பிரதேசத்தின் தலைநகரான விலின்ஜிலிக் குச் சென்று கடலோரப் பாதுகாப்புப் படை யினரை உசார்ப்படுத்தியுள்ளது. உடனடி யாக காவல் படகு ஒன்று அந்தப் பகுதிக்கு அனுப்ப வைக்கப்பட்டதுடன். குறித்த ட்ரோலர் அங்கு நிற்கின்றதா என்பதை வான் வழித் தேடுதல் மூலம் உறுதிப் படுத்துமாறு இந்தியக் கடற்படையின ரையும் மாலைதீவுப் படையினர் கேட்ட னர் என்று கூறப்படுகின்றது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.