Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல்போயிருந்த மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு- கிளிநொச்சியில் சம்பவம்!

Featured Replies

Student-Missing-in-Palai.jpg

கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த முள்ளியடி, பளையைச்சேர்ந்த ஆர்.அனோச் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதுகுறித்து, பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28ஆம் திகதி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த மாணவன், பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவனுடைய பெற்றோர் கடந்த சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் அவரைத் தேடியும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பொலிஸாரும் மாணவனைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

http://athavannews.com/காணாமல்போயிருந்த-மாணவன்/

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு-கரும்புள்ளியான் பகுதியில் மாயமான இளைஞர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் றொசாந்தன் என்கிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடித்திரிந்த நிலையில், அவர் இன்று காலை கிணறிற்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய அம்மம்மா அம்மப்பா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்று வீடு திரும்பிய நிலையில் அவரை காணவில்லை என தேடப்பட்டார். உறவினர்கள் இன்று காலை நீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்ற போது கிணற்றினுள் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142386?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3 வாரங்களில் வடக்கில் காணாமல் போய் நிகழும்.. நான்காவது இளையவரின் மரணம். என்ன தான் நிகழ்கிறது வடக்கில்.. ?!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

கடந்த 3 வாரங்களில் வடக்கில் காணாமல் போய் நிகழும்.. நான்காவது இளையவரின் மரணம். என்ன தான் நிகழ்கிறது வடக்கில்.. ?!

நாள் ஒன்றுக்கு தற்கொலை என்ற செய்திகள் வருகிறது மட்டக்களப்பிலும் திடீர் சாவுகளாக இருக்கிறது ஆனால் அவைகள் தற்கொலையென்றே செய்திகளும் சொல்கின்றன 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாள் ஒன்றுக்கு தற்கொலை என்ற செய்திகள் வருகிறது மட்டக்களப்பிலும் திடீர் சாவுகளாக இருக்கிறது ஆனால் அவைகள் தற்கொலையென்றே செய்திகளும் சொல்கின்றன 

 

5 hours ago, nedukkalapoovan said:

கடந்த 3 வாரங்களில் வடக்கில் காணாமல் போய் நிகழும்.. நான்காவது இளையவரின் மரணம். என்ன தான் நிகழ்கிறது வடக்கில்.. ?!

கோத்தா அரசுத்தலைவரான பின்னர் கொலைக்குழுக்களுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டதன் விளைவே படுகொலைகளா? இது குறித்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் மக்கள்  (தமிழ்க் கட்சிகளிடம் இதற்கான தேடல் இருக்காது)இதுகுறித்து ஆழமாக உற்று நோக்குவதோடு தனித்துவமான பாதுகாப்பில் அக்கறைகொள்வதும் அவசியமானது.மிகவும் சாதுரியமாகவும் இரகசியமாகவும் கொலைகள் தமிழர் தாயகத்தில் அரங்கேற்றப்படுகிறதா? என்று ஒவ்வொரு தமிழரும்  சிந்திக்கவேணடிய ஆட்சியாளரின் காலத்தில் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கேயிருப்பவர்களுக்கு மன அழுத்தம் கூடி விட்டது என்று நினைக்கிறேன் ...எல்லோரும் பணத்தை நோக்கி ஓடுவதால் அன்பு,அக்கறை காட்ட ஒருத்தரும் இல்லை ...போதைவஸ்து பாவனை போன்ற பல ....காரணங்கள் இருக்கு 
 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

அங்கேயிருப்பவர்களுக்கு மன அழுத்தம் கூடி விட்டது என்று நினைக்கிறேன் ...எல்லோரும் பணத்தை நோக்கி ஓடுவதால் அன்பு,அக்கறை காட்ட ஒருத்தரும் இல்லை ...போதைவஸ்து பாவனை போன்ற பல ....காரணங்கள் இருக்கு 

தற்போது மன அழுத்தம் ஒரு காரணமாக இருந்தாலும் , போதையும் இடத்தை பிடித்துள்ளது மதுபானசாலைகள் பூட்டு கள்ள கசிப்பு என்ற ஒரு உற்பத்தி அதிகமாக நடக்கிரது , பணத்தேவைகள் பெருந்தேவையாகவும் உள்ளது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.