Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்குவோம் - ஜனாதிபதி

Featured Replies

சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர் என்பது ரோஜா இதழ்கள் தூவிய மெத்தையல்ல எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்றையதினம் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/82356

  • தொடங்கியவர்

இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைகள் மீறப்படும் நிலையில் சர்வதேச ரீதியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நவநீதம்பிள்ளை

(நா.தனுஜா)

இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்வதற்கு சர்வதேச ரீதியில் நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.

navaneethan.jpg

 

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் முடிவடைந்து 11 வருடங்கள்ள பூர்த்தியடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதி முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்கிறேன். இந்த நீண்டகாலப் போரில் சுமார் 146,000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரிழந்தார்கள்.

 

எனவே அவ்வாறு உயிரிழந்த தமிழர்களை இந்நாளில் நினைவுகூரும் அதேவேளை, தொடர்ந்தும் நீதி, சுதந்திரம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை முன்னிறுத்திய அவர்களது போராட்டங்களால் கவரப்பட்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இறுதிப்போரின் போது யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும், இன்னமும் இதுகுறித்த முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
மாறாக சிறுவர் உட்பட எண்மரைப் படுகொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு முன்னாள் சார்ஜன்ட்டுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இது நீதிக்குப் புறம்பானதாகும்.

 

இலங்கையில் இன்னமும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. படையினரால் கைப்பற்றப்பட்டப் பொதுமக்களின் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழ்மொழியில் பாடுவது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்னமும் 200 பேர் வரையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்வதற்கு சர்வதேச ரீதியில் நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

https://www.virakesari.lk/article/82360

 

  • தொடங்கியவர்
8 minutes ago, ampanai said:

சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இங்கே புலம்பெயர் தமிழ் மக்கள் அவரக்ளின் பரப்புரைகள் அழுத்தம் தருபவையாக உள்ளன என்பதை இந்த சர்வதேச போர்க்குற்றவாளி உறுதிபடுத்தியுள்ளான். பரப்புரையில் ஈடுபடும் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். 

ஒன்றில் ஐ.நா. போன்ற அமைப்புக்களில் இருந்து சிங்களம் வெளியேறும் ( சாத்தியங்கள் இல்லை ) இல்லை அந்த முயற்சியில் ஈடுபட வைக்கும் சூழ்நிலை உருவாகும்பொழுது, உருவாக்கப்படும் பொழுது எமது மக்களுக்கு நீதியும், தன்னாட்சி உரிமையும் கிடைக்கும். 

  • தொடங்கியவர்
  1. மிருசுவில் கூட்டுக் கொலைக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த விடயத்தை மாத்திரம் ஆங்கில மொழியில் கூறியமை தான் யார் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் நோக்கத்திற்காக இருக்கலாம். 
  2. கொரோனா தொற்றினால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த ஒரே நாடாக இலங்கை காணப்படுகிறது. இந்த நிகழ்விற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த கடற்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. அப்படி இருந்த போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இந்த நிகழ்வில் பாதுகாப்பு முகக் கவசம் மற்றும் கையுறை அணியாது கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பாதுகாப்பு முகக் கவசம் அணிந்திருந்தனர்.
  3. யுத்தம் காரணமாக தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் யுத்தம் காரணமாக எதிரிகளின் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பிய யுத்தத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோன்று ஜனாதிபதி தன்னுடைய உரையில் இவர்களது பெயரைக்கூட நினைவுபடுத்த வில்லை என்பது ஒரு ஜனாதிபதி செய்திருக்கக்கூடாத விடயமாகும்.

https://www.lankaenews.com/news/316/ta

9 hours ago, ampanai said:

சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம்

இவர் Trumpன் முன்மாதிரியை பின்பற்றி தன்னை ஒரு பெரிய தலைவனாக காட்ட முனைகிறார். யுத்தம் நடத்த சர்வதேச நாடுகளிடம்  கையேந்தியபொழுது வராத மானரோசம் இப்பவருது.

தமிழ் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டதாக மார்தட்டும் இந்த பயல்கள் உண்மையில் அந்த நாட்டை விரைவில் சீனருக்கு முற்றாக இழப்பது திண்ணம். ஆப்பிரிக்காவில் சில இடங்களில் நடப்பதுபோல  போல ஒரு நாள் இவை சீனருக்கு கீழ் வேலைசெய்து அவர்கள் சொல்லும்படியாக வாழும் நாள் வரும். 

இவ்வளவு காலமும் சர்வதேசம் என்ன செய்திருக்கிறது? அவர்கள்  வருட  வருடம்  அறிக்கையுடன்  நிறுத்திக்கொள்ளுவார்கள் . பதினோரு வருடமாக செய்யாததையா இப்போது செய்யப்போகிறார்கள். 

