Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியிடம் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை

Featured Replies

பாறுக் ஷிஹான்

உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் கொவிட்-19 இனால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை வலியுறுத்திக் கேட்டுள்ளது.

இது விடயமாக மேற்படி சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர்கனி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (14) கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"தற்போது சர்வதேச நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொவிட்-19   இலங்கை திருநாட்டையும் விட்டுவைக்கவில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசு காட்டிவரும் அசுர வேகத்தை அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வெகுவாக பாராட்டுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து பாதுகாப்புப் படையினரும் சுகாதாரத் துறை பணியாளர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவது போற்றத்தக்க விலை மதிப்பற்ற செயற்பாடாகும். 

இலங்கைத் திருநாடு, அந்நாட்டில் வாழும் சகல சமயத்தவரையும், சமூகங்களையும் கண்ணியத்துடன் நடாத்திவரும் பாரம்பரியமிக்க நாடாகும். முஸ்லிம்கள் புராதன காலம் தொட்டு அவர்களது சமய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் எவ்வித தங்குதடையுமின்றி மிகச் சிறப்பாக இந்நாட்டில் பேணி வருகின்றனர். எந்த அரசும் அரசாங்கமும் ஒருபோதும் அதற்குத் தடையாக இருந்ததில்லை.கொவிட்-19   தாக்கத்தினால் இதுவரை மூன்று முஸ்லிம்கள் இறந்துள்ளனர். அவர்கள் தங்களது சமய நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பால் எரிக்கப்பட்டு தகனம் செய்யப் பட்டுள்ளனர். உண்மையில் இச் செயற்பாடு இந்நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களதும் மனங்களையும் உணர்வுகளையும் மிகக் கடுமமையாக பாதித்துள்ளன. இதனால் அரசாங்கத்தின் மீது பாரதூரமான அதிருப்தியையும், நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட்-19 போன்ற கொடிய நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில் சர்வதேச அளவில் 180 நாடுகள் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இச்சூழ்நிலையில்  ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் வாழும் சகல சமயத்தவர்களினதும், சமூகங்களினதும் தனித்துவத்தையும், நம்பிக்கையையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமெனவும், கொவிட்-19 போன்ற வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றோம்" என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.

 

http://www.tamilmirror.lk/அம்பாறை/ஜனதபதயடம-அமபற-மவடட-ஜமஇயயதல-உலம-கரகக/74-248540

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி யின் தலைமை மத குரு வின் பேச்சு:

நைஜீரியா, பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள முஸ்லீம் கள் ஏன் அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாமல் மிருகம் போல நடந்து கொள்கிறீர்கள்.. உண்மையான சவூதி மக்கள் நாங்களே வீட்டில் தான் தொழுகை நடத்துகிறோம் நீங்கள் ஏன் இவ்வளவு சுயநலவாதிகளா இருக்கீர்கள்?? என்று கேள்வி கேட்டு உள்ளார்.. உண்மையான முஸ்லீம் இப்படி செய்ய மாட்டார்கள் என்றும் கூறி உள்ளார்..

இதை தான் நாங்களும் சொல்லி கொண்டு இருக்கிறோம் இந்தியாவில் உள்ளவர்கள் ஒரிஜினல் முஸ்லீம்கள் கிடையாது வளைகுடா மக்களே உண்மையா முஸ்லீம்கள்.

(முகப் புத்தக பதிவொன்றின் வீடியோவில் இருந்து பிரதி பண்ணப்பட்டது)

 

மத்திய கிழக்கு காசைக்கண்டவுடன் நாமதான் முசுலீம் என்று மார்தட்டக்கூடாது...75ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த இலங்கை முசுலீமுகள் போல வாழுங்கள்.... அதுதான் சவூதிக்காரன் சொல்லிட்டானெல்லே....இனி பொத்திக்கிட்டு இருங்க..
 
 
 
 
 
 
 
 
 
10,263 Views
 
 
 

 

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

https://sptnkne.ws/CbPC

தற்போது வந்துள்ள செய்தி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.