Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் விஜயம்! தமிழ் அரசியல் கைதிகளை திரும்பி பார்ப்பாரா?

Featured Replies

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்றதில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டிற்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றார். ஆனாலும் அவை அனைத்தும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என ஒருசாரார் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்ற பின்னர் அரச அலுவலகங்களிற்கு தானே நேரில் சென்று கண்காணித்துவந்தார்.

அந்தவகையில் இன்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் அங்கு சென்றிருந்த ஜனாதிபதி சிறைச்சாலையில் உள்ள நிலமைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சிறைச்சாலையில் தண்டனை வழங்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உள்ளனர்.

இதேவேளை தண்டனை பெற்றுள்ள தமது தந்தையை பொது மன்னிப்பில் விடுவிக்கக் கோரி காத்திருக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான அரசியல் கைதி ஆனந்த சுதாகரனும் அங்கு தண்டனை அனுபவித்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளையும் சந்திப்பாரா என்பது தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/136848

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு விடுதலை சாத்தியமா? ஆனந்த சுதாகரனையும் சந்தித்தார்

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டார். 
 
மேலும் ஆனந்த சுதாகரனையும் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.          
 
ஜனாதிபதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தார்.
 
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் அறிவித்தலின்றி கண் காணிப்புக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள நிலமைகளை ஜனாதிபதி ஆராய்ந்தார்.
அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர் நடந்து சென்று பார்வையிட்டார். 
 
சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு அடையாளம் காண்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
 
தண்டனை பெற்றுள்ள தமது தந்தையை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி பிள்ளைகள் இருவர் காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் பார்வையிட்டார். ஆனால் தனிப்படச் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் திறந்த வெளியில் நடமாடிக் கொண்டிருந்த சிறைக் கைதிகளுடன் உரையாடிய ஜனாதிபதி அவர்களது விபரங்களை கேட்டறிந்தார். 
 
இவர்களில் பெரும்பாலான வர்கள் போதைப்பொருள் பாவனை யின் காரணமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருபவர்களாகும். 
 
சிறைக் கைதிகளின் எண் ணிக்கைக்கு போதுமான இடத்தைப் பார்க்கிலும் மும்மடங்கு எண்ணிக்கையானவர்கள் சிறையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 
 
பிழையான தகவல்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை க்கு அதிக காலம் செல்வதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். 
 
இதன் காரணமாக தமக்கு நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 
தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்கு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 
  • தொடங்கியவர்

சொறிலங்கா அரசு போடும் நாடகத்தால இந்த தமிழ் பணயக் கைதிகளுக்கு ஒரு விடுதலை கிடைச்சால் சந்தோஷப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.