Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்பற்ற அதிகாரிகளால் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிதவிக்கும் பெற்றோர்

Featured Replies

யாழ்ப்பாணம் - அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துச் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவருடை நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியுலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும்.

பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.

வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார்.

தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, உரிய நேரத்தில் நோயாளர் காவு வண்டி வந்திருக்குமாயின் அவனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கலங்கி நிற்கிறார்கள் பெற்றோர்கள்.

உயிரிழந்த இளைஞன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்றும் கூறுப்படுகிறது. அதிகாரிகள் பொறுப்பற்ற செயல்பாடுகளினாலும் அசட்டையீனங்களினாலும் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நேரங்களின் போது பொது மக்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு உரிய முறையில் பதில் வழங்கி அவர்களுக்கான சேவையினை அதிகாரிகளும் ஊழியர்களும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தாமதமாக சென்ற நோயாளர் காவு வண்டியில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என உயிரிழந்த இளைஞனை அழைத்துச் சென்ற மற்றொரு இளைஞன் கருத்து வெளியிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140748?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

யாழில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொடர்ச்சியாக நீடித்துவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதி, தென்மராட்சி, வடமராட்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

இதய சிகிச்சை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், மனநோய், கண் நோய், போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை பெறுவதிலேயே நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குப் பின்னர் மாதாந்த சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கான மருந்துகள் தொலைபேசி மூலமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சில பேருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மருத்துவர்கள் அவர்களுக்கு மருந்து வழங்குமாறும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/140757

1 மாதம் போயும் அம்பியூலன்ஸ் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகளை பொறுப்பிலுள்ள மருத்துவ அதிகாரிகள் செய்து குடுக்க தவறியுள்ளனர்.

தலைவலி என்டால் தலையை வெட்டு என்டு முடிவெடுக்கிற முட்டாள்கள் தான் நோயாளர்களுக்கு உதவாத நடைமுறைகளை முடிவு செய்றாங்கள் என்டு தெரியுது.

இந்த அநியாய உயிர்ப்பலியாவது இந்த முட்டாள்களின் கண்களை திறக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவாலும், பட்டினியாலும், அலட்சியத்தாலும் போகிறவர்கள் போக. மிஞ்சி இருக்கிறதை இருக்கிறவர்கள் காணவேண்டியதுதான். அறிவியலும் கைவிட்டது, கண்டுபிடிப்புகளும் முடியவில்லை.  யாரை நோவது?   

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - அராலியில், திடீரென உடல் நலம் பாதித்த இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், குறித்த இளைஞன் தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற போது அவரது நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியூலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியூலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும். பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.

வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார். தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://seithy.com/breifNews.php?newsID=243810&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.