Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 

 

   by : Jeyachandran Vithushan

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் கடந்த 10 நாட்கள் பரிசீலனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தேர்தல்-திங்க்திக்கு-எதி/

நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையும் – முன்னாள் சபாநாயகர்

In இலங்கை     June 2, 2020 9:43 am GMT     0 Comments     1227     by : Jeyachandran Vithushan

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பது தொடர்பான தீர்ப்பு இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்ற தீர்மானமும் இன்னமும் இழுபறி நிலையிலுள்ள நிலையில் டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்திருக்கிறது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவு இன்னமும் கேள்விக்குறியான நிலையிலேயே இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“இவ்விடயம் தொடர்பில் தற்போது நீதிமன்றம் ஆராய்ந்து வருகின்றது. அதற்கு முழுமையாக மதிப்பளிக்கும் அதேவேளை, இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய சந்தர்ப்பமொன்றாக அமையவிருக்கும் இந்தத் தீர்ப்பிற்காக நாம் காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நீதிமன்ற-தீர்ப்பு-ஜனநாயக/

அடிப்படை மனித உரிமை விடயம் தொடர்பான சட்ட அடிப்படையற்ற முறையில் சுமந்திரன் முன்னெடுத்த தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

இலங்கையின் ஜனநாயக வரலாற்றில்

இலங்கையில் சனநாயக வரலாறா…..? இந்த ஆறு எந்த மலையில் உற்பத்தியாகி எங்குநோக்கி ஓடுகிறது.? அறிந்தவரையில் இந்த ஆற்றின் அருகே போலிச் சந்நியாசிகள் குடிலமைத்து பயங்கர அரசியல் முதலைகளையும் அங்கு வளர்த்து வருகிறார்களாம். இதனால் ஆற்றின் அருகே செல்வதற்குக்கூட அங்குள்ள மக்கள் அஞ்சுகிறார்களாம். 😲

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.