Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்‌ஷ அழைத்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஏன் போனது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்‌ஷ அழைத்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஏன் போனது?

உலகிலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற – அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம் தான்…” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இலங்கைத் தீவில் இப்பொழுது நாடாளுமன்றம் இல்லை. மாகாணசபைகள் இல்லை. இருப்பதெல்லாம் உள்ளூராட்சி சபைகள் தான். ஆனால் அவற்றுக்கு கோவிட்- 19 இற்குக் கீழான புதிய நிலைமைகளை கையாள்வதற்கு வேண்டிய அதிகாரங்கள் இல்லை. குறைந்தபட்சம் ஒரு அவசரகால நடவடிக்கையாக நிவாரண பொறிமுறை ஒன்றை உருவாக்க கூட அதிகாரம் இல்லை. நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி உண்டு. அவர் மட்டும்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரால் நியமிக்கப்பட்ட வேறு யாருமே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இல்லை. வேண்டுமானால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லலாம்.

இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபைகள் எதுவுமின்றி பெருமளவுக்கு மூன்று ராஜபக்ஷக்களே கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை படைத்தரப்பின் உதவியோடு நிர்வகித்து வருகிறார்கள்.

 

இவ்வாறானதொரு பின்ணியில் சில நாட்களுக்கு முன் காபந்து பிரதமரான மகிந்த ராஜபக்‌ஷ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு சந்திப்புக்கு அழைத்திருந்தார். இச்சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ஜேவிபி முன்கூட்டியே அறிவித்து விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணி முன்கூட்டியே அறிவித்து விட்டது. ரணில் அணி சந்திப்புக்கு முதல்நாள் மாலை அளவில் சந்திப்பில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்தது. அவர்கள் அவ்வாறு அறிவிக்கும் பொழுது கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தத்தமது மாவட்டங்களில் விசேஷ அனுமதி எடுத்து அவர்கள் அனைவரும் கொழும்புக்கு போனார்கள்.

 

960-2.jpg

 

கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டமைப்பு ஆட்சியின் மறைமுக பங்காளியாக விளங்கியது. அதனால் அது மகிந்த அணிக்கு எதிராக காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் அந்த அணியை தோற்கடிப்பதிலும் நீதிமன்றத்தில் வழக்குகளில் தோற்கடிப்பதிலும் கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பைச் செலுத்தியது. மேலும் கூட்டமைப்பின் வருங்கால தலைவர் என்று கருதப்படும் சுமந்திரன் நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு பலதடவைகள் அரசாங்கத்தை வற்புறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய நாடுகளின் முன்னுதாரணத்தை பின்பற்றி இலத்திரனியல் நாடாளுமன்றத்தை கூட்டலாம் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார்.

 

அது மட்டுமல்ல ஊரடங்கு சட்டத்தின் போதும் சமூக முடக்கத்தின் போதும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு உள்ளுராட்சி சபைகளுகூடாக ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டபோது ஜனாதிபதியின் பிரதிநிதியான வட மாகாண ஆளுநர் உள்ளுராட்சி சபைகள் அவ்வாறு செயற்பட முடியாது என்று கூறிவிட்டார். ஏற்கனவே அவ்வாறு மக்களுக்கு உதவ முற்பட்ட சில உள்ளூராட்சி சபைகளும் தடுக்கப்பட்டன.

இவ்வாறு கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் தனது வாக்காளர்களுக்கு உதவுவவதற்காக கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் ராஜபக்‌ஷ அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் மகிந்த ராஜபக்‌ஷ அழைத்த போது அதில் கூட்டமைப்பும் கலந்து கொள்ளுமா என்ற ஐயம் எழுந்தது. குறிப்பாக கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியாகிய ஐக்கிய தேசியக் கட்சி அதில் பங்கு கொள்ளாது என்று தெரிய வந்ததும் கூட்டமைப்பும் பின்னடிக்கும் என்றே ஊகிக்க பட்டது. ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய முடிவை அறிவித்த பொழுது பெரும்பாலான கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வந்து விட்டிருந்தார்கள். மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொள்வதா இல்லையா என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் முடிவில் அக்கூட்டத்தில் கலந்து கொள்வது என்று சம்பந்தரும் முடிவெடுத்தார்.

