Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வைரஸ் பரவினால் கட்டுப்படுத்துவது சவாலாகும் : சுகாதார அமைச்சர் 

Featured Replies

(நா.தனுஜா)


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கைப் பிரஜை கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இதன் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார்.

சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அது அபிவிருத்தியடைந்துவரும் எமது நாட்டிற்குள் பரவுமானால், அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விடயமாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜசிங்க ஆகியோர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்பில் பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தினர்

அங்கு அவர்கள் கூறிய விடயங்கள் வருமாறு:


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கைப் பிரஜை

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் முதலாவது இலங்கைப் பிரஜை நேற்று இரவு கண்டறியப்பட்டிருப்பதுடன், தற்போது அங்கொடையில் உள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் அவரை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவரே கொவிட் 19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்.
இவர் சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டியாகப் பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் இத்தாலிய சுற்றுலாப்பயணிகள் சிலருக்கு வழிகாட்டியாட்டியாக செயற்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று இரவு கண்டறியப்பட்ட நிலையில், அவர் உடனடியாகத் தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதுமாத்திரமன்றி தொற்றுக்குள்ளான நபரின் உறவினர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் தொடர்புகளைப் பேணிய இத்தாலியர்கள் நாட்டைவிட்டுச் சென்றிருக்கும் நிலையில், இலங்கையில் அவர்கள் பயணித்த இடங்கள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

உலகின் அபிவிருத்தியடைந்த சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் சுகாதார சேவைகள், அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் மிகவும் முன்னேற்றகரமான நிலையில் காணப்படுகின்றன.

அவ்வாறிருந்தும் கூட, அந்நாட்டுப் பிரஜைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவால்மிக்கதாக மாறியது. தொற்றுக்குள்ளான பலர் உயிரிழந்தார்கள். எனவே அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகியிருக்கின்ற நிலையில், இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாட்டில் அந்நோய் பரவினால் அதனைக் கட்டுப்படுத்துவதும், இல்லாதொழிப்பதும் மிகவும் கடினமான காரியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
 

எனவே எமது நாட்டுப் பிரஜைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் இலங்கையர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் இலங்கை மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
உலகில் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் நிலையில், அத்தகைய நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றின் மூலம் எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.
அதேவேளை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகள் அனைவரும் புணானை மற்றும் கந்தக்காடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு 14 நாட்கள் வரை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியில் செல்லமுடியும்.

எமது நாட்டில் இத்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், நாட்டுமக்களின் நன்மை கருதியும் நாம் இதனைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது தொடர்பில் சிலர் விமானநிலையத்தில் முரண்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் இந்நோய் நிலைமையில் பாரதூரத்தன்மையை அறிந்துகொள்ளவில்லையா? அல்லது வெறுமனே சுயநலமாகச் சிந்திக்கின்றார்களா? என்று எமக்குப் புரியவில்லை. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் உரிய பரிசோதனைகளில் ஈடுபடாமல் அவர்களது வீடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பின் அது அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இந்நிலைமையின் பாரதூரத்தன்மையை அனைவரும் நன்கு புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

 

தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையம்
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிவரும் நிலையில், அது நாட்டிற்குள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கண்காணிப்பதற்காக தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு, குடியகல்வு மற்றும் குடிவரவுத் திணைக்களம், இராணுவம் என்பன இணைந்து புணானை, கந்தக்காடு ஆகிய இடங்களில் தொற்றுத்தடுப்பு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெந்தலை மற்றும் தியத்தலாவை ஆகிய இடங்களிலும் அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக தென்கொரியா, சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வரும் பயணிகள் பாதுகாப்பான முறையில் கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்களுக்கு அவசியமான அனைத்து வசதிகளும் தயார்செய்யப்பட்டுள்ளன.

 

மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை
சுமார் ஒன்றரை மாதகாலத்திற்கு முன்னர் சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 33 மாணவர்கள் தியத்தலாவையில் உரிய கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோன்று தற்போதும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களில் இருவாரங்கள் வரையில் முறையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். எனவே பொதுமக்கள் இதுகுறித்து வீணாக அச்சம்கொள்ளத் தேவையில்லை.

நாட்டில் தீவிரவாத அச்சம் காணப்படுவது போன்றதொரு அசௌகரியமான நிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படினும், அதன் அவசியத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் இந்தியாவின் தம்பதீபவிற்கு வழிபாடுகளுக்குச் செல்வதனைத் தவிர்க்குமாறு அறிவித்திருந்தோம். அதேபோன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணங்களுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருப்பின் அவற்றைப் பிற்போடுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகளவானோர் கூடுகின்ற பொது இடங்களைத் தவிர்த்துக்கொள்வதும் சிறந்ததாகும். எனினும் அரசாங்கமாக அத்தகைய உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளாத போதிலும், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையுமாயின் பொருத்தமான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை என்பதுடன், சுயநலமாக செயற்படாமல் ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/77584

  • தொடங்கியவர்

வைரஸ் தொற்று நோய்களை கண்டுப்பிடிப்பதற்கான இயந்திரத்தை சுகாதார அமைச்சரிடம் கையளித்தார் பிரதமர்

கொரோனா வைரஸ் உட்பட வைரஸ் தொற்று நோய்களை கண்டுப்பிடிப்பதற்கான பி .ஆர். சி. இயந்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.

26-PM_Corona_Machine.jpg


பிரதமரின் விஜயராம இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது இயந்திரம் கையளிக்கப்பட்டது.

30000 டொலர் பெறுமதியான இந்த இயந்திரம் கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவரை அடையாளப்படுத்த முடியும். மிக இலகுவில் பயன்படுத்த கூடிய இந்த இயந்திரம் பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கப் பெற்ற பரிசாகும்.

கொவிட் -19 வைரஸ் உலக  நாடுகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனக்கு கிடைத்த தனிப்பட்ட பரிசை சுகாதரா அமைச்சுக்கு வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/77577

 இலங்கை அரசு முடியுமானவரை கொள்ளை னாய் பரவியுள்ள நாடுகளுடனான தொடர்புகளை குறைந்தது ஒரு மாதமேனும் இடைநிறுத்துவது நல்லது। இப்போது மேட்கு ஐரோப்பிய நாடுகளில் இது தீவிரமாக பரவுவதால் அந்த நாடுகளுடன் தொடர்புகளை துண்டிப்பது நாட்டுக்கு நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 8:11 PM, ampanai said:

பி .ஆர். சி. இயந்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.

26-PM_Corona_Machine.jpg

அவனவன் கோடிக்கணக்கில் பணத்தை தண்ணீராக இறைத்து ஆராய்ச்சிக்கு செலவு செய்து கொண்டுருக்க..

இவயள் "ஜெராக்ஸ் மிசினை" வைத்து கொண்டு படம் காட்டுகினம்..☺️

Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவனவன் கோடிக்கணக்கில் பணத்தை தண்ணீராக இறைத்து ஆராய்ச்சிக்கு செலவு செய்து கொண்டுருக்க..

இவயள் "ஜெராக்ஸ் மிசினை" வைத்து கொண்டு படம் காட்டுகினம்..☺️

Mr புரட்சி, எமது தலைவரை இப்படி அவமானப்படுத்துவது அவ்வளவு நல்ல இல்லை। கொரியாவிலிருந்து பெரிய விலை கொடுத்து கொண்டுவரப்படட இயந்திரம் இது।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.