Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதிதீவிரம், சீனாவில் குறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-2-1.jpg

கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதிதீவிரம், சீனாவில் குறைவு

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய கணக்கின்படி அந்நாட்டில் நேற்று 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் மரணித்துள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் ஈரானிலும் 194 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பாதிப்பு வேகமாகத் அதிகரித்துவருகிறது. கடற்கரை மாகாணமான ஒரேகான் உள்ளிட்ட 8 மாகாணங்களில் சுகாதார அவசர நிலையை அந்தந்த மாகாண ஆளுநர்கள் பிறப்பித்துள்ளனர். அண்டாரியோ மற்றும் அல்பெர்ட்டா பகுதிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கனெக்டிகட் மற்றும் மெம்பஸ் பகுதியில் புதிதாக நோயின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தங்கள் நாட்டு இராணுவத்தினரோ அவர்களின் குடும்பத்தினரோ இத்தாலி மற்றும் தென்கொரியாவுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவில் மட்டும் 22 பேர் உயிரிழந்த நிலையில் 538 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொரோனா பாதிப்பால் எகிப்தில் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நோயின் தீவிரத் தாக்கத்தின் எதிரொலியாக நோர்வேயுடனான இராணுவ ஒத்திகையை பின்லாந்து இரத்துச் செய்துள்ளது. இதேபோல் போலந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவால்-உயிரிழப்பு-எண/

கொரோனா வைரஸ்: இத்தாலி சிறைச்சாலையில் கலவரம் - 6 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக அந்நாட்டில் சிறைச்சாலை ஒன்றில் நடந்த கலவரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள மொடேனா நகரில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பிளாக்குக்கு அங்குள்ள கைதிகள் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சிறைச்சாலையில் கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீவைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்ந்து 7,375ஆக அதிகரித்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கத்தாரில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்ததையடுத்து, 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருபவர்களுக்கு தற்காலிக பயணத்தடையை அந்நாடு விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிறுயன்று கத்தார் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசம், சீனா, எகிப்து, இந்தியா, இரான், இராக், லெபனான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய் லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபர்களுக்கு இந்த தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவை தொடர்ந்து, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதை தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தாலியில் சுமார் 1.6 கோடி மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முன்னதாக, கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும் உள்ள பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கேளிக்கை சேவைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு வருவதாக அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு நிலைக்கு இத்தாலி சென்றுள்ளது. இதற்கு முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த தென் கொரியாவில் மொத்தம் 7,313 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிகளவு மூத்த குடிமக்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி விளங்குகிறது. வயதானவர்களும், ஏற்கனவே நோய்வாய்பட்டவர்களும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த கருத்து உண்மை என்பது இத்தாலியிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியம் மற்றும் வெனிஸ், பர்மா மற்றும் மொடெனா உள்ளிட்ட 14 மாகாணங்களில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மொத்தம் 1.6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "எங்கள் குடிமக்களின் உடல் நலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறோம். இந்த நடவடிக்கைகளை சாத்தியப்படுத்துவதற்காக பலர் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிகிறோம்" என்று இத்தாலியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51797946

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.