Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க சதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க சதி

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க சதி

 

தேசிய பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்காக பல்வேறு மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்காக செயற்படும் சிலர் எவ்வாறாயினும் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் ஆற்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதனூடாக பல்கலைக்கழகங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக தெரிவித்து மாணவர்களை தவறான வளியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்கள் நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதனால் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் விருப்பமற்ற நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதன் காரணமாக தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பவதற்கு பெற்றோர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் 1980 ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பணம் செலுத்தி பட்டப்படிப்பை மேற்காள்வதற்கு வசதியாக இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் சட்ட கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கும் இங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் திறந்த பல்கைலக்கழகத்தின் விரிவுகரையாளர்கள், பணியார்களின் சம்பளத்துக்காக 1400 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இன்றும் 330 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தினால் செலுத்தவேண்டிய சம்பள மீதியை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது. பல்கலைக்கழகங்களை பலமிழக்கச் செய்வதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்கள பணப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவவும் இதில் கலந்துகொண்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சகல பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
 
2 hours ago, nunavilan said:

தேசிய பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள மிஞ்சி சாதி செய்யக்கூடிய ஆக்கள் இருக்கிறாங்களா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.