  • தொடங்கியவர்
13 hours ago, ampanai said:

மிருசுவில் கூட்டுக் கொலைக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த விடயத்தை மாத்திரம் ஆங்கில மொழியில் கூறியமை தான் யார் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் நோக்கத்திற்காக இருக்கலாம். 

கோத்தா தன் படைகளுக்கும் மக்களுக்கும் என்றும் உண்மையாகவும் விசுவாசமாகவும் உள்ளார். அவர் குறிப்பிட்டது போல் ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரேரனையில் இருந்து சிறீலங்காவை வெளியேற்றி விட்டார்.

அவர்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்க வேண்டும், என பிரேரித்து தொடர்ந்து இருமுறை வழங்கி வந்த எம்மின் அடுத்த கட்டம் தான் என்ன? 

  • தொடங்கியவர்

முதுகெலும்பு இருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருந்து விலகுங்கள்

 

சிறிலங்கா  அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.பொதுச் சபையில் இருந்து விலகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் போர் வெற்றி விழா உரை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது மறுநாள் இலங்கை அரசின் போர் வெற்றி நாள் என்றும் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போர் வெற்றி விழாவில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். அவரது எச்சரிக்கை விடும் தொனியிலான உரைகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி அரசாங்கம் அரசு பல தடைகளை விதித்தது.

எனினும் நாம் தடைகளை முறியடித்து உயிரிழந்த எமது உறவுகளுக்காக அஞ்சலித்தோம். எனினும் தென்னிலங்கையில் முப்படையினரின் பிரசன்னத்துடன் போர் வெற்றி விழாவை தனிநபர் சுகாதாரம் பேணாது (மாஸ்க் அணியாமல்) கொண்டாடியுள்ளார்.

பேர்வெற்றி விழாவில் மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி, பிரதமர், இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் பீல் மார்சல் சரத்பொன்சேகா போன்றவர்கள் மீதே போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் 40 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிட்டது. இதேபோன்று இன்னுமொரு விசாரணைக்குழு போரில் 70 ஆயிரம் போர் கொல்லப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

மேலும் ஓ.ஐ.எஸ்.எல். அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் போர்க்குற்றம் நடைபெற்றமைக்கான சாத்தியங்கள் உள்ளன எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.

பின்னர் தற்போது ஆட்சிபீடம் ஏறியிருந்த அரசாங்கம் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றமைக்கான சாத்தியங்கள் இருப்பதாலேயே சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக்கு கடந்த அரசு இணை அனுசணை வழங்கியிருந்தது.

இவற்றை மறந்துவிட்டு செயற்படுவதில் பிரியோசனம் இல்லை தமிழ் மக்களையோ சர்வதேசத்தையே மிரட்டி பலனில்லை ஏனெனில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பல வருடங்கள் கடந்த பின்னரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன.

எனவே கோத்தாபய அரசு வீராப்புப் பேசுவதை விடுத்து அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா. பொதுச் சபையில் இருந்து விலகமுடியுமா என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக அரசிடம் கேட்கின்றேன் என்றார்.

http://eelamurasu.com.au/?p=27729

  • தொடங்கியவர்
On 19/5/2020 at 18:13, ampanai said:

அந்த விடயத்தை மாத்திரம் ஆங்கில மொழியில் கூறியமை தான் யார் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் நோக்கத்திற்காக இருக்கலாம். 

 

On 19/5/2020 at 10:48, ampanai said:

சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1. யார் இந்த செய்திக்கு உரிமையாளர்?

- நிச்சயம் சர்வதேசம், குறிப்பாக அமெரிக்காவாக இருக்கமுடியும் 

2. ஏன் கோத்தா இதை தற்பொழுது கூறவேண்டும்? 

- அண்மையில் வந்த இரு தொலைபேசிகள், அதில் ஒன்று அமெரிக்க தொல்லைபேச்சு 

3. சவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத்தடைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கலாம் ?

- அமேரிக்கா தான் 'விரும்புவதை' பெற கையாளும் யுக்திகள். ஆனால், இன்று அதற்கு தடையாக இருப்பதும் ஆசியாவின் வல்லரசாகும் கனவுடன் இருக்கும் சீனாவும் அதன் சிங்களம் மீதான, குறிப்பாக மகிந்தா அண்ட் கோவுடனான நெருக்கமும். 

4. வேறு?

- நாட்டிற்குள்ளேயே அரசியல் (பொருளாதார) பிரச்சனைகளை அமெரிக்க உருவாக்கும். 
சீனாவின் பக்கம் மேலும் சிங்களம் விழுந்து, அடுத்து சிங்கள சுதந்திரதின பேச்சு கூட பெய்ஜிங்கில் இருந்தே வரலாம் ( ஏற்கனவே சில அறிக்கைகள் அங்கிருந்து தான் வருகின்றனவோ என எண்ணத்தோன்றுகின்றது) 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.