Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது?

Featured Replies

வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது.

எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. விலங்கு மற்றும் மனிதனின் உடலில் உள்ள செல்கள் இந்த வைரஸ்களை ஆர்வமாக ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஆனால் உடலில் உள்ள செல்கள் தனது சுழற்சிக்காகக் கழிவுகளை வெளியேற்றவும் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் தொடர்ந்து சுருங்கி, விரிவும் போது அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைரஸ் தொற்றுகள் உடலில் எளிமையாகப் புகுந்து விடுகிறது.



வைரஸின் அளவு
நமது உடலில் உள்ள செல்கள் இரத்தத்தின் குணாம்சம்கொண்ட ஒரு சிறு உயிர்த்துளி என்றே பொதுவாகக் கூறப்படுகிறது (Cell, RBC). செல்லின் அளவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு மடங்குதான். அதில் பத்தில் ஒரு மடங்காக பாக்டீரியா இருக்கிறது. அந்த பத்திலும் ஒரு மடங்காக கொரோனா போன்ற வைரஸின் அளவு இருக்கிறது. ஆனால் இந்த ரைவஸ்க்கு எந்த மரியாதையும் கிடையாது என்பதுதான் இங்கு முக்கியம். செல்லுக்கு வெளியே தேவையில்லாத ஒரு பொருளாக இருக்கும் இந்த வைரஸ் செல்லின் புரதத்தைப் பயன்படத்தி உள்ளே நுழைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும் குணாம்சம் கொண்டது.

செல்கள் பொதுவாக இயங்குவதற்குத் தேவையான புரதப் பொருள்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வெளியே இருந்து எடுத்துக் கொள்கிறது. அதே போல கழிவுகளை வெளியேற்றவும் செய்கிறது. இதற்காக ஒவ்வொரு செல்லிலும் கதவு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது இந்தக் கதவு திறந்து பின்பு மூடிக்கொள்ளும். செல்களுக்குத் தேவையான சரியான புரதப் பொருட்கள் கிடைக்கும்போது அவற்றை ஏற்பதற்கு கைப்பிடி போன்ற ஏற்பிகளும் இருக்கும். புரதங்களின் வடிவில் ஒரு பகுதி சாவி போன்றே இருக்கும். நல்ல புரதங்கள் இந்த கதவுக்குள் நுழையும் போது சாவி போன்ற அமைப்பினால் எளிதாக உள்ளே நுழைந்து அதன் இயக்கத்தை தொடங்கும். இந்த கதவு, சாவி, கைப்பிடி அமைப்பில் ஒரு கள்ளச்சாவி தான் வைரஸ் கிருமி.



கள்ளச்சாவி
எப்படி புரதங்கள் சாவி போன்ற அமைப்பை வைத்திருக்கிறதோ அதோபோல இந்த வைரஸ்களும் கள்ளச்சாவி போன்ற RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவைத் திறக்கும் சாவி அமைப்பை கொண்டிருக்கின்றன. செல்களில் நடக்கும் இயல்பான நடவடிக்கைகளில் இந்தக் கள்ளச்சாவி போட்டு உள்ளே நுழைந்து விடுகிறது கொரோனா போன்ற வைரஸ்.

ஆனால் எல்லா வைரஸ்களும் எல்லா கதவுகளுக்குள்ளும் (ஓம்புயிரி செல்கள்)  நுழைய முடியாது. எனவே தான் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல வைரஸ்கள் மனிதர்களை தாக்குவதில்லை. மனிதச் செல்களில் (ஓம்புயிரி செல்கள்)  கள்ளச்சாவி போட்டு (RBD புரதம் போன்ற கதவைத் திறக்கும் சாவி) நுழைந்து விடும் வைரஸ்கள் மட்டுமே மக்களுக்கு நோய் தொற்றை வரவழைக்கிறது.

தற்போது கொரோனா வைரஸிடம் மனிதன் மற்றும் விலங்குகளில் உள்ள செல்களில் புரதத்தை பற்றிக்கொள்ளும் கள்ளச்சாவி இருக்கிறது. அந்தக் கள்ளச்சாவி தான் CoV-2 ஆகும். கொரோனா வைரஸிடம் உள்ள கள்ளச்சாவி அதாவது அதன் வடிவம் ஒரு மென்மையான பூப்பந்துபோலவும் அதைச்சுற்றி சூரியக் கதிர்கள் போல முட்கள் இருக்கின்றன. இந்த முட்கள் அதாவது புரதத்தைக் கொண்டு நமது செல்லுக்குள் உள்ளே நுழைந்து விடுகிறது. நுழைந்த வைரஸ்கள் ஒவ்வொரு செல்லாக அனைத்து செல்லிலும் பரவி உடலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கும்போது செல்களை பலிமிழக்கச் செய்யும் கொரோனா வைரஸை அழிக்க மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். செல்கள் பலமிழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இதில் அடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் நேரடியாக சுகாவ உறுப்புகளைத் தாக்கி அழிக்கும் தன்மைக்கொண்டிருப்பதால் தற்போது உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்து இருக்கிறது.

