Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி

 

Bharati May 18, 2020 பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி2020-05-18T05:52:17+00:00உள்ளூர்


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? எனக்கேள்வி எழுப்பியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரபாகரனின் போராட்டத்தை மகாபாரதப்போருடனும் ஒப்பிட்டுள்ளார்

தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? எனக்கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கடைசிப் பந்தியைப் பார்த்தீர்களானால் அதில் கிட்டத்தட்ட பின் கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“இந்த மகாநாடானது தமிழ் தேசத்திடம் ஒரு பொதுவான வேண்டுதலை விடுக்கின்றது. முக்கியமாகத் தமிழ் இளைஞர்களிடம் எமது சுதந்தரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்றாக ஈடுபடுத்துமாறு வேண்டுவதுடன் இறைமையுடைய தமிழ் ஈழம் என்ற இலக்கை அடையும் வரையில் பின் வாங்காது போரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது”.

அன்றைய கால தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளில் “புனிதப் போர்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறித்த போர் அஹிம்சை வழியிலோ, சத்தியாக் கிரகம் மூலமோ, அரச தந்திரம் மூலமோ நடைபெற வேண்டும் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே தம்பி பிரபாகரன் குறித்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை?


 
நாம் அஹிம்சையில் நாட்டம் கொண்டவர்கள் என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தைக் குறை கூறவோ, கொச்சைப்படுத்தவோ எமக்கு எந்த உரித்தும் இல்லை. தம்பி பிரபாகரன் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கோரியதைத் தான் முழுமூச்சுடனும் நம்பிக்கையுடனும் நடைமுறைப்படுத்தினார். அதைப் பிழையென்று இன்று நாம் கூற எமக்கு எந்த உரித்தும் இல்லை.

மகாபாரதம் நிலத்திற்கான போர் பற்றிக் கூறுவது. பகவான் கிருஷ்ணரே ஆயுதப் போராட்டத்தை முன்னின்று நடத்தனார். அன்பு வழியை நாடும் நாங்கள் பகவான் கிருஷ்ணன் சென்ற தூதையும் கவனிக்க வேண்டும். ஊசி குத்தும் இடங் கூடத் தர முடியாது என்றதன் பிற்பாடு தான் போர் தொடங்கியது. ஆகவே தம்பி பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் அன்றைய தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடத்தப்பட்ட போர் என்பதே எனது கருத்து என்றார்.

 

http://thinakkural.lk/article/42176

நீங்கள் சொன்னது சரி. அவர்கள் ஆயுத  போராட்டத்தை நடத்தியதில் பிழை இல்லை . ஆனால் அது சிங்கள அரசுக்கு விளங்குது இல்லையே. என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Vankalayan said:

நீங்கள் சொன்னது சரி. அவர்கள் ஆயுத  போராட்டத்தை நடத்தியதில் பிழை இல்லை . ஆனால் அது சிங்கள அரசுக்கு விளங்குது இல்லையே. என்ன செய்வது?

விளங்காதது போல நடிப்பவர்கள் சிங்களவர்கள்.

Just now, nunavilan said:

விளங்காதது போல நடிப்பவர்கள் சிங்களவர்கள்.

உலக நாடுகளாவது இதை விளங்கிக்கொள்ளலாமல்லவா? அவர்களும் விளங்காதமாதிரி நடிக்கிறார்களா? நமது பெரியண்ணனே கண்ணைமூடும்போது மற்றவர்களை குறை சொல்லத்தேவை இல்லை.

சொறிலங்கா அரச ஆயுதப்படை பயங்கரவாதிகளின் உதவியுடன் தமிழ் இனம் தமக்கெதிரான திட்டமிட்ட இனவழிப்பு தொடரும் போது அதெற்கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்துவது நீதியானது, நியாயமானது.

நல்லவேளை விக்னேஸ்வரனும் சகுனி சுமந்திரன் போல கொலைகார அரச சலுகைகளுக்கு ஆசைப்பட்டு தமிழினத்தின் பக்கமுள்ள நீதி நியாயங்களை புதைக்க முயலேல.

சூதுவாதுகளின் ஆக்கிரமிப்பை பாத்து துள்ளுபவர்களுக்கு இது கசப்பா தான் இருக்க போது.

என்னைப்பொறுத்த வரைக்கும் இந்தியக்காரன்தான் எல்லாவற்றிட்கும் காரணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.