Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களை சீனாவிடம் பெற அரசாங்கம் தீர்மானம் : பந்துல

Featured Replies

  (செ.தேன்மொழி)
அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்களையும் பெற்றுக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பட்டதாரி நியமணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் , தேர்தல் ஆணையகம் தேர்தல் முடிவுறும் வரையில் அதனை செயற்படுத்த முடியாது என்று அறிவுறுத்தியுள்ளது.

நியமண கடிதங்கள் கிடைக்கப் பெற்ற பட்டதாரிகளுக்கு தேர்தல் முடிந்து ஐந்து நாட்களின் பின்னர் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.

அவ்வாறு கடிதங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணைத்தில் பிரவேசித்து பட்டதாரி நியமணங்கள் தொடர்பான பகுதியை பார்ப்பதனூடாக , தமது பெயரும் இருக்கின்றதா என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாதவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்படும்.

அவ்வாறு நியமண கடிதங்கள் கிடைக்கப் பெற்று 7 நாட்களுக்குள் அவர்கள் பதவிகளை ஏற்காவிட்டால். பதிவி வழங்கப்படமாட்டாது. இதேவேளை, அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும் , அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என்றும் எதிர்தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த மூன்று மாதகாலத்திற்கு அரசசெலுவுகளை முன்னெடுப்பதற்காக திறைச்சேறியின் செயலாளருக்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதற்கமைய அரசாங்கத்தினால் செலுத்த வேண்டியுள்ள கடன்தொகைளை செலுத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.

இந்நிலையில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு கடன் பெறுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது சீனா அபிவிருத்தி வங்கியிலிருந்து 1000 மில்லியன் மொரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்கயையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 வருட சலுகை அடிப்படையிலேயே இந்த நிதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் , இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்தரப்பினர் எம்மால் சர்வதேசத்தில் கடன் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தனர். தற்போது சீனாவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/77293

 

 

  • தொடங்கியவர்
19 minutes ago, ampanai said:

அதற்கமைய அரசாங்கத்தினால் செலுத்த வேண்டியுள்ள கடன்தொகைளை செலுத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.

கடன்பெறுவது என்னவோ சிங்கள நாடு. ஆனால், கடனை அடைப்பதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. 
( விடுமுறைகள், உழைத்த பணத்தை அனுப்பி அந்நிய செலவாணி பெற்றுக்கொடுத்தல், சிங்கள தயாரிப்புக்களை இறக்குமதி செய்தல்.. etc.etc  )    

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடம் ஏலவே வாங்கிய கடனையே அடைக்க முடியாது. இதில மேலும் கடன்.. ச்சாரி.. சொறீலங்காவை அடகு வைத்தல்..!

எதுஎப்படியோ.. பக்கத்தில் சில நூறு மில்லியன்களை காட்டி சொறீலங்காவை தங்கள் காலடியில் வைச்சிருக்கலாம் என்று கனவு காணும்.. ஹிந்தியர்கள் பாடுதான்.. உள்ளதையும் கொடுத்துக் கெட்டான் நிலை.

இதுவும் வேணும்.. இன்னும் வேணும். எல்லாம் காங்கிரஸ்.. சோனியாவின் தனிப்பட்ட நலனை நோக்கி ஹிந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகள்.. வடிவமைக்கப்பட்டதன் விளைவால்... நிகழ்பவை இவை. 

  • தொடங்கியவர்
38 minutes ago, ampanai said:

இதன்போது சீனா அபிவிருத்தி வங்கியிலிருந்து 1000 மில்லியன் மொரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்கயையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 வருட சலுகை அடிப்படையிலேயே இந்த நிதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் , இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

சீனாவின் இன்னொரு மாகாணாமாக மாறி விட வேண்டியதுதான்.  

சிங்கள சுதந்திரம் பெருமைகொள்ளட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது செய்து தேர்தலில் வெற்றிபெறத்த துடிக்கும் இவர்கள் இன்னொரு தாக்குதலையும் நடத்தலாம். இல்லையேல் இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கலாம் எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே. 

 இந்தியா சர்வதேசத்தால் ஒதுக்கி  தள்ளப்படும் நாள் வரும்வரை நமது விடிவு கானல் நீரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.