Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு !

Featured Replies

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர வேண்டுமெனில் உரிய பிரதேசங்களில் பொலிஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறது பாதுகாப்பு அமைச்சு.

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் வடக்கு கிழக்கில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

dada.jpg

 

விடுதலைப் புலிகளை நினைவுகூறும் விதத்தில் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர சகலருக்கும் அனுமதி உண்டென முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியது. எனினும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்படக்கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதானது,

நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போராட்டமாகவே கருதப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்படும் விடுதலைப்புலிகளை அனுஷ்டிக்கும் எந்த நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறக்கூடாது.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்படக்கூடாது. வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிகழ்வுகளை நடத்த ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அல்லது யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றால் அவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதியை பெற்று அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அறிவித்துள்ளது.

இது குறித்து இராணுவத் தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுமதியில்லை.

அதேபோல், இராணுவ வெற்றிதினம் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்படவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஆடம்பரமாக, நிகழ்வுகள் பல உள்ளடக்கி, அணிவகுப்புகள் நடத்தி போர் வெற்றிதினத்தை கொண்டாடுவோம்.

ஆனால் இப்போது நாட்டின் நிலைமையில் எம்மால் ஆடம்பரமாக நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாது. ஆகவே அமைதியாக வெற்றி தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அதற்காக இராணுவத்தை நாம் மறந்துவிட்டோம் என்ற அர்த்தம் அல்ல. இந்த நாட்டின் அமைதிக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பாதுகாப்பு படையினரையும் நாம் நினைவுகூர்ந்து அவர்களுக்கான நாளாக கொண்டாடுவோம்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர நினைவு தூபி முன்னிலையில் மாலை 4 மணிக்கு போர் வெற்றி தினம் அனுஸ்டிக்கப்படும் என்றார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூறிய அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன,
இலங்கையில் இராணுவ வெற்றி தினம் அல்லது போர் வெற்றிதினம் என அங்கீகரிக்கப்பட்ட தினம் உள்ளது. அது மே மாதம் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும்.

ஆனால் விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பானது நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அப்படியென்றால் அவர்களின் நிகழ்வுகளும் நாட்டில் தடைசெய்யப்பட்டதாகவே இருக்க முடியும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எனக் கூறிக்கொண்டு விடுதலைப்புலிகளை எவரும் அனுஷ்டிக்க முடியாது.

ஆனால் யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் குறித்து அவர்களின் குடும்ப உறவினர்கள் நினைவுகூர முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/82223

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

இது குறித்து இராணுவத் தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுமதியில்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

3 hours ago, ampanai said:

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்படக்கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சொறிலங்காவின் மோசமான சிங்கள அரச போர்க்குற்றவாளிகள் எந்த விதத்திலும் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான எந்த உரிமையும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை; மீறினால் தனிமைப்படுத்தப்படுவர்

mullivaikal-anniversary-1558148782-1-300யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சியின் தலைமையகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவைசேனாதிராசா தலைமையில் நிகழ்வு இடம்பெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெரிவில் அவர்வசிக்கும் இல்லத்தில் நிகழ்வு நடத்தப்படவிருந்தது.

இந்த நிகழ்வுகள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த நிலையில் அவற்றைத் தடை செய்ய நீதிமன்றக் கட்டளை பெறப்பட்டுள்ளது. மீறி நிகழ்வு இடம்பெற்றால் அதில் பங்கேற்கும் அனைவரும் தனி மைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/42171

எமது நினைவேந்தும் அடிப்படை உரிமையை பறிக்க எவரும் அருகதையற்றவர்கள்; சண்.குகவரதன்

kuhavarathan.jpgமுள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலங்கள் உட்பட அசாதாரண நிலைமைகளில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரித்துண்டு. ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு எவருக்கும் அருகை கிடையாதென மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பொறியியலாளர்.சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.

பாரிய துன்பியல் நிகழ்வுகளை கொண்ட கொண்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் 11ஆவது நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2009ஆம் ஆண்டின் இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் அவலம் நடைபெற்றது என்பதை யாரும் மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. அதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் நீத்துள்ளார்கள். அதுமட்டுமன்றி மூன்று தசாப்த விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பறிகொடுத்த உயிர்களின் எண்ணிக்கை ஏராளம்.

அவர்களின் ஆத்மா சாந்திக்காக போர் மௌனிக்கப்பட்ட தினமாக அறிவிக்கப்பட்ட மே 18இல் நினைவேந்தலை செய்வது கடந்த ஒருதசாப்தமாக முன்னெடுக்கப்படுகின்றது. தமது சொந்தங்களை பறிகொடுத்தவர்கள் அவர்களை நினைவுகூர்ந்து தமது மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான ஒரு நாளாகவும் இது அமைகின்றது.

அவ்வாறிருக்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டப்படுத்துவதை மையப்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிஸார் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவிலும் பொலிஸார் மற்றும் படையினரின் கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

எது எவ்வாறாயினும், தமிழர்களும் இந்த நாட்டின் மக்களே. அவர்களுக்கு தமது பறிகொடுத்த சொந்தங்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு பூரண சுதந்திரமுள்ளது. இந்த நாட்டில் கார்த்திகை வீரர்கள் தினம், உயிரிழந்த படையினருக்கான அஞ்சலி தினம் ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன. அத்தினங்களில் பெரும்பான்மை மக்கள் ஒன்று கூடி அஞ்சிலிப்பதற்கு இடமளிக்கப்படுகின்றது.

அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் நினைவேந்தல் செய்வதற்கான உரிமையை எவ்வாறு தடுக்க முடியும். அவர்களுக்குள்ள அந்த அடிப்படை உரித்தை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றுள்ளது

http://thinakkural.lk/article/42132

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல் நடத்தினால் சுடுவோம் – பெண் உறுப்பினருக்கு பொலிஸ் மிரட்டல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஜயழகன் ரஜீதாவின் வீட்டிற்க்கு இன்று (17) காலை 10.40 மணியளவில் 10ற்கும் மேற்பட்ட பொலிஸார் சிலர் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸார் நாளை (18) வடமராட்சி கிழக்கில் உங்கள் கட்சியின் ஏற்பாட்டில், உங்களது தலைமையில் பொது இடம் ஒன்றில் விளக்கேற்றவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளளதாகவும் அப்படி செய்யயக்கூடாது என்றும் செய்தால் இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்யும் என்றும் அதன் பின் தங்களிடம் வர வேண்டாம் என்றும் சொல்லி சென்றுள்ளார்கள்.

இதனை குறித்த உறுப்பினர் காணொளி ஒன்றின் ஊடாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

 

https://newuthayan.com/நினைவேந்தல்-நடத்தினால்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.