Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு

college-student-murder-in-tutucorin-clashes-between-two-groups-police-force-deployed  

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் நடைப்பயிற்சிக்காக செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் தேடிய போது, தலைவன்வடலி பாலத்தின் அருகே முற்புதருக்குள் சத்தியமூர்த்தியின் உடல் மட்டும், தலை இல்லாமல் முண்டமாகக் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த தலைவன்வடலி கிராம மக்கள் உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

சத்தியமூர்த்தியின் தலையைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். கொலைஹ் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சத்தியமூர்த்தியின் தலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சத்தியமூர்த்தியின் உடல் கிடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அவரது தலை கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்து, அதனைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தலைவன்வடலி கிராம மக்களுக்கும், அருகேயுள்ள கீழ கீரனூர் கிராம மக்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது தெரியவந்தது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவர் இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் கீழ கீரனூரை சேர்ந்த சிலர் தடுத்து தகராறு செய்துள்ளனர்.

இதனை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். மேலும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீழ கீரனுரில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிலர் இளநீரை திருடியுள்ளனர். தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் இளநீரைத் திருடியதாகக் கூறி பேசியுள்ளனர். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாகவே சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கீழ கீரனுரை சேர்ந்த ராஜேஷ், பழனிச்சாமி, குட்டி என்ற முனியசாமி, ஸ்டீபன்ராஜ், ஸ்ரீதர், வினோத் ஆகிய 6 பேரையும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையால் ஆத்திரமடைந்த தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கீழ கீரனூர் கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்து 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

தலைவன்வடலி மற்றும் கீழ கீரனுர் கிராமங்களை சேர்ந்தவர்கள் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார், தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் இந்த பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

https://www.hindutamil.in/news/tamilnadu/557051-college-student-murder-in-tutucorin-clashes-between-two-groups-police-force-deployed-2.html

 

  • கருத்துக்கள உறவுகள்

வெறும்  இளனிக்கு இவ்வளவு அக்கப்போர் தேவைதானா ?

.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎05‎-‎2020 at 12:25, பெருமாள் said:

வெறும்  இளனிக்கு இவ்வளவு அக்கப்போர் தேவைதானா ?

.

சாதி பிரச்சனையாய் இருக்கும் 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/5/2020 at 13:25, பெருமாள் said:

வெறும்  இளனிக்கு இவ்வளவு அக்கப்போர் தேவைதானா ?

.

ஊரிலையெல்லாம் தேங்காய்,மாங்காயிலை  தொடங்கின சின்னப்பிரச்சனையள் தான் கடைசியிலை வெட்டுக்கொத்து கொலையிலை வந்து நிக்கிறது.
என்ரை காணிக்கை தென்னோலை களவெடுத்தவனோடை நான் இண்டு வரைக்கும் கதைக்கிறதேயில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஊரிலையெல்லாம் தேங்காய்,மாங்காயிலை  தொடங்கின சின்னப்பிரச்சனையள் தான் கடைசியிலை வெட்டுக்கொத்து கொலையிலை வந்து நிக்கிறது.
என்ரை காணிக்கை தென்னோலை களவெடுத்தவனோடை நான் இண்டு வரைக்கும் கதைக்கிறதேயில்லை. :grin:

நம்ம காணிகளுக்குள் திருடர்களே  எங்கள்  வகுப்பு நண்பர்கழும் நானும்தான் மத்தியானம் கள்ளு  அடித்துவிட்டு போகிற கிழட்டுக்கூட்டம்  சும்மா  போகாமல் வீட்டில் தட்டி சொல்லி விட்டு போகுங்கள் பிறகென்ன வழக்கமானபஜனைதான் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம்கள் யாருக்காவது விளங்குதா ?

Image

 

Image

 

Image

Image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.