Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!

south-koria-election-720x438.jpg

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது.

கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடனும் வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிதல் மற்றும் வெப்பநிலை சோதனை என்பனவற்றுடனும் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன.

இதன்படி, வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு 37.5 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை கொண்டவர்கள் சிறப்பு வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்டனர்.

அத்துடன், வாக்களிப்புப் பெட்டிகள் யாவும் ஒரு மீற்றர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த அதேவேளை, மக்கள் சமூக இடைவெளியினைப் பேண வலியுறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், அனைத்து வாக்காளர்களும் வாக்குச் செலுத்தும்போது கை சுத்திகரிப்பு மற்றும் பிளாஸ்ரிக் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து தேசியத் தேர்தலை நடத்திய முதல் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும். மேலும் மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென் கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,591 பேர் இலக்காகியுள்ள அதேவேளை குறித்த வைரஸ் பரவலுக்கு இலக்காகி 225 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கடுமையான-பாதுகாப்பு-நடவட/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தென்கொரிய தேர்தல் : ஜனாதிபதி  மூன் ஜே யின் தலைமையிளான கட்சி வெற்றி

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் தென் கொரியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்கொரிய ஜனாதிபதி  மூன் ஜே யின் தலைமையிளான கட்சி ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது. 

South_koria.jpg

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான பதிலை மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்திய முதல் நாடாக  தென் கொரியாவும் விளங்குகின்றது.

merlin_171462411_2814b087-17a0-47a2-ae2f

இந்நிலையில், வாக்களிப்பதற்கு கடுமையான பாதுகாப்பு மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் பேணப்பட்டன.

வாக்குகளை அளிக்க முன்பு வாக்காளர்கள் சானிட்டைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், முகமூடிகள் மற்றும் பிளாஸ்டிக் கையுறைகளை அணிய வேண்டும், குறைந்தது ஒரு மீட்டர் (3 அடி) இடைவெளியில் நிற்க வேண்டும், மற்றும் அவர்களின் வெப்பநிலை என்பன கடமையாக கண்காணிக்கப்பட்டன.

இத்துடன் உடல் வெப்பநிலை 37.5C க்கு மேல் உள்ள எவரும் தனித்தனி சாவடிகளில் வாக்களிக்க வேண்டியிருந்தது, அவ் வாக்குச்சாவடிகள் ஒவ்வொன்றும் பயன்பாட்டிற்கும் பின்னர் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

2020-04-14T051633Z_131200993_RC254G9ZNDN

இவ்வாறு வாக்கு பதிவு இடம்பெற்று கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 300 ஆசனங்களை கொண்ட தேசிய சட்டமன்றத்தில் மூன் ஜே யின் தலைமையிளான ஜனநாயகக் கட்சி 163 இடங்களை வென்றுள்ளது.

கட்சியின் கிழைக் குழுவான பிளாட்ஃபார்ம் கட்சி மேலும் 17 ஆசனங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டது, இதனால் அரசாங்கத்திற்கு மொத்தம் 180 இடங்கள் கிடைத்துள்ளன.

35 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டுள்ள போதிலும், ஜனநாயகக் கட்சிக்கும் பழமைவாத எதிர்க்கட்சியான யுனைடெட் ஃபியூச்சர் கட்சிக்கும் இடையில் பெரும் போட்டி நிலவியுள்ளது.

 யுனைடெட் ஃபியூச்சர் கட்சியின் வேட்பாளர்கள் இத் தேர்தலில் 103 இடங்களை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை தென்கொரியாவில் 16 ஆண்டுகளின் பின் இடது சாரி கட்சிகள் பெரும்பான்மையைப் பெறும் முதல் சந்தர்ப்பமாக இது உள்ளது.

ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மூனின் கட்சிக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தது. தென் கொரிய பொருளாதாரம் மந்தமானது, தொடர்ச்சியாக அரசியல் ஊழல்கள் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் நாடு கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதில் ஜனாதிபதி மூன் முன்னெடுத்த நடிவடிக்கைகள் காரணமாக பெப்ரவரி பிற்பகுதியில் ஒரு நாளைக்கு 900 என்ற உச்சத்தில் இருந்து தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கை  30 க்கும் குறைவாக பதிவானது.

ஜனநாயகக் கட்சி கொரோனா தொடர்பான அதன் செயற்காடுகளை பிரச்சாரத்தில் மையத்தில் பிரதானப்படுத்தியது.

இதன் காரணமாக 1987 ஆம் ஆண்டில் தென் கொரியா முதலாவது ஜனநாயகத் தேர்தல்களை நடத்தியதிலிருந்து இது வரையான நாடாளுமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய பெரும்பான்மையை ஜனாதிபதி மூனின் அரசாங்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது சுமார் 60,000 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

எனினும், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66% க்கும் அதிகமாக இருந்தது, இது 18 ஆண்டுகளில் மிக உயர்ந்ததும்,  18 வயது சிறுவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் முறையாகும் இவ் தேர்தல் காணப்படுகின்றது.

 

https://www.virakesari.lk/article/80049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.