Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஊடரங்குசட்டவேளையிலும் திறந்திருக்கும் மதுபானசாலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் நாடுமுழுவது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டபாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்று உள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘ரவி றெஸ்ரோறன்ட்‘ என்ற பெயரில் இயங்கும் குறித்த சாராயக்கடை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்திலும் விற்பனையில் ஈடுபடுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் இவ்வாறு பொறுப்பற்று நடக்கும் ஒரு சிலரால் யாழ் மாவட்டத்தை வைரஸ் பிரச்சனையிலிருந்து யாராலும் பாதுகாக்க முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

https://www.todayjaffna.com/182374

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திகுறித்து நீங்கள் யாழ்குடாநாட்டின் நலன்கருதியும் மக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு கருதி உரியநடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தமாறு கோரி ஏன் நாங்களே இந்தச் செய்தியையும் இணைத்து ஒரு மடலை ஆளுணருக்கு அனுப்பினால் என்ன?  

Hon. Mrs. P. S. M. Charles

Tel: +94-21-2219375
Fax: +94-21-2219374
Email:hgnp.op@gmail.com

அவசரகால நிலைமையின் கீழ், மதுபான கடைகளை திறக்கலாம். ஒருபுறம் அது வரிப்பணத்தை அரசிற்கு தரும், மறுபுறம் கள்ள குடிவகைகளை குடித்து அதனால் மருத்துவசாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும். மற்றும், சிலருக்கு குடியே மருந்தாயும் உள்ளது, 

ஆனால் ஊடரங்கு நேரத்தில் கடையை திறந்தது என்பது, இது உள்ளூர் காவல்துறையின் 'ஆதரவுடன்' நடந்துள்ளது என தெளிவாக கூறுகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.