ஏன் அப்படி முடிவெடுத்தார்?

சம்பந்தரின் கடந்த ஐந்தாண்டுகால அரசியலை வைத்து முடிவெடுக்கும் எவரும் ரணில் பங்குபற்றாத ஒரு கூட்டத்தை அவரும் புறக்கணிப்பார் என்றே ஊகிப்பர். ஆனால் சம்பந்தரோ தான் சிங்களக் கட்சிகளுக்கு விசுவாசமில்லை; சிங்கள பௌத்த அரசுக்கே விசுவாசம் என்று சிந்திக்கிறாரா?

அவர் அப்படித்தான் கடந்த பத்தாண்டுகளாக முடிவெடுத்து வருகிறார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை பொருட்படுத்தாத போதும் சம்பந்தர் இன்னும் ஒருபடி கீழே இறங்கிச் சென்று தனது நல்லெண்ணத்தை நிரூபிக்க முற்படுகிறார். சிங்கள ஆட்சியாளர்களை பகை நிலைக்குத் தள்ளுவதன் மூலம் ஒரு இறுதித் தீர்வை பெற முடியாது என்று சம்பந்தர் நம்புகிறார். சிங்கள ஆட்சியாளர்களின் மனதை வென்றெடுப்பதன் மூலமே ஒரு இறுதித் தீர்வை அடையலாம் என்று அவர் இப்போதும் நம்புகிறார். அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பதிலாக அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம், விட்டுக் கொடுப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் நம்புகிறார்.

2009க்கு முன்னரான தமிழ் அரசியல் எனப்படுவது விட்டுக் கொடுப்பற்றது; வளைந்து கொடுக்காதது; சமரசத்துக்கு தயாரற்றது எள்ற ஒரு படிமம் சிங்கள அரசியல்வாதிகளின் மத்தியிலும் சிங்கள பொதுமக்கள் மத்தியிலும் இருந்தது என்றும் அந்தப் படிமத்தை மாற்றி அதற்குத் தலைகீழான ஒரு படிமத்தை ஏற்படுத்தினால் தான் தமிழ் மக்கள் தமக்கு உரிய தீர்வை பெற முடியும் என்றும் சம்பந்தர் நம்புகிறாரா? அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக அவர் வளையக்கூடிய மட்டும் வளைந்துகொடுக்கிறாரா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எந்த ஆட்சியின் பங்காளியாக இருந்தாரோ அந்த அரசாங்கத்துக்கு மட்டும் வளைந்து கொடுக்கவில்லை. அதற்கு முன்பிருந்த ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சியின் போதும் அவர் பெருமளவுக்கு விட்டுக் கொடுத்தார். மகிந்த ராஜபக்சவுடன் கிட்டத்தட்ட 22 சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும் அதில் நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும் அவர் கூறுவதுண்டு. சந்திப்புகளில் மகிந்த ராஜபக்ஷ உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று தன்னை சந்திப்பவர்களிடம் சம்பந்தர் கூறுவதுண்டு. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ் சுயாதீன குழுவினரிடமும் அவர் அதைச் சொன்னார். அச்சந்திப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமான நேரம் தனக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களை அவர் சொல்வதிலேயே கழிந்தது. இவ்வாறு தனது முதலாவது ஆட்சியின்போது மகிந்த ராஜபக்‌ஷ தன்னை அலைகளித்ததாகக் கூறும் சம்பந்தர் இப்பொழுது அவர் அழைத்த பொழுது ஏன் போனார்?

