Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளையிட்ட பணத்தைக்கொண்டு அரச ஊழியர்களுக்கு 6 மாதம் வரை ஊதியம் கொடுக்க முடியும் : சம்பிக்க

Featured Replies

(செ.தேன்மொழி)

நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு அரச ஊழியர்களுக்கு ஆறுமாதம் வரை எந்த சிக்கலும் இன்றி ஊதியம் பெற்றுக் கொடுக்க முடியும். நாட்டு மக்களின் நிதியை மோசடி செய்தவர்களுக்கு அரச ஊழியர்கள் எதற்கு சம்பளத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இவர்களுக்கு எதிராக அரச ஊழியர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, டைட்டானிக் கப்பல் மாதிரி பொருளாதார கப்பலொன்றை கடலுக்குள் அனுப்பி அது பொருளாதார நெருக்கடி எனும் பனிக்குன்றில் மோதி முழ்கிக் கொண்டடிருக்கையில் உழைக்கும் மக்களை தோணிகளில் ஏறும்படி கூறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார சித்தாந்தம் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் அரச நெறுக்கடிகளுக்கு முற்றிலும் பொறுப்புக் கூறவேண்டிய ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும், பேராசிரியர் பி.பீ.ஜெயசுந்தரவுக்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எவ்வகையிலும் உரிமைக்கிடையாது என்பதுடன் அது தார்மீகமற்ற செயலாகும்.

ஜயசுந்தர ராஜபக்ஷ குடும்பத்தினரின் சௌபாக்கிய பாதையின் வழிகாட்டியாக இருப்பதுடன் அவர்களை இரச்சிப்பவராகவும் விளங்குபவர்.
அதனால் அவரது கருத்து அவரது சொந்த கருத்தாகிவிட முடியாது. மஹிந்த, கோத்தாபய மற்றும் பசில் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் பொருளாதார கொள்கையாகும். தற்போது நாட்டில் நிலவும் துரதிஷ்டவசமான பொருளாதார நிலைக்கு ராஜபக்ஷர்களைப் போன்று பி.பீ.ஜயசுந்தரவும் பொறுப்புக் கூறவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/81814

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு ஒரு ஜெயில்  அறை ரெடி பண்ணுங்க ..................

 

6 hours ago, ampanai said:

நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு அரச ஊழியர்களுக்கு ஆறுமாதம் வரை எந்த சிக்கலும் இன்றி ஊதியம் பெற்றுக் கொடுக்க முடியும். நாட்டு மக்களின் நிதியை மோசடி செய்தவர்களுக்கு அரச ஊழியர்கள் எதற்கு சம்பளத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இவர்களுக்கு எதிராக அரச ஊழியர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும் கூறினார்.

மக்களின் பணத்தை கொள்ளையிட்ட ராஜபக்ச கோஷ்டியின் வேஷம் கூட இருந்தவராலேயே அம்பலடுத்தப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

மக்களின் பணத்தை கொள்ளையிட்ட ராஜபக்ச கோஷ்டியின் வேஷம் கூட இருந்தவராலேயே அம்பலடுத்தப்படுகிறது.

இன்னும் வரனும் .

சிங்கள மக்களும் இதற்கு ஏதிர்ப்பு தெரிவிப்பார்களென்றே நினைக்கிறேன். கோத்தா முப்படைகளின் ஒரு மாத சம்பளத்தை நாட்டு நிதிக்காக எடுத்தால் என்ன? அதன் பின் நிலைமை தெரியும் 

  • தொடங்கியவர்
5 hours ago, Rajesh said:

மக்களின் பணத்தை கொள்ளையிட்ட ராஜபக்ச கோஷ்டியின் வேஷம் கூட இருந்தவராலேயே அம்பலடுத்தப்படுகிறது.

ஆறு கடக்கும் வரை அண்ணன் "மல்லி"  🙂 

 

இன்றும் நிறையவே புட்டு புட்டு வெளியில் வரும். 

போர்க்குற்றங்கள் கூட வெளியில் வரலாம், அதனால் என்னவோ எல்லா குற்றவாளிகளையும் அருகில் வைத்துள்ளார் கோத்தா / மகிந்தா பிரதர்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபைக்குள் இடம்பெறும் ஊழலை கட்டுப்படுத்திய பின்னர் எங்கள் சம்பளத்தை கோருங்கள்-தொழிற்சங்கம்

