Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனத்தின் ஹொங்கொங் பாதுகாப்புச் சட்டம், இமாலயத்தில் படைக்குவிப்பு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங்காங் மக்களின் பேச்சுரிமை, ஒன்றுசேரும் உரிமை, தகவல் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது.

ஹொங்கொங்கில் சீனாவுக்கு எதிரான subversion   (அரசுக்கு எதிரான ), பிரிவினை, தீவிரவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் தண்டிக்கவும் இந்தச் சட்டம் தேவைப்படுவதாக சீனா கூறிக் கொண்ட போதிலும், இவை போன்ற பாதுகாப்புச் சட்டங்கள் எனப்படுகிறவை ஒடுக்குமுறைக் கருவிகளே தவிர வேறல்ல என்பதை ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் நன்கறிவார்கள்.

1997ம் ஆண்டு ஹொங்கொங்கை சீனாவிடம் பிரித்தானியா ஒப்படைத்த போது, சீனம் ஏற்றுக் கொண்ட சீன-பிரித்தானியப் பிரகடனத்தால் உத்தரவாதமளிக்கப் பெற்ற ஹொங்கொங்கின் தன்னாட்சியை, சீனாவின் பாதுகாப்புச் சட்டம் சட்மென்பது, ஹொங்கொங்கின் தன்னாட்சி இறைமையினை பெரிதும் அழித்து விடும் என்று ஒஸ்திரேலியாவும், பிரித்தானியாவும், கனடாவும், அமெரிக்காவும். தெரிவித்துள்ள கவலையை ஈழத் தமிழர்களாகிய நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

இன்னும் வரையப்படாத ஹொங்கொங்குக்கான பாதுகாப்புச் சட்டத்துக்கு, ஹொங்கொங் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கேட்பதைத் தவிர்த்து ,மாறாக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் இந்தச் சட்டத்தை ஹொங்கொங் மக்கள் மீது ஒருதரப்பாகத் திணிக்கவுமான சீனாவின் திட்டம், ஹொங்கொங்கில் இப்போதுள்ள ஆட்சிமுறையை மீறுவதாகும். ஹொங்கொங்கின் தன்னாட்சியைப் பாதுகாக்கும் இந்த ஆட்சி முறை பேச்சுவழக்கில் 'ஒரு நாடு இரு ஆட்சிமுறை ' ( "one country, two systems") என்று அழைக்கப்படுகிறது.
 

ஹொங்கொங்கில் ஜனநாயகக் போராளிகள், குறிப்பாக மாணவர்கள் 2014 ( "Umbrella Movement"  )'குடை இயக்கத்தை' 2019ம் ஆண்டு இரண்டாம் முறை நிகழ்த்திக் காட்டிய போது உலகின் கவனம் ஈர்த்தார்கள். ஹொங்கொங் நீதியமைப்புக்கும் சீனாவின் நீதியமைப்புக்குமான அடிப்படைப் பிரிவுக் கோட்டை அழித்து விட்டிருக்கக் கூடிய இந்த சட்டத்தை (ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கொண்டு விசாரணை செய்வதற்கு வழிகோலும் சட்டம்) இயற்ற சீனம் வகுத்த திட்டத்தை இந்தப் போராட்டம்தான் முறியடித்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அப்போது தோழமை உணர்வில் ஹொங்கொங் போராட்டக்காரர்களின் கரங்களைப்பிடித்து நின்றது. இப்போதும் அதே தோழமை உணர்விலும் முறையே எல்லோரதும் உரிமைப் போராட்டங்களின் தோழமை நெருக்கத்திலும் அவர்களின் கரங்களைப்பிடித்து நிற்கிறது.

இதேவேளை இமாலயத்தில் எல்லையருகே இந்தியத் துருப்புகளுடனான சீனாவின் படைக்குவிப்பு கெடுபிடியையும் (military adventurism) இந்த நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. குறிப்பாக உலகம் கொவிட்-19 நோயால் பெரும் நெருக்கடியினை சந்தித்கொண்டிருக்கும் இவ்வேளையில் இராணுவ முன்னெடுப்புக்களுக்கு இடமே இல்லை எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இன்றைய தேவை ஒத்துழைப்பும் மனிதநேயச் செயலுமே எனத் தெரிவித்துள்ளது.
இணைப்பு இல்லை
மின்னஞ்சலில் வந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வேற இடைக்கிடை கிளுகிளுப்பை மூட்டிக் கொண்டிடு.... 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈழத் தமிழருக்காக உலகநாடுகளுடன் தொடர்புகொள்ளக்கூடியதும், தமிழீழ அரசியல்பற்றி அலசும் ஆற்றலைக் கொண்டதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றுமட்டுமே உள்ளதாகத் தெரிகிறது.🤔 

  • கருத்துக்கள உறவுகள்

அங்க என்ன சத்தம்....

நாடு கடந்த அரசாங்கம் கண்டிச்சு.... சீனா இனிமேல் இந்திய எல்லையில் வாலாட்ட முடியாது. 

அனேகமாக கொத்தாவின் நடுநிலைமையுடன் சீனாவுக்கும் நா க அரசாங்கத்துக்கும் இடையில், இந்திய சீன எல்லையில் பதட்டம் தொடர்பாக சீனாவுக்கு இருக்கும் கவலைகளை சீன அதிகாரிகள் விசுவநாதனுடைய பொடியன் உருத்திரகுமாருக்கு விளக்குவார்கள்.

 

அதன் பின்பு நாடு கடந்த அர்சுக்கும் சீனாவுக்கும் வரலாற்றுக்காலம்தொட்டே தொடர்புகள் இருக்கு உதாரணம் ஆயுதாலத்துக்கும் அதிபராக தற்போதய சீனத்தலைவரிருப்பதுபோல்  ஆயுதாலப் பிரதமராக நா க தமிழீழ அரசுக்கு திரு உருக்திரகுமார் இர்க்கிறால் என ஒரு நீண்ட நட்பு விளக்கத்தைச் சீன அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.