வழமைபோல சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்யும் விமர்சகர்கள் இந்தியாவின் ஆலோசனைப்படிதான் அவர் அப்படி சென்றார் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சம்பந்தர் போய்த்தான் இருப்பார் என்று ஊகிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய கடந்த பத்தாண்டு கால அரசியல் காணப்படுகிறது. சிங்களத் தலைவர்களை பகைநிலைக்கு தள்ளினால் தீர்வு கிடைக்காது என்று அவர் திட்டவட்டமாக நம்புகிறார். எனவே சிங்களத் தலைவர்களுக்கு விட்டுக்கொடுத்து இறங்கி செல்வதன் மூலம் தான் ஒரு தீர்வைப் பெறலாம் என்றும் நம்புகிறார்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின்போது சம்பந்தர் மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். குறிப்பாக ராஜபக்ஷக்களின் முதலாவது ஆட்சியை கழிப்பதற்கான வியூகத்தில் சம்பந்தரும் ஒரு பங்காளி தானே? என்று கேட்கலாம்.

ஆம். அவர் பங்காளி தான். ராஜபக்ஷக்களை விடவும் ரணில் விக்ரமசிங்கவோடு நெருங்கி போகலாம் என்று அவர் நம்பினார். அங்கேயும் கூட அவர் ரணிலுக்கு கொடுகக் கூடிய அழுத்தங்கள் எதையும் கொடுக்கவில்லை. ஒவ்வொரு நிதி அறிக்கை வாக்கெடுப்பின் போதும் அவர் அரசாங்கத்தை ஆதரித்தார். ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்களின் போதும் அவர் ரணிலை ஆதரித்தார். அவ்வாறு நிபந்தனையின்றி ஆதரிப்பதன் மூலம் ஒரு இறுதித் தீர்வை பெறலாமா என்று அவர் கற்பனை செய்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரும் ரணிலும் சேர்ந்து பெற்ற பிள்ளையான நிலைமாறுகால நீதி இப்பொழுது அனாதையாகி விட்டது.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இனி ராஜபக்ஷக்களுக்கும் இறங்கிச் செல்வது என்று சம்பந்தர் முடிவெடுத்து விட்டாரா? கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இனிமேலும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்குப் பின்னரும் கூட ராஜபக்ஷவின் வம்ச ஆட்சி தான் நீடித்திருக்கும் என்ற ஒரு கணிப்பு நாட்டில் பரவலாக காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இப்போதைக்கு ஒற்றுமை ஏற்படும் என்று கூற முடியாதுள்ளது. அதோடு கோவிட்-19க்கு எதிரான போரில் ராஜபக்ஷக்கள் பெரும்பாலும் வெற்றி பெறக்கூடும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஆதாவது, ராஜபக்ஷக்கள் வெல்லக்கூடும் என்ற ஓர் அரசியல் சூழலில் இனி வரும் ஐந்தாண்டுகளில் அல்லது அதற்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கான ஒரு இறுதித் தீர்வுக்காக ராஜபக்ஷக்களுடன் தான் பேசவே வேண்டியிருக்கும் என்று சம்பந்தர் சிந்திக்கின்றார்.

இந்த அடிப்படையில் தான் அவர் கடந்த திங்கட்கிழமை நடந்த சந்திப்பில் பங்குபற்றினார். அவ்வாறு சந்தித்ததன் மூலம் இப்பொழுது ராஜபக்ஷக்கள் முன்னெடுத்துவரும் கோவிட்-19 எதிரான நடவடிக்கைகளுக்கு ஒருவித அங்கீகாரத்தை அவர் வழங்கியிருக்கிறார். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கருஜயசூரிய கூறியது போலன்றி நாட்டில் இப்பொழுது நிலவும் ஆட்சிக்கு பிரதான தமிழ் கட்சி தனது அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. சிங்களக் கட்சிகள் வழங்க விரும்பப்படாத ஓர் அங்கீகாரம் அது. அப்படியோர் அங்கீகாரத்தை வழங்கியதன் மூலம் ராஜபக்ஷக்களை வென்றெடுத்து விடலாமா என்று சம்பந்தர் முயற்சிக்கிறாரா?

