Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’

Featured Replies

image_6903729922.jpg

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

மத்திய அரசாங்கம்,   மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றை, நேற்று (11)  மேற்கொண்டார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மாநகர சபையால் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுவரும் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு நகரச் செயற்றிட்டம் தொடர்பான விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

மாநகர சபைக்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பிட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிராயத்தனங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறப்பட்டன.

இங்கு கலந்துரையாடப்பட்ட விடங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும், பிரித்தானியாவிடம் இருந்து மட்டக்களப்புக்கு முதலீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மாகாண-சபை-என்ற-அலகில்-பெயரளவிலேயே-அதிகாரங்கள்/73-245391

3 hours ago, ampanai said:

மத்திய அரசாங்கம்,   மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையின் அதிகாரங்கள், நிதியொதுக்கீடுகள் பற்றிய உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவருகிறது.

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் இவற்றை கவனிக்காமல் சேறடிப்பதை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.

9 hours ago, போல் said:

மாகாணசபையின் அதிகாரங்கள், நிதியொதுக்கீடுகள் பற்றிய உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவருகிறது.

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் இவற்றை கவனிக்காமல் சேறடிப்பதை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அது சரி। அங்கு அதிகாரத்தை சோனவனுக்கு கொடுத்துப்போட்டு இப்போ புலம்பி என்ன பிரயோசனம்? அவன் தனது பிரதேசம் முழுவதையும் வளப்படுத்தி , பெரிய நகரங்களாக எல்லா கடடமைப்புக்களுடனும் அமைத்து விடடான। நீங்கள் எல்லாத்தையும் கோடடை விட்டிடு இப்போ குய்யோ முய்யோ எண்டு சத்தம்போடத்தான் முடியும்। அவனுக்கு முடியுமெண்டால் உங்களுக்கு ஏண்டா முடியாது? இப்படியே எதிர்மறையா சிந்தித்து , கதைத்து ஒண்ணுமே நடக்கப்போவதில்லை। போய்  எதாவது வழியப்பருங்க।

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க மற்றவனை நோக்கி ஒருவிரலை நீட்டினால் மூன்று விரல்கள் எங்களை நோக்கி நீட்டும் என்பது இதுதானோ. பொதுவெளியில் தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே. நம்மகிட்ட ஒத்துமையே வராதா? வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் அண்மையில் இதே விடயங்கள் பற்றி காட்டமாக சொல்லியிருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.