Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம்

migrant-workers-sprayed-with-disinfectant-in-south-delhi-civic-body-says-by-mistake

 

புலம்பெயர் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்று சமூகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களென்றும் பாராமல் அவர்கள் மீது கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், தவறுதலாக நடந்துவிட்டது, எந்திரக்கோளாறால் அவர்கள் மீது குழாய் பழுதடைந்து மருந்து தெளிக்கப்பட்டது என்று தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்ள், குடும்பத்தினர் பரேலி நகருக்கு கடந்த மார்ச் மாதம் சென்றனர். அப்போது, அவர்களை ஊருக்குள் விடாமல் தடுத்த அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அமரவைத்து அவர்கள் மீது கிருமி நாசினி மருந்தை பீய்ச்சி அடித்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சில், கிருமிநாசினி மருந்துகளை மனிதர்கள் மீது அடிக்கக்கூடாது அது பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தனர்

இந்த சூழலில் தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நேற்று கிருமி நாசினி மருந்தை பீய்ச்சி அடித்துள்ளனர், இதுதொடர்பாக வீடியோ காட்சியும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது

1590222704756.jpg உத்தரப்பிரதேசம் பரேலி நகரில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி: கோப்புப்படம்

இதனால் பதற்றமடைந்த டெல்லி மநகராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி மருந்து கலக்கி வைத்துள்ள ஜெட் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு திடீரென மருந்து அழுத்தம் தாங்காமல் குழாய் வழியாக வெளியே வந்துவிட்டது. வேண்டுமென்றே செய்யவில்லை என்று விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்கள்

தெற்கு டெல்லியில் லஜபதி நகரில் உள்ள ஹெமு கலாணி உயர்நிலைப்பள்ளியில் புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் ஷ்ராமிக் சிறப்புரயிலில் செல்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயிலில் ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சியில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் குழாயை பிடித்து தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி மருந்தை தெளிக்கிறார், இதை மற்ற ஊழியர்கள் வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் இந்த பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை தங்க வைத்ததிலிருந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும், சாலையிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், லாரியில் உள்ள ஜெட் எந்திரத்தின் அழுத்தம் தாங்காமல் குழாய் மூலம் கிருமி நாசினி மருந்து தொழிலாளர்கள் மீது தெறித்துவிட்டதாக தெற்கு டெல்லி மாநகராட்சி நி்ர்வாகம் தனது விளக்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.

https://www.hindutamil.in/news/india/555887-migrant-workers-sprayed-with-disinfectant-in-south-delhi-civic-body-says-by-mistake-1.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி படிச்சால்  வேலை கிடைக்கும் .மனது அமைதியடையும் என்று தென்னியந்தருக்கு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் டெல்லி செருப்பு நக்கிகளை தேடவேண்டி உள்ளது இந்நேரம் .பிறப்பிலேயே  ஹிந்தியை தாய் மொழியாய் கொண்டவன் இந்தியாவின்  நீண்ட வீதியெங்கும் உணவில்லாமல் வரிசையில் சொந்த இடத்தை நோக்கி நகருகிறார்கள் சொந்த தாய் மொழி தமிழை  விட ஹிந்தி அவசியம் என்று சொன்ன சோணகிரிகளை தேட வேண்டி உள்ளது .

என்று சொந்த மொழி மறந்து அந்நியனின் காலை பிடிக்க தொடங்குகிறோமோ அன்று தொடங்கும் தரித்திரம் .கீழே உள்ள செய்திகளை விட கேவலமான செய்திகள் இனி உருவாகும் .

பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம்

பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம்

றந்த நாயின் உடலை சாப்பிடும் மனிதன்
 
புதுடெல்லி:
 
இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
 
இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள்.
 
 
இந்நிலையில், டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
 
இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்போது, சாஹபுரா பகுதியில் சாலையில் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காண்கிறார். அவரருகே சென்ற பிரதுமன் சிங் நருகா, “உங்களுக்கு சாப்பிட உணவு இல்லையா? நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என அந்த மனிதரைக் கூச்சலிட்டு, சாலையின் ஓரத்தில் காத்திருக்கச் சொல்கிறார். அதன்பின் அவரை அணுகிய நருகா, அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குகிறார்.
 
இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 
இதையடுத்து முகநூலில் நருகா வெளியிட்டுள்ள செய்தியில், பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை சாலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. உடனடியாக நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள். இந்த வீடியோவை உங்களால் முடிந்தவரை அரசுக்குச் சென்றடையும் வரை பகிர்ந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.