Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலை என்ன?- கேட்டுச்சொல்லுங்கள்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

FOLLOW US

 

Published : 11 Feb 2020 18:18 pm

Updated : 11 Feb 2020 18:18 pm

 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலை என்ன?- கேட்டுச்சொல்லுங்கள்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

what-is-the-position-of-the-governor-regarding-the-release-of-perarivalan-supreme-court-order-to-tamil-nadu-government  

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன? என்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே கடந்த முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சி.பி.ஐ தரப்பில் உரிய புதிய நிலவர அறிக்கை தாக்கல் செய்யாததால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் அதன் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பு ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜிகூறும்போது, “ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும்.எனவே ஆளுநரிடம் போய் கேட்டுக் கூறுங்கள். விடுதலை தொடர்பான சட்டப்பேரவை தீர்மானம் என்னவானது, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநர் முன்பு முறையிடுங்கள் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

“விடுதலை சம்பந்தமான கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை காலம் நிலுவையில் உள்ளது ? ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது, எனவே தமிழக அரசு அந்த கோப்புகள் நிலையென்ன என்பது தொடர்பாக கேட்டு தெரிவிக்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு தெரிவியுங்கள்?”. எனத்தெரிவித்து வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்

https://www.hindutamil.in/news/tamilnadu/539121-what-is-the-position-of-the-governor-regarding-the-release-of-perarivalan-supreme-court-order-to-tamil-nadu-government-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உச்சநீதிமன்றம் குட்டு: இனியாவது எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுங்கள்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

 

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரிடம் பதில் கேட்டு சொல்லுங்கள் என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இனியாவது ஆளுநரை வற்புறுத்தி நல்ல முடிவெடுங்கள் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வநதபோது தமிழக அரசு தரப்பில், ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வார்த்தில் தெரிவியுங்கள்?. என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:

"பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு" அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது. எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/539138-seven-men-release-supreme-court-order-stalin-s-advice-to-the-tamil-nadu-government-1.html

 

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: அ.தி.மு.க. விற்கு உச்சநீதிமன்றம் சரியான பதிலடி- ஸ்டாலின்

 

by : Dhackshala

M.K.Stalin.jpg

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி வழங்கியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்  இந்த விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு காத்திருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது குறித்து, ஆளுநரிடம் கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம் அல்ல, தமிழக அரசுதான் என்று கூறினர்.

மேலும், தீர்மானம் மீது எடுக்கப்பட்ட முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது குறித்து, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி வழங்கியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,  உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அ.தி.மு.க. அரசானது, அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனியாவது அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர-2/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி வழங்கியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுடலை ஆட்சியில் இருந்தால் வெளியே அனுப்பிட்டுதான் மறுவேலை பார்ப்பார்..😢

அது போக ஆளுநர் அவரின்ட வேலையில் ரொம்ப பிஸி..👌

main-qimg-ec8942d1270c77b43f2043b5a4303b

"கடலூரில் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் தமிழக ஆளுநர். அப்போது, திடீரென்று பாத்ரூமில் ஆளுநர் புகுந்ததால் அப்பகுதியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது."

https://www.vikatan.com/government-and-politics/politics/110887-cuddalore-visit-unexpected-experience-of-governor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.