இலங்கை மின்சார சபைக்குள் காணப்படும் ஊழல்களிற்கு முடிவுகட்டிய பின்னர் அரசாங்க ஊழியர்களை தங்கள் ஒரு மாத கால சம்பளத்தை தியாகம் செய்யுமாறு கோருங்கள் என இலங்கை மின்சார சபையுடன் தொடர்புபட்ட தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மின்சார சபையில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக அரசாங்கம் வருடாந்தம் பில்லியன் ரூபாய்களை இழக்கின்றது என இலங்கை மின்சார சபையின் பொதுதொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் நாலக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ceb1.jpg
கடந்த பல வருடங்களில் பல அதிகாரிகள் சட்டபூர்வமற்ற விதத்தில் சம்பள ஊதியத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஒரு பில்லியனிற்கு மேற்பட்ட சம்பள அதிகரிப்புகள் வருடாந்தம் வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த அதிகாரிகள் கடந்த நான்கு வருடங்களாக சட்டவிரோதமாக சம்பளங்களை பெறுகின்றனர் இந்த பணத்தை சேமித்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.ceb-300x162.jpg
நீதிமன்றங்கள் இது குறித்து ஏற்கனவே தீர்ப்புகளை வழங்கியுள்ளன என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் பொதுதொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பள உயர்வை இரத்து செய்யுமாறு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன எனினும் இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை அந்த அதிகாரிகள் தற்போதும் சட்டவிரோத சம்பள அதிகரிப்பை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
எங்கள் சம்பளங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது குறித்து எங்களிற்கு பிரச்சினையில்லை ஆனால் முதலில் இலங்கை மின்சார சபையில் காணப்படும் ஊழலிற்கு தீர்வை காணுங்கள் அதன் பிறகு எங்களிடம் சம்பளத்தை கோருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/41388

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிற்கு அறிவிக்காமல் எங்கள் ஒருநாள் சம்பளத்தில் கைவத்தது ஏன்? தபால்சேவை ஊழியர்கள் சங்கம் போர்க்கொடி

தபால்சேவை ஊழியர்கள் தங்களிற்கு அறிவிக்கப்படாமலே தங்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் வெட்டப்பட்டது குறித்து கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.மிகவும் முக்கியமான தருணத்தில் இவ்வாறான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தபால் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எங்களிற்கு முன்னறிவித்தலை வழங்காமல்எங்களின் சம்மதத்தினை பெறாமல் எங்கள் முழுமையான சம்பளத்திலிருந்து ஒரு நாள் சம்பளத்தினை அரசாங்கம் குறைத்துள்ளது என சங்கத்தின் தலைவர் டிஎம் விஜயரட்ண தெரிவித்துள்ளார்.postal-iunion-300x111.jpg
அமைச்சின் செயலாளர் உரிய பதிலை வழங்காவிட்டால் நீதிமன்றத்தினை நாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முதலில் அமைச்சின் செயலாளரை சந்தித்து முறைப்பாட்டை தெரிவிப்போம் அவர் அதற்கு உரிய தீர்வை காணாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தினை நாடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.postal-office-1-300x225.jpg
சில ஊழியர்களிற்கு சம்பளத்தில் குறைப்பு இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அனைத்து ஊழியர்களிற்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் எங்களிற்கு தெரிவிக்காமல் இதனை செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள சங்கத்தின் தலைவர் டிஎம் விஜயரட்ண அவர்கள் இது குறித்து எங்களிற்கு அறிவித்திருந்தால் நாங்கள் எங்களிற்குள் பேச்சுவார்த்தைகளைமேற்கொண்டு தீர்வை கண்டிருப்போம் இது அநீதியான விடயம் என தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/41546

  • கருத்துக்கள உறவுகள்

மே மாத சம்பள விவகாரம் – அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால்- சட்ட நடவடிக்கை- தொழிற்சங்கள் கருத்து

அரசாங்க ஊழியர்களின் மே மாத ஊதியத்தினை கோரும் கடிதத்தினை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தேசிய தொழிற்சங்கநிலையம் குறிப்பிட்ட கடிதத்தினை விலக்கிக்கொள்ளவேண்டும் என தொழிற்சங்கங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு அரசாங்கம் இன்னமும் உரிய பதிலை வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

images-4-300x168.jpg
தேசிய தொழிற்சங்க நிலையத்தின் உறுப்பினரும் இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளருமான மகிந்த ஜயசிங்க ஐந்தாம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பிவைத்து கடிதத்தின் அடிப்படையில் ,ஊழியர்களின் விருப்பங்களின் அடிப்படையில் சம்பளங்கள் வெட்டப்பட உள்ள அதேவேளை தன்னிச்சiயாக பலவந்தமாகவும் இது இடம்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

pb-300x175.jpg

அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை கணக்காளர் குறிப்பிட்ட தொழிற்சங்க உறுப்பினர்களின் சம்பளத்தில் ஆயிரம் ரூபாயை கழிக்குமாறு மாவட்டங்களில் உள்ள சமுர்த்தி கணக்காளர்கள் முகாமையாளர்களிற்கு அறிவுறுத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

salary_hike_660x450_070419082704-300x169
தங்கள் சம்பளத்தினை வழங்க விரும்பமில்லாத ஊழியர்கள் கடிதம் மூலம் அதனை தெரியப்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் சில ஊழியர்கள் தங்களால் சம்பளத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ள போதிலும் வேலை தொடர்பான அச்சம் காரணமாக பலர் அதனை தெரிவிக்க தயங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதுவரை தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளிற்கு பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் உரிய பதிலை வழங்க தவறினால் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்

http://thinakkural.lk/article/41668

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.