Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா – சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mcms.jpg

உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா – சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அதற்கமைய இந்த வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேசத்தின் பல நாடுகளை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 800க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.

இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு ஏனைய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அவசர தேவையன்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக இத்தாலி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/உலகை-ஆக்கிரமித்துள்ள-கொர/

எதிர்பாராத விடுதலைகள் மலராலாம் ...

யார் நினைத்தார்கள் ஒரு வைரஸ் விடுதலை கொண்டுவரும் என்று !

 

 

ஐரோப்பாவில் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால் அங்கு அதிக உயிர்கள் இழக்கப்படுகின்றன என்கிறார்கள்

 

Age distribution in Italy 2008-2018

In 2018, about 13.33 percent of the population in Italy fell into the 0-14 year category, 63.92 percent into the 15-64 age group and 22.75 percent were over 65 years of age.

கொரோனா: இருண்டு போன இத்தாலி..!

இத்தாலியில் கொரோனாவின் தாக்குதலுக்கு ஒரே நாளில் 168 உயிரிழந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் முடங்கிப் போய் உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் தனது கொலைக்கரத்தை நீட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டு அரசையும், மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு மிகுந்த பகுதிகளில் மட்டும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தடை உத்தரவு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் கூடுவது மற்றும் பொது இடங்களை திறந்து வைப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், உணவகங்கள், மதுபானக் கூடங்களை மாலை 6 மணிக்குள் மூடிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்கு திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நாடு முழுவதும் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இதனிடையே இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள புக்லியா சிறையில்ர கொரோனாவைக் காரணம் காட்டி தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் சிக்கி 6 கைதிகள் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

https://www.polimernews.com/dnews/103305/கொரோனா:-இருண்டு-போனஇத்தாலி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.