Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில், சிறுவர்கள் இருவர் கிணற்றில் வீசப்பட்டு கொலை – தந்தை கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1586826013969.jpg

மட்டக்களப்பில், சிறுவர்கள் இருவர் கிணற்றில் வீசப்பட்டு கொலை – தந்தை கைது

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முறையே 10, 07 ஆகிய வயதுகளையுடைய  இரு குழந்தைகளின் சடலங்களையும் பொலிஸார் கிணற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

அஷீமுல் ஹக் (வயது 10) என்ற சிறுவனும், ‪ அஷீமுல்  ஷாஹியா (வயது 07) என்ற சிறுமியுமே சடங்களாக கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக 40 வயதான முஹம்மது லெப்பை சுலைமாலெப்பை என்ற குறித்த சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் கோளாறு காரணமாக மரணித்ததைத் தொடர்ந்து சிறுவர்களை தந்தையே பராமரித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://athavannews.com/மட்டக்களப்பில்-சிறுவர்-2/

  • கருத்துக்கள உறவுகள்
  • திருக்கோவில் நிருபர்

தந்தையார் ஒருவர் நித்திரையிலிருந்த தனது 10 வயது சிறுவன் மற்றும் 7 வயது சிறுமி ஆகிய இரு பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கி வீசியதில் இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலையில் இடம் பெற்றள்ளதாகவும் தந்தையாரை கைது செய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடி மாவடிச்சேனை பாடசாலை பின் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியான அஷிமுல் ஷஹியா 10 வயது சிறுவனான அஷிமுல் ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இரு பிள்ளைகளையும் தந்தையர் பராமரித்து வந்துள்ளதுடன் இருவரையும் கொழும்பில் பாடசாலை விடுதியில் தங்கவைத்து கற்பித்து வந்துள்ளார்.

இந்த நிலையில நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துவந்து பராமரித்து வந்துள்ளநிலையில் சம்பவவதினமான இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நித்திரையில் இருந்த இரு குழந்தைகளையும் தூக்கிகொண்டு சென்று கிணற்றில் வீசியுள்ளார்.

அதன் பின்னர் சகோதரனிடம் பிள்ளைகளை கிணற்றில் வீசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் குறித்த தந்தையார் சற்று மனநிலை பாதிக்கப்பட்வர் எனவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு தெரிவித்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் கிணற்றில் இருந்து இரு வரையும் சடலமாக மீட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் தந்தையாரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

http://thinakkural.lk/article/38706

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்கள் இருவரை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தைக்கு விளக்கமறியல்

image_5e617f780e.jpg

 

எம.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, மாவடிச்சேனை பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்த நபரை, பதினான்கு நாள்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.மொஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

மொஹமட் லெப்பை சுலைமா லெப்பை (வயது 46)  என்பவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) என்ற தனது இரண்டு மகன்களையும், செவ்வாய்க்கிழமை (14) இரவு, தனது வீட்டு வளாகத்திலுள்ள கிணற்றில் தூக்கி எறிந்ததில், அவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவி, ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார் என்றும் சிறுவர்கள் இருவரும், கொழும்பிலுள்ள சிறுவர் இல்லமொன்றிலேயே வளர்ந்து வந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லத்தில், சிறுவர்களை சேர்த்துவிடுவதாகக் கூறி, குறித்த நபர், அவ்விருவரையும் கொழும்பிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து, இரண்டு மாதங்களுக்கு முன்னர்  அழைத்து வந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக, சிறுவர்களை சிறுவர் இல்லத்தில் சேர்த்துவிட முடியததால் சிறுவர்கள், குறித்த நபரின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையிலேயே மேற்படி நபர், செவ்வாய்க்கிழமை(14) இரவு, சிறுவர்களை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக, சடலங்கள் இரண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி விடுமுறையில் உள்ளதால், 18ஆம் திகதி  சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்.
image_5deca54fae.jpgimage_8d15c8e375.jpg

On 14/4/2020 at 04:28, உடையார் said:

இந்த நிலையில நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துவந்து பராமரித்து வந்துள்ளநிலையில் சம்பவவதினமான இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நித்திரையில் இருந்த இரு குழந்தைகளையும் தூக்கிகொண்டு சென்று கிணற்றில் வீசியுள்ளார்.

மனைவியின் இழப்பு, வறுமை மற்றும் சுய தனிமைப்படுத்தல் என இந்த நெருக்குவாரங்களின் மத்தியில் மனத்தை சுமுகமாக வைத்திருப்பது அவசியம் என்பதை இந்த செய்தி காட்டுகின்றது. 

பல நாடுகளில் இவை சம்பந்தப்பட்ட மனித வள அமைப்புக்கள் இருந்தால் அங்கும் முடக்கங்கள், தொலைபேசி சேவைகள் மட்டுமே. 

தெரிந்த உறவுகளிடம் கதைப்போம் !

முடிந்த உதவிகளை செய்வோம்.! !

உயிர்களை காப்போம் !!!

கத்தி குத்தில் கணவன் மனைவி பலி

மனைவியை கத்தியால் குத்தி கொலைசெய்த கணவன், பின்னர் அதே கத்தியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று, கற்பிட்டி பகுதியில் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவிவித்தனர்.

கற்பிட்டி-தொரடிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36,42 வயதுகளையுடைய கணவன் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனரெனத் தெரிவித்த பொலிஸார், குறித்த இருவருக்கிடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே, கொலைக்கு காரணமெனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/வடமேல்-வடமத்தி/கதத-கததல-கணவன-மனவ-பல/94-248651

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.