சாதாரணமாக மனித உடல் சுவாசிக்கும் தன்மை இழந்துவிட்டால் மட்டுமே மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களை பயன்படுத்துவார்கள். ஆனால் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு சுவாசக் கருவி தேவைப்படுகிறது. நேரடியாக சுவாசத்தை நிறுத்திவிடும் அபாயம் இருப்பதால்தான் கொரோனாவை பார்த்து உலகநாடுகளே அஞ்சுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.



வைரஸ் என்றால் என்ன??? கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது???
மேலும், நோய் எதிர்ப்பு மண்டலங்கள் உறுதியாக இருக்கும்போது கொரோனா வைரஸ் தாக்காது எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இது ஆய்வில் இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை. இளைஞர்கள் கொரோனா வைரஸால் மாட்டிக்கொள்ளும்போது அவர்களது சுவாச உறுப்புகள் உறுதியாக இருக்கும்பட்சத்தில் பிழைத்துக்கொள்ள முடியும். குழந்தைகள், பெரியவர்கள் இந்த வைரஸால் தாக்கப்படும்போது கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க கூடுமான வரை சமூக விலகலை கடைப்பிடிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

https://www.tamilarul.net/2020/04/2_16.html

  • தொடங்கியவர்

#நுண்ணுயிரிகள்

நுண்ணுயிரிகள் கண்ணுக்கு தெரியாதவை. அதில் பல நன்மை அளிப்பவை. சில மட்டுமே கெடுதல் விளைவிக்கும். அதிக நோய் பரப்புகிற கிருமி வோல்பேக்கியா எனும் பாக்டீரியா. ஆனால் அது மனிதர்களைத் தாக்குவதில்லை. மாறாக அது இறால், புழுவைத் தாக்கும் என்கிறார்கள். முற்காலத்தில் பலர் வியாபாரம் செய்ய வெளிநாடுகள் சென்றாலும் கடல் பயணத்தில் உப்புக்காற்றில் அழிந்துவிடும் என நம்பினர். ஒரு வேளை கிருமிகள் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை வென்றனர்.

 

#வைரஸ்

வைரஸ் என்ற சொல்லுக்கு நச்சு என்பது பொருள். கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி. இது மிக நுண்ணிய துகள்களாகும். இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை. பொதுவாக 20nm 300nm வரை விட்டமுடையவை. TMV வைரஸின் அளவு 300*20nm ஆகும். (1892ல் கண்டறியப்பட்ட புகையிலை தேமல் வைரஸ்)

வைரஸ் ஒரு ஒட்டுண்ணி. தனித்திருக்கையில் அவை செயலற்றவையும் தீங்கற்றவையும் ஆகும். ஆனால் பொருத்தமான செல்களில் ஒட்டிக்கொண்டால் சுறுசுறுப்பாகிவிடும். ஓர் உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லிலுள்ள திட திரவப் பொருள்களை உட்கொண்டு பல்கிப் பெருகிவிடும். இதுவரை 5000 வகை வைரஸ்கள் அறியப்பட்டுள்ளன. ஜலதோசத்தில் தொடங்கி எய்ட்ஸ் வரை நம்மைப் பாதிக்கின்றன.

 

#வேலைனு வந்துட்டா வைரஸ்காரன்

உயிருள்ள பொருளில் முதலில் தங்கி அதிக வைரஸ்களை உற்பத்தி செய்கிறது. பின்னர் தாக்குவதற்கு நிறைய செல்களைத் தேடி அழிக்கிறது. HIV உள்ளிட்ட வைரஸ்கள் சில மரபணுக்களையே வைத்திருந்தாலும் அதன் பாதிப்பு அதிகம். இவை அனைத்தையும் மின்னணு நுண்ணோக்கியில்தான் காண முடியும்.

பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களுக்குப் பாக்டீரியோபேஜ் என்று பெயர். வைரஸில் RNA அல்லது DNA ஏதாவது ஒன்றுதான் காணப்படும். தாவரங்களை தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள். மனிதர்களை DNA மற்றும் RNA இரண்டுமே தாக்கும்.

HIV விலங்கு வைரஸாக இருப்பினும் RNAவைக் கொண்டுள்ளதால் மனிதர்களைத் தாக்கும். எய்ட்ஸ் கிருமியால் மனிதர்கள் இறப்பதில்லை. இது T லிம்போசைட் எனும் முக்கிய வெள்ளை அணுவில் புகுந்து வளர்ந்து அதை அழிக்கிறது. இதனால் சாதாரண கிருமிகளை அழிக்கும் திறனைக் கூட உடல் இழந்துவிடுவதால் மரணம் வருகிறது. 1959ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதலில் HIV கண்டறியப்பட்டது.

#வைரஸ் பரவுவதல்

வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாகப் பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.

* எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம்.

* எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக டெங்குக் காய்ச்சல் வரும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.

* பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தற்போதைய கொரோனாவைக் குறிப்பிடலாம்.

 

#வைரஸ் நோய்கள்

தாவரங்களுக்கு 10 வகையான நோய்கள் வைரஸ்களினால் ஏற்படுகின்றன. விலங்குகளுக்குக் கோமாரி நோய், வெறிநாய் கடி, குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

மனிதர்களுக்கு சளி, ஹெப்பட்டைடிஸ் B, புற்றுநோய், சார்ஸ், எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பொன்னுக்கு வீங்கி, இளம்பிள்ளைவாதம், சிக்கன் குனியா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை ஏற்படுகிறது. தற்போது கொரோனா நோய் severe acute respiratory syndrom=Sars-2 என்ற வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் உருவாக்கும் நோயே கோவிட்-19.

இதுவரை உலகை உலுக்கிய முக்கிய நோய்க்கிருமிகளாக ஜிபா, நிபா, எபோலோ, சார்ஸ், மெர்ஸ், லஸ்ஸா, மார்பர்க் ஆகியவற்றைச் சொல்லலாம்.

#தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து (vaccine) நோய் ஏற்படுவதற்கு முன் உடலில் வீரியம் குறைந்த நோய்க் கிருமியைச் செலுத்தி குறிப்பிட்ட நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிராய் தடுப்பு மருந்து பயன்படுத்த முடியும்.

மற்றொன்று antibiotic எனும் எதிர் உயிரி மருந்து. நோய் வந்தபிறகு அந்நோய்க் கிருமிகளை நேரடியாய் அழிக்கப் பயன்படுவது. இது பாக்டீரியா நோய்களுக்கு எதிராக மட்டுமே செயல்படக்கூடியவை. வைரஸ்கள் செல் அற்ற வளர்சிதை மாற்ற நிகழ்வை மேற்கொள்ளாத நுண்ணுயிரி ஆதலால் இவற்றை antibiotic களால் அழிக்க முடியாது.

#கொரோனாவுக்கு ஏன் தடுப்பு மருந்து இல்லை?

வைரஸ்களை அழிப்பதுவும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்கள் வடிவம் மற்றும் தன்மைகளை மாற்றிக்கொள்ளும். அதனாலேயே பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை.

வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை வைரஸ் நோவல் கொரோனா என்று பெயர். இவ்வைரஸ் தாக்குதலில் ஈடுபடும் நோய் எதிர்ப்பு செல்களில் நுழைத்து சேதப்படுத்தி குழப்பமடைய வைக்கின்றன. உதாரணமாக கொரோனா வைரஸ்களை அழிப்பதற்கு பதில் தம் நோய் எதிர்ப்புச் செல்லையே அழித்துவிடுகிறது. நன்றாய் இருக்கும் நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் நிமோனியா தாக்குதலால் மரணம் ஏற்படுகிறது.

நம் கண்ணை வைத்து நம்மையே குத்த வைக்கிறது கொரோனா. லட்சக்கணக்கான வகைகளில் மாறிக்கொண்டே இருப்பதால் அடையாளம் கண்டு அழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.

எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கடந்த காலம் ஆச்சர்யக் குறியாகவும் இருக்கிறது தற்போது. ஆகவே கடும்காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்போம்.

எனவே நோய் நாடி நோய் முதல் நாட தனிமையை நாடுவோம்

-மணிகண்ட பிரபு

https://www.vikatan.com/health/miscellaneous/article-about-virus-and-types

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.