Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சிக்கித்தவிக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பயணிகள்

Featured Replies

(ஆர்.யசி)

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த 18, 093 சுற்றுலாப்பயணிகள் தமது மீள் பயணத்தை உறுதிசெய்து நாட்டினை விட்டு வெளியேற எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

air.jpg

 

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரமாக இலங்கை அரசாங்கம் நாட்டுக்கான விமான சேவைகளை தடை செய்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் மீண்டும் அவர்களின் பயணங்களை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரசபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள வெளிநாட்டவர் மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்ததில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக பயணிகள் வெளியேற மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலதிலும் கூட நாட்டினை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு முழு அனுமது வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது பயண அனுமதி பத்திரங்களை காண்பித்து நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தேனும் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பையும் அரசாங்கம் விடுத்திருந்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள பயணிகள் இலங்கையில் எங்கு பயணம் செய்திருந்தாலும் அவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வதற்கு சிரமங்களை சந்திப்பார்கலாயின் அவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் இலங்கை சுற்றுலாத்துறை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வித்தல் 117 என்ற இலக்கத்தையும் 1912 என்ற இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/78707

  • தொடங்கியவர்

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் விரும்பினால் வீடு திரும்பலாம் - இலங்கை சுற்றுலா சபை

(நா.தனுஜா)

இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீண்டும் அவர்களது நாடுகளுக்குச் செல்ல விரும்பும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் சுற்றுலாப்பயணிகள் 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தம்மைத் தொடர்புகொண்டு பேசமுடியும் என்றும் இலங்கைச் சுற்றுலாச்சபை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சுற்றுலாச்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மிக்க சூழ்நிலையில், நேற்று புதன்கிழமை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கிட்டத்தட்ட 18,093 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக நாம் வெளிவிவகார அமைச்சுடனும் உரிய தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் நாட்டிற்குள் தரையிறங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வெளிநாட்டவர்கள் எவரேனும் சுற்றுலாப்பயணம் அல்லது வேறு வேலைகளின் நிமித்தம் இலங்கைக்கு வருகைதந்து இங்கு தங்கியிருப்பார்களெனின் அவர்கள் மீண்டும் தமது நாட்டிற்குத் திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலாப்பயணத்துறை சார்ந்த தொழிற்துறையில் ஈடுபடுபவர்கள், தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாட்டிற்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாடளாவிய ரீதியில் ஊரங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், விமான டிக்கெட்டை ஊரடங்கின் போது பயணிப்பதற்கான அனுமதியாகப் பயன்படுத்த முடியும் என்று பதில் பொலிஸ்மாதிபர் தெரிவித்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள், உங்களுக்கு அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 1912 என்ற அவசர இலக்கத்தினூடாக எம்மையோ தொடர்புகொள்ள முடியும்.

https://www.virakesari.lk/article/78697

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ampanai said:

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வளவு பேர் உள்ள இருக்கினம் கொரனோ  பரவும் விகிதம் கடந்த இரு நாட்களில் குறைவாக உள்ளதாய் கணக்கு காட்டுகினம் எங்கையோ உதைக்குதே ........

8 minutes ago, ampanai said:

அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வேற ஒன்டுமில்லை. ராஜபக்ஷ கோஸ்டிட உறவினர் நிறைய இந்த நாடுகள்ல இருப்பீனம் என்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
3 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு பேர் உள்ள இருக்கினம் கொரனோ  பரவும் விகிதம் கடந்த இரு நாட்களில் குறைவாக உள்ளதாய் கணக்கு காட்டுகினம் எங்கையோ உதைக்குதே ........

ஆளுக்கு நாளுக்கு குறைந்தது 20 அமெரிக்க டாலர்கள் என்று பார்த்தாலும் ...

 நாளுக்கு 65 கோடி ...
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.