Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா!

44.jpg

தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்று, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவும் வைரஸ் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் மருத்துவத் துறையை மட்டுமல்லாமல் மக்களின் மன நலனையும், சமுகத்தையும், தேசத்தையும் பாதிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பை ஒருவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது மூன்று காரணிகளைப் பொறுத்தது. அவை தனிநபர், சமூகம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவையாகும்.

 

சீனாவில் கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் ’வாங்’ என்பவரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ”53.8 சதவிகித மக்கள் உளவியல் தாக்கத்தை மிதமானது முதல் கடுமையானதாக மதிப்பிட்டதாகவும். 16.5% மக்கள் கடுமையான மனப்பதற்றத்தில் இருப்பதாகவும் மதிப்பிட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மனரீதியான பாதிப்புகள், நோய் எவ்வளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, மரணமடைபவர்கள் விகிதம் மற்றும் மருத்துவ நிவாரணங்கள் கிடைக்கும் நிலையைப் பொறுத்து இருக்கிறது.

மன அழுத்தம் உள்ளதற்கான அறிகுறிகள்

1)ஒருவரின் உடல்நிலை அல்லது குடும்பத்தினரின் உடல்நிலை குறித்த அதீத கவலை

2)தூக்கமின்மை, பசியின்மை, உடல் சோர்வு

3)மனச்சோர்விற்கான அறிகுறிகள், தற்கொலை எண்ணங்கள்

4)தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், மது போன்ற பொருட்களுக்கு அதிகமாக அடிமையாதல்

5)எரிச்சல், கோபம்

6)ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்தல்

7)சானிட்டைசர்கள், மற்றும் முகமூடி போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்ற அழுத்தமே மனப்பதற்றத்தை உருவாக்கும்

 

8)புதிய மற்றும் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியாத ஒரு நோயை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயம்.

44a.jpg

யார் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள்?

1)வயதானவர்கள் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கொரோனா வைரஸ் தாக்கும்.

2)குழந்தைகள், பொதுவான தங்களின் வாழ்க்கை முறை மாறுவதாலும், பெற்றோர்களின் மனப்பதற்றத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

 

3)மருத்துவத் துறை சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்பு இருப்பதாலும், அதிக நேரம் வேலை செய்வதாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

4)ஏற்கனவே மனரீதியிலான பாதிப்புகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

5)தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அவர்கள் நிலை என்னவாகும் எனத் தெரியாமலும், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து கவலையும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

1)வைரஸ் தாக்குதல் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுதல்.

2)சுகாதாரத்தை அளவுடன் பேணுதல்.

3)சமூக வலைதளங்களில் வரும் நம்பகத்தன்மையற்ற செய்திகளைப் படித்து தேவையற்ற மன பதட்டத்தை ஏற்படுத்தி கொள்ளாமல் இருத்தல்.

4)மன அமைதிக்காக யோகா, நடைப்பயிற்சி, இசை, வாசித்தல் என ஏதாவது ஒன்றை மேற்கொள்ளுதல்.

5)மருத்துவத் துறை பணியாளர்கள் அளவுக்கு அதிகமாக வருத்திக்கொள்ளாமல் இருத்தல்.

6)தனியாக இருப்பது சரிதான் என்றாலும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டும், மனரீதியாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் சரியல்ல.

7)சமாளிக்க முடியாத நிலை வரும்போது மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும்

தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் அவர்களுடன் பேச வேண்டும், தேவையான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதைக்கூறிப் புரிய வைக்க வேண்டும். தவறான தகவல்களைக் குழந்தைகள் அறிந்து கொள்வதிலிருந்து தடுக்க வேண்டும்.

உலக சுகாதார மையத்தின் தலைவர் ஆதோனம் கேப்ரியேசிஸ் கூறுகையில், ”கொரோனா மனிதர்களிடம் இருக்கும் சிறந்த அல்லது மோசமான குணங்களை வெளியே கொண்டுவரும் வாய்ப்பாகும். அது நல்ல குணங்களையே வெளிக்கொணரும் என நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து

Dr. Thara, Director, Schizophrenia Research Foundation and Dr. Lakshmi Vijayakumar, founder of suicide prevention group

தமிழில் : பவித்ரா குமரேசன்

 

https://minnambalam.com/public/2020/03/20/44/because-the-mind-matters

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று,  எனது நகரத்தில்..... கொரோனா நோயால் பாதிக்கப் பட்டு,
வீட்டில் இருந்து.... சிகிச்சை  எடுத்துக் கொண்டு இருந்தவர்கள்...
முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையத் தொடர்புகள் மூலம், ஒன்று திரண்டு...
"கொரோனா பார்ட்டி"  என்ற நிகழ்வை நடத்தி முடித்து இருப்பது,
பலருக்கும்...  சரியான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனால்...  இங்கும், கடுமையான  நடவடிக்கைகள்... திங்கள் கிழமையிலிருந்து வரலாம். 
அதற்கான... முன் எடுப்புகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது.
அந்த அறிவித்தல்... நாளையோ... மறு தினமோ... வரும் என சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா!

என்ரை மூனாவுக்கு வந்திட்டுது போலை கிடக்கு...
நாளை ஆளை சந்திச்சு கதைச்சால் நிலவரம் தெரியும்.
மூனாவுக்கு வயது72 எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

என்ரை மூனாவுக்கு வந்திட்டுது போலை கிடக்கு...
நாளை ஆளை சந்திச்சு கதைச்சால் நிலவரம் தெரியும்.
மூனாவுக்கு வயது72 எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.😎

தாத்தா முனாவை விட்டு த‌ள்ளி இருங்கோ , ஏதும் க‌தைக்க‌ வேண்டி இருந்தா போனுக்காள் க‌தையுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ...ஆட்கள் ஓடி ,ஓடி பொருட்களை வேண்டிப் பதிக்குவதை பார்த்தும் ,இவனுக்கு கொரோனா இருக்குமோ அவளுக்கு கொரோனா இருக்குமோ என்ற பயத்திலேயே மன  வருத்தம் அல்லது ஹாட் அட்டாக் வந்திடும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.