Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பகுதிகளில் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல்கள் மையங்கள் எதற்கு – கூட்டமைப்பு கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA.jpg

தமிழர் பகுதிகளில் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல்கள் மையங்கள் எதற்கு – கூட்டமைப்பு கேள்வி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக ”Batticallo Campus’ இனை அரசாங்கம் உபயோகிப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்ற அதேவேளை, ஏன் இந்த ஆபத்தான நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

எனவே நாட்டில் ஒரு சுமூக நிலைமையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கமானது மக்கள் செறிவற்ற பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டுபிடித்து இத்தகைய தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும் என நாம் வேண்டுவதோடு, மக்களின் அபிப்பிராயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் என்பதனையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழர்-பகுதிகளில்-மாத்தி/

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாவின் கம்பஸ்சை ஆட்டய போடவே...., 

இது ஒரு புறம்போக்கான இடம் , இங்கு தனிமைப்படுத்துவதட்கான இடத்தை அமைப்பதை யாரும் ஆட்ச்சேபனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை। கண்டகாடு, பொலநறுவை மாவட்த்தில் இது போன்று அமைக்கப்பட்டுள்ளது। வத்தலை தொழுநோயாளர் விடுதி, தியத்தலாவ ராணுவ முகம் போன்றவையும் தயார்படுத்தப்படுகின்றது। எனவே அரசியல் காரணங்களுக்காக சுமந்திரன் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை।

’வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது இனவாதச் செயற்பாடே’

-க. அகரன்

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி, கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு, இனவாதத்தின் வெளிப்பாடென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இவ்வுயிர்க்கொல்லி வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமென்றும் அவர் கூறினார்.

எனினும், இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் தடுப்பு முகாமை, வடக்கு - கிழக்கை மய்யப்படுத்தி அமைப்பதானது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

“கடந்த வருடம், இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னரும், இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளை உடனடியாக வவுனியாவுக்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது. இதற்கு, வவுனியா மக்கள் எதிர்ப்பை காட்டிய போதிலும், அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

“இதேபோன்றதான மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக, தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளைப் பார்க்கும் போது, எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசாங்கம் செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.

“இவ்வாறான முகாம்களை ஹம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை ஹம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு அனுப்பி, அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும் போது, எதற்காக வடக்கு - கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது, இன அழிப்புக்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத் தோன்றுகின்றது” என, அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வவனயவல-க-ரன-தடபப-மகம-அமபபத-இனவதச-சயறபட/72-246844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.