Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு – 41 இளைஞர்கள் கைது

Featured Replies

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில் இன்று திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.

சற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.

சி சி ரி வி பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்று விடுதியின் உரிமையாளரான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76405

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

 

5 hours ago, ampanai said:

இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த தயாரிப்பு. விரைவில் வெளிவரும் எதிர்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-4.jpg

UPDATE – யாழில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

‘இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர்’ என பொலிஸார் கூறினர்.

யாழில் இராணுவத்தினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் 41 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இராணுவத்தினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இராணுவத்தினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதற்கமைய நேற்று (திங்கட்கிழமை) இரவு அங்கு சென்ற இராணுவத்தினர், முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும் தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கருத்த தெரிவித்துள்ள விடுதியின் உரிமையாளரும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருமான த.துவாரகன், “உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில்  கேக் வெட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.

சற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.

சி.சி.ரி.வி. பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழில்-இராணுவத்தினர்-மேற/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருதனாா் மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் நேற்றிரவு இராணுவத்தினா் சுற்றிவளைத்து பெருமளவு இளைஞா்களை கைது செய்திருக்கின்றனா்.சம்பவத்தில் 50 உணவு பெதிகளை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை. அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றது. எங்கள் ஹோட்டலில் இரு ந்து ஒரு சிகரட் அல்லது ஒரு மதுபான போத்தலை கூட இராணுவத்தினா் மீட்கவில்லை என இன்று காலை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரும் ஹோட்டல் உாிமையாளருமான த.துவாரகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவா்களை இராணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவா்கள் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்கள் அல்ல. எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம் பொலிஸாா் உறுதிப்படுத்தியிருப்பதுடன், கைது செய்யப்பட்டவா்களை விடுதலையும் செய்துள்ளனா்.

பின்னா் நான் இராணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டாா்கள். பெருமளவு இளைஞா்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற்றுகையிட்டதாக கூறினா். பின்னா் அவா்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினா்.ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னா் இராணுவத்தினாின் வாகனங்களிலும், தனியாா் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். கைது செய்யப்பட்ட இளைஞா்கள் குற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா? என சோதிக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனா் என தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-விடுதி-சுற்றி-வளைப்/

11 minutes ago, கிருபன் said:

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது.  .சம்பவத்தில் 50 உணவு பெதிகளை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரும் ஹோட்டல் உாிமையாளருமான த.துவாரகன் தெரிவித்துள்ளார்.

 இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-விடுதி-சுற்றி-வளைப்/

அரசியல் பின்புலம் என்றால் அது எந்த அரசியல் பின்புலம்? நீங்கள்தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவ படுத்துகிறீர்கள், அங்கஜன் அரச பிரதிநிதியாக செயல்படுகிறார்। அப்படி என்றால் எது அரசியல் பின் புலம்?

ஐம்பது உணவு பார்சலை கொண்டுசெல்வதட்கு இதனை (41) பேர் வர வேண்டுமா? நிச்சயமாக இதில் எதோ பிரச்சினை இருக்கிறது। அரசியல் செல்வாக்கினால்தான் அதனை பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்।

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

ஐம்பது உணவு பார்சலை கொண்டுசெல்வதட்கு இதனை (41) பேர் வர வேண்டுமா? நிச்சயமாக இதில் எதோ பிரச்சினை இருக்கிறது। அரசியல் செல்வாக்கினால்தான் அதனை பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்।

பொறுமை.... மலிஞ்சால் சந்தைக்கு வரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.