Jump to content

வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் (2014 Movie)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம்

1790.jpg  

 

பேச்சுதான் படத்தின் மையம். மனதை விட்டுப் பேசுங்கள், மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் – இதுதான் படத்தின் ஆதாரமான செய்தி. இந்தச் செய்தியைத் துளிக்கூட சீரியஸ் தன்மையோ வன்முறையோ இல்லாமல் அழகான மலைப் பிரதேசத்தின் பின்னணியில் மெல்லிய சாரலாய்த் தெளித்தி ருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன்.

பேச வேண்டியதைப் பேசாமல் போனால் என்ன ஆகும்? தேவையே இல்லாமல் பேசினால் என்ன ஆகும்? சுத்தமாகப் பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்? - சில துணைக் கதைகளின் உதவியோடு இதையெல்லாம் பேசுகிறார் இயக்குநர்.

பனிமலை கிராமத்தில் ‘ஊமைக் காய்ச்சல்’ என்ற வித்தியாசமான நோய் பரவுகிறது. நோய்க்கு ஆளானவர்கள் பேசும் திறனை இழக்கின்றனர். பேசுவதாலேயே நோய்க் கிருமிகள் பரவுவதாகக் கூறி, ஊர் மக்கள் பேச அரசு தடை விதிக்கிறது. நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவுடன் பேச விதித்த தடையை அரசு விலக்கிக்கொள்கிறது. இப்படிப் பேச்சுக்கும் மௌனத்துக்கும் இடையே நடக்கும் சலனங்கள்தான் திரைக்கதை.

படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள். மனதில் பட்டதைப் பளிச்சென்றும் நயமாகவும் பேசும் அர்விந்த் (துல்கர் சல்மான்), தனக்குப் பிடிக்காததை வெளிப்படையாகச் சொல்லும் துணிவில்லாத அஞ்சனா (நஸ்ரியா நசீம்), கட்டுப்பாடுகள் விதிக்கும் காதலன், எதையாவது உளறிப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் அரசியல்வாதி, அடையாளம் பெறுவதற்கான அவஸ்தையில் இருக்கும் வித்யா (மதுபாலா), தனக்கு ஓவியத்தில் நாட்டம் என்பதைச் சொல்ல முடியாத சிறுவன், மகனை வெறுப்பதோடு அனாதை இல்லத்தைக் காலி செய்வதில் கறாராக இருக்கும் பெரியவர் (வினுசக்கரவர்த்தி), நடிகர் உமேஷ் (ஜான் விஜய்), குடிகாரர்களின் சுயமரியாதையைக் காக்கப் போராடும் குடிகாரர் சங்கத் தலைவர், நடிகரின் உரிமை காக்கப் போராடும் ரசிகர் மன்றத் தலைவர் எனப் பலரும் வருகிறார்கள்.

பேச்சைப் பறிக்கும் நோய் இவர்கள் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதிக்கிறது என்பதை வேடிக்கையாகச் சொல்ல முயன்றிருக்கிறார் பாலாஜி. முதல் பாதி முழுவதும் பேசிப் பேசிக் கலகலப்பூட்ட முயல்கிறார். அரசியல்வாதியைக் கிண்டலடிப்பது, ரசிகர் மன்றத்தைக் கேலி செய்வது, செய்தி சேனல்களைக் கிண்டலடிப்பது என எல்லாவற்றிலும் காமெடி. எல்லாமே மிகையான ஸ்பூஃப் வகை. சில இடங்களில் சிரிக்க முடிகிறது.

துல்கர் சல்மானின் துறுதுறுப்பும் நஸ்ரியாவின் அமைதியும் படத்தின் பலம். சல்மான் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகச் செய்திருக்கிறார். மெல்லிய சோகத்துடன் நடமாடும் பாத்திரத்தில் நஸ்ரியா கவர்கிறார். நீண்ட நாள் கழித்துத் திரையில் தலை காட்டியிருக்கும் மதுபாலா 1990களில் பார்த்தது போலவே இருக்கிறார். மௌனமாகப் பேசும் காட்சிகளில் நஸ்ரியாவும் மதுபாலாவும் தங்கள் விழி மொழி மூலம் தனித்து நிற்கிறார்கள்.

செய்தி வாசிப்பாளராக டி.வி.யில் தோன்றிச் சிரிக்க வைக்கும் பாலாஜி, ஒரு கட்டத்தில் சலிப்படையவும் வைக்கிறார்.ரோபோ சங்கரும், ஜான் விஜய் யும் திரைக்கதையில் திணிக்கப்பட்டிருந்தாலும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். உளறி மாட்டிக்கொள்ளும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் கச்சிதம்.

இரண்டாம் பாதியில் வசனங்கள் இல்லாமல் கதையை நகர்த்த வேண்டியிருக்கும் சவாலில் ஜெயிக்கிறார் இயக்குநர். இந்த மௌனத்தைத் தன் இசையால் மொழியாக்கம் செய்திருக் கிறார் சியன் ரால்டன். மலைப் பிரதேசத்தை அழகாகக் காட்டி நம் கண்களுக்குக் குளிர்ச்சி தருகிறார் ஒளிப் பதிவாளர் செளந்தர்ராஜன்.

படத்தின் ஆதாரமான கேள்விகள் அனைத்துக்குமான பதில்கள் உடனடியாகத் தெரிந்துவிடுவதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. அடுத்து என்ன என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லை. கிண்டலையும் சில நெகிழ்ச்சியான தருணங்களையும் மட்டுமே நம்பிப் படத்தை நகர்த்தியிருக்கிறார் பாலாஜி. படத்தின் பலமும் பலவீனமும் இதுதான்.

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1790--1.html

 

https://einthusan.tv/movie/watch/2547/?lang=tamil

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட கொரோனா மாதிரிதான் லாக் டவுன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.