அதுமட்டுமல்ல வேறு ஒரு உப காரணமும் உண்டு. இப்பொழுது ராஜபக்ஷக்களுக்கு உள்ள ஒரே கவலை கோவிட்-19 அல்ல. மாறாக தேர்தலை எப்படியாவது விரைவாக நடத்த வேண்டும் என்பதே. மறுபடியும் ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றுமைப்படுவதற்கிடையில் தேர்தலை நடத்தி விட வேண்டுமென்று ராஜபக்ஷக்கள் திட்டமிடுகிறார்கள். இது விடயத்தில் கூட்டமைப்புக்கும் சாதகமான ஓர் அம்சம் உண்டு. இப்போது இருப்பது போன்ற தனியாள் இடைவெளிகளைப் பேண வேண்டிய ஒரு நோய் தொற்றுக் காலத்தில் தேர்தலை வைத்தால் அதில் இரண்டு தரப்புக்கு அனுகூலம் உண்டு. முதலாவது ராஜபக்ஷக்கள். இரண்டாவது கூட்டமைப்பு. இப்போது இருக்கும் நோய் தொற்றுச் சூழலில் தேர்தலை வைத்தால் அது அரசாங்கத்துக்கு சாதகமானது. அதேசமயம் ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் கட்சிகளை விட கூட்டமைப்புக்கும் சாதகமானது. ஏனெனில் கூட்டமைப்புக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. அண்மை ஆண்டுகளில் அந்த வாக்கு வங்கி அசைய தொடங்கிவிட்டது. நோய்த்தொற்று காரணமாக ஏனைய கட்சிகளுக்கு போதிய அளவுக்கு பிரச்சாரம் செய்யவும் சமூகத்தை திரட்டவும் வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றால் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் பழக்கத்தின் பிரகாரம் வீட்டுக்கே வாக்களிப்பார்கள். எனவே ஏனைய கட்சிகளுக்கு பிரச்சாரத்துக்கு வாய்ப்பை கொடுக்காத நோய்த் தொற்றுக்கு காலத்தை கூட்டமை ப்பும் சாதகமாகவே பரிசீலிக்கும்.

இந்த உப காரணத்தையும் சேர்த்துக் கணித்தால் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததன் மூலம் கூட்டமைப்பு அதன் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான நிகழ்ச்சி நிரலை குறிப்பால் உணர்த்தியுள்ளதா ?

http://thinakkural.lk/article/41037

 

14 minutes ago, உடையார் said:

2009க்கு முன்னரான தமிழ் அரசியல் எனப்படுவது விட்டுக் கொடுப்பற்றது; வளைந்து கொடுக்காதது; சமரசத்துக்கு தயாரற்றது எள்ற ஒரு படிமம் சிங்கள அரசியல்வாதிகளின் மத்தியிலும் சிங்கள பொதுமக்கள் மத்தியிலும் இருந்தது என்றும் அந்தப் படிமத்தை மாற்றி அதற்குத் தலைகீழான ஒரு படிமத்தை ஏற்படுத்தினால் தான் தமிழ் மக்கள் தமக்கு உரிய தீர்வை பெற முடியும் என்றும் சம்பந்தர் நம்புகிறாரா? அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக அவர் வளையக்கூடிய மட்டும் வளைந்துகொடுக்கிறாரா?

தமிழர் அரசியல் தரப்பு வளைந்து வளைந்து ஒன்று மாதிரி ஒரு சிங்கள கட்சிக்கு என கடந்த பத்து வருடகாலம் கொடுத்தது. சிங்களமும் அந்த வளைந்த முதுகுகளில் சவாரி செய்தது.

ஆனால், கோவிட் 19 ஒரு புதிய அரசியல் கதவை பொருளாதார நெருக்கடிகள் ஊடாக திறக்கும். அதையும் , தவற விடாமல் ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.