Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை -ஈ.சரவணபவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை -ஈ.சரவணபவன்

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம்  இல்லை -ஈ.சரவணபவன்

சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

சிறு வலியேனும் அனுபவிக்காத சுரேன் ராகவன், விக்னேஸ்வரன் போன்றோர்கள் தான் களத்தில் சந்தர்ப்பத்தை பாவிக்கின்றனர்.எமக்கு சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக வருகை தரும் வரை அவரை எமக்கு யாரென்றே தெரியாது. யாழ்ப்பாண மக்களுக்கே தெரியாது. ஆளுநராக வந்து அதிகமாக கதைத்திருக்கின்றார். செயல் வடிவமாக எதையும் செய்யவில்லை.வடக்கு மாகாணசபையின் முதலாவது தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே கூட்டமைப்பு அழைத்து வந்தது. இப்போது சுரேன் ராகவனை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் வெளியாகின்றது.

இப்போது களத்தில் மீண்டும் வந்து சந்தர்ப்பத்தை பாவிக்கின்றார்கள் ஒரு வலியும் அறியாதவர்கள். ராகவனிற்கு இங்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அதேபோன்று தான் விக்னேஸ்வரனிற்கும்.விக்னேஸ்வரனை கொண்டு வந்து பட்டது போதும் என்று நினைக்கின்றார்கள். ராகவன் விடயத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.வடக்கு மாகாணசபையின் முதலாவது தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே கூட்டமைப்பு அழைத்து வந்தது. இப்போது சுரேன் ராகவனை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் வெளியாகின்றது.

காலத்திற்கு காலம் வடக்கு மாகாணத்திற்கு இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து அழைத்த வரப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக கூட்டமைப்பு அறிமுகம் செய்கின்றது. உண்மையில் எதற்காக இவ்வாறு செய்கின்றீர்கள். இங்கு ஆளுமை உள்ளவர்கள் இல்லை என்று நினைக்கின்றீர்களா?சி.வி விக்னேஸ்வரனை கொண்டு வந்தபோது நான் எதிர்த்தேன். எமது பத்திரிகையும் எதிர்த்தது. கனடாவில் இடம்பெற்ற கூட்டத்தில் கேட்டபோதும் தமிழரசு கட்சியின் தலைவரே பொருத்தமானவர் எனவும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

சுரேன் ராகவன்முதலில் சுமந்திரனை சந்தித்துள்ளார். அவர் விட்ட முதல் பிழையானது சுமந்திரனிற்கு இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியாது.இவ்விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவரிடம் அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் பேசியிருக்க வேண்டும். அந்த விடயத்தில் அவர் தவறிவிட்டார் என கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் முயற்சித்துள்ளமை குறித்து வெளியாகிய செய்திகள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம்சாட்டியுள்ளார். (15)
 

http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரனும்-ஓர்-உறுப்பி/

கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை -சுரேன் ராகவன்

கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை -சுரேன் ராகவன்

நாட்டின் மிகவலுவான தமிழ் அரசியல் கட்சி என்பதால், புதிய தமிழ் அரசியல் பிரிவுகளும், கூட்டணிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிஞ்ச முடியாது. சில கட்சி உறுப்பினர்களின் சித்தாந்தங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போகாததால் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டன.போர், இந்திய இராணுவத்தின் தலையீடு மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறையவே கடந்து வந்திருக்கிறது. தற்போது, அதன் ஒரே இலக்காக இருப்பது ஒற்றுமையே ஆகும் என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் பங்கு பற்ற எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் அரசியலின் நிலைமை குறித்து கவனிப்பதற்காக அந்த கூட்டங்களில் நான் பங்குபற்றினேன்.இதையடுத்தே, நான் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால் அது முற்றிலும் பொய். கூட்டமைப்பு என்னை அணுகினால், அது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்ததாகவே இருக்கும். ஏனென்றால் மக்களுக்கு சேவை செய்வதே எனது ஒரே நோக்கம் என மேலும் தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பில்-இணைந்து-க/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்போது களத்தில் மீண்டும் வந்து சந்தர்ப்பத்தை பாவிக்கின்றார்கள் ஒரு வலியும் அறியாதவர்கள்.

D2-CD7-B0-C-D6-AD-421-F-AFEC-E6-B192-FF8

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை .

YeDgv7.gif

உங்கட பொவர் இவ்வளவுதானா.. சுமந்திரன் ஒபீசர்..? ☺️

  • கருத்துக்கள உறவுகள்

தலையாட்டி பொம்மையளை தேடுகினம் போல!

"சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்."

அந்த பல பேர் யார்? என்ற பட்டியலை வெளியிட்டால் மக்களுக்கு நம்பிக்கை வரும்.

அத்துடன், ஒரு சனநாயக கட்சி  என்ற முறையில் உங்கள் கூட்டத்திற்குள் பத்திரிகையாளர்களை வரவழைக்கலாம். அதுவும் உதவும். உன்னால் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு.

மாறாக, மற்றையவர்களை  குற்றம் சாட்டும்போழுது கூட்டமைப்பின் மீது உள்ள சந்தேகம் அதிகரிக்கவே செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.