Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’எம்மை மீண்டும் நாட்டுக்கு அழைத்துக் கொள்ளவும்’

Featured Replies

கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள்  சிலர், தம்மை மீண்டும் இலைங்கைக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இலண்டன், இந்தியா, டுபாய், மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் சிலரே இவ்வாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தியாவில்; 600க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், மே மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் தாம் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவிட்டுள்ளனர்.

அதேப்போல் விசேட வைத்திய பயிற்சிக்காக பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள 85 இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்களின் பயிற்சிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இவர்களும் இலங்கைக்கு தம்மை மீள அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் மாலைத்தீவு, டுபாய் ஆகிய நாடுகளில் பல்வேறு தேவை நிமித்தம் தங்கியிருக்கும் இலங்கையர்கள் சிலரும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/79993

  • தொடங்கியவர்

இலங்கையர்களை அழைத்து வர விசேட நடவடிக்கை

கொரோனா தொற்றால் விமான சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கைக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்;கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடன் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முதலில் எந்த நாட்டிலுள்ளவர்களை அழைத்து வருவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையர்களை-அழைத்து-வர-விசேட-நடவடிக்கை/175-248589

  • தொடங்கியவர்
9 minutes ago, ampanai said:

இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடன் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முதலில் எந்த நாட்டிலுள்ளவர்களை அழைத்து வருவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இவர்களை அழைத்து வர பயம்... 

ஆனால், அரசியல் காரணங்களுக்காக இவ்வாறான போலி அறிக்கைகள்.  

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரரை அழைத்துவந்து வழியனுப்பி வைத்து  விட்டார்களே!

  • தொடங்கியவர்
27 minutes ago, satan said:

சீனாக்காரரை அழைத்துவந்து வழியனுப்பி வைத்து  விட்டார்களே!

உண்மைதான். சீனாக்காரனிடம் காசு வேண்டியவர்கள், அவன் பலசாலி என்ற மதிப்பும் பயமும். 

 அதுவே, தங்கள் சொந்த மக்களிடம் இல்லை. 

ஒருவகையில் எல்லா சிங்களவர்களும் கூட இன்னும் சுதந்திரம் அடையவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

சீனாக்காரரை அழைத்துவந்து வழியனுப்பி வைத்து  விட்டார்களே!

சைனா காரரை இவர்களின் ஏர் லங்கா தான் உலகம் முழுக்க பறந்து  போய்  ஏத்தி ராஜ மரியாதையுடன் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி உள்ளார்கள் இது பற்றி அங்குள்ளவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கினம் எல்லாம் கோத்தா பயம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

உண்மைதான். சீனாக்காரனிடம் காசு வேண்டியவர்கள், அவன் பலசாலி என்ற மதிப்பும் பயமும். 

 அதுவே, தங்கள் சொந்த மக்களிடம் இல்லை. 

ஒருவகையில் எல்லா சிங்களவர்களும் கூட இன்னும் சுதந்திரம் அடையவில்லை.   

வேண்டின பிச்சைக்கு விழுந்து விழுந்து வணங்கினாலும், சீனாக்காரன் ஒரு நாள் எல்லாத்தையும் வறுகிக்கொண்டு போகேக்கை விளங்கும். ஆனால் அப்போ  இந்த ராஜ பரம்பரை இருக்குமோ தெரியாது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.