Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு?

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச

கோட்டா- மகிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்ற தொனியில் மோடியிடம் எடுத்துரைப்பு
 
 
main photomain photo

 

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார் கோட்டாபய ராஜபக்ச. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் நான்கு நாள் பயணமாக சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
 
வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்

 

ஹைதராபத் நகரத்தில் அமைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நரேந்திரமோடியும் சந்தித்து உரையாடியிருந்தனர். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாhரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்தித்ததர்.

ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இலங்கைக்கு நாநூற்றி ஐம்பது மில்லியன் டொலர்கள் வழங்க இந்தியா இணங்கியிருந்தது. அந்த உதவிகளை உடனடியாக வழங்குவதாக மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா இன்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு வேண்டிய உடனடி உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச புதுடில்லியில் விளக்கமளித்திருந்தார்.

இந்தியா வழங்கும் கூடுதல் நிதியுதவிகளைப் பொறுத்தே, இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இந்தியாவுக்கு இலங்கை உதவியளிக்குமென கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் புதுடில்லியில் வைத்துக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச ஈழத் தமிழர் விவகாரத்தில் புதிய அரசாங்கம் கையாளவுள்ள அணுகுமுறைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமென உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாறாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் விரும்புவதாகவும் அதற்குரியவாறு புதிய அரசாங்கம் அரசியல் தீர்வை ஏற்படுத்தும் எனவும் மகிந்த ராஜபக்ச அங்கு கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கடுமையாகக் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

2-BEC7573-DF49-4-B18-8275-F03-EECF75-CAB

On ‎2‎/‎10‎/‎2020 at 9:42 PM, nunavilan said:

நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாhரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்தித்ததர்.

ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த தமிழர்களை அழைத்து சென்று ஏமாற்றும் வேலையை, அதாவது தமிழர்களை தொடர்ந்து சிங்களம் அழிப்பதை, கிந்தியா அறிந்தே இருக்கும்.

 

On ‎2‎/‎10‎/‎2020 at 9:42 PM, nunavilan said:

வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கடுமையாகக் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்

 

மேலும், இப்போது இது குறித்து பேசப்படுவது ஏன் என்று கேட்டபோது, "இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் டாலர் கடன் முதிர்வு அடைகிறது. அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு வாய்தா வாங்க விரும்புகிறது இலங்கை. அதை வலியுறுத்துவதே ராஜபக்ஷே வருகையின் நோக்கம். இந்தியாவுடனான கடன் மட்டுமல்ல. ஜப்பானுக்கு இலங்கை தரவேண்டிய 190 மில்லியன் டாலர் கடனும், சீனாவுக்கு இலங்கை தரவேண்டிய 500 மில்லியன் டாலர் கடனும்கூட முதிர்வடைய உள்ளன. அது தவிர, முதிர்வடையும் வங்கிப் பத்திரங்களுக்கு அந்நாடு திருப்பித் தரவேண்டிய தொகை 1.4 பில்லியன் டாலர்களாகும்.

வங்கிப் பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகையை திருப்பித் தந்துதான் ஆகவேண்டும். ஆனால், இந்தியாவிடம் வலியுறுத்தி கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வாய்தா வாங்கினால், அதைக் காட்டி ஜப்பானிடமும் வாய்தா வாங்கத் திட்டமிட்டுள்ளது இலங்கை. இருவரும் ஏற்றுக்கொண்டால், அதைக் காட்டி சீனாவிடமும், வாய்தா வாங்குவதற்கு இலங்கை அழுத்தம் கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-51432564

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2020 at 6:48 AM, Kavi arunasalam said:

2-BEC7573-DF49-4-B18-8275-F03-EECF75-CAB

மனதை கவர்ந்த... கருத்துப் படத்துக்கு நன்றி, கவி அருணாசலம். :)
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.