Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா அரசு மீது இடிவிழும்! அத்துரலியே ரதன தேரர் ஆவேசம்

Featured Replies

அவுஸ்திரேலியாவின் பால் தரும் பசுக்களை இலங்கையின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது எனவும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் சுய நலத்திற்காகவே பல கோடி ரூபாயை செலவிட்டு, அரசாங்கம் 2 ஆயிரத்து 500 பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜேர்சி ரக இனமான பசுக்களே இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த பசுக்களை எமது நாட்டின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது. நாம் பிரேசில், ஆபிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பசு இனங்களையே இறக்குமதி செய்ய வேண்டும்.

அந்த பசுக்களே நாட்டின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படியும் முட்டாள்தனமான அரசாங்கம். இது கொள்ளையிடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.

தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ள இவர்களுக்கு இருக்கும் சுயநலத்தை பாருங்கள். மோசமான பேராசையால் நாட்டுக்கு செய்யும் அநியாயம். இவர்கள் மீது இடிவிழும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144569?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய இறக்குமதி பசுக்களை இலங்கையில் வளர்க்க முடியுமா? 🤔

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அவுஸ்திரேலிய இறக்குமதி பசுக்களை இலங்கையில் வளர்க்க முடியுமா? 🤔

 

வந்து இறங்கின மாட்டிடம் கேட்கவேண்டிய கேள்வி என்று நினைக்கிறன்.😀

கோபம் வேண்டாம் பகிடிக்குத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா இலங்கை ஆகியன கிட்டட்தட்ட காலநிலையில் அதிகம் வேறுபாடு இல்லை. இவற்றை பண்ணையில் வைத்து வளர்ப்பார்கள் எனவே வேறுவிதமான போட்டிகள் கால்நடைகளுக்கு இல்லை. தப்பி பிழைக்கும் என எதிர்பார்ப்போம்.

இப்போது மத்தளன் விமானநிலையம் வெட்டியாய்த்தானாம் உள்ளது. கால்நடைகளை மத்தளன் விமானநிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டு அங்கேயே மேயவும் விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

2500 மாட்டு ஊழலுக்கு  இந்தாள்  இடிவில  வானம் உடைன்சு  விழ  என்று அழுது  பிரளுது நாங்க இனத்தையே அழிய குடுத்து விட்டு நல்லாட்சி அது இது என்று நம்பிதுலைத்து கொண்டு இருக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்

விரிவான தகவல்கள் ஒன்றும் தெரியாமல் ஊகித்து கருத்து சொல்லமுடியாது. இலங்கையில் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளார்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஈடாக. ஆனால், அரசாங்கம் இவர்களின் ஆலோசனைகளை கருத்தில் எடுத்து முடிவு எடுக்கின்றதா அல்லது எதேச்சையாக சிலரின் விறுப்பு, வெறுப்புகளுக்கு அமையவும் தனிப்பட்ட சிலரின் நலன்களுக்காகவும் செயற்படுகின்றதா என்று எமக்கு தெரியாது.

செயற்கை சினைப்படுத்தல், ஹோர்மோன் பாவனை, சுகாதார பாதிப்புக்கள் என பல விடயங்கள் இந்த அவுஸ்திரேலியா கால்நடைகளுடன் சம்மந்தப்படலாம்.

இலவசமாக/இனாமாக/குறைந்த வட்டிக்கு எதை கொடுத்தாலும் வாங்கி பழகியவர்கள் நீண்டகால பின்விளைவுகளை கவனத்தில் எடுப்பார்களா என்பது சந்தேகமே.

இந்த துறையில் அனுபவம் பெற்றவர்களே விளக்கம் கொடுக்கவேண்டும்.

அதுவரை.. 😷

  • கருத்துக்கள உறவுகள்
சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய பசுக்கள் இறக்குமதி தொடர்பில் ஆய்வு

சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய பசுக்கள் இறக்குமதி தொடர்பில் ஆய்வு

 

எழுத்தாளர் Staff Writer    12 Jul, 2019 | 5:00 PM

  •  
  •  

Colombo (News 1st)

சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய பசுக்கள் இறக்குமதி தொடர்பில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சிலர் இலங்கையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

பசுக்கள் இறக்கின்றமை மற்றும் அவற்றின் நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பசுக்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று குறித்த குழுவினர் ஆய்வுகளை முன்னெடுத்து அறிக்கை தயாரிக்கவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சின் செயலாளர் A.D.S. ருவன் சந்திர தெரிவித்தார்.

நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவில் இருந்து இதுவரை 5000 பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பசுக்கள் நாட்டில் 67 இடங்களில் உள்ளன.

இதேவேளை, தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கொள்வனவு செய்த பசுக்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் இதுவரை நியாயமான பதிலளிக்கவில்லை என அகில இலங்கை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலிய பிரதிநிதிகளின் ஆய்வு பக்கசார்பாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய பசுக்களை கொள்வனவு செய்துள்ள அனைத்து பண்ணைகளும் அந்நாட்டு பிரதிநிதிகளினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதிநிதிகளின் ஆய்வு நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால் ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது விவசாய அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்தார்.

https://www.newsfirst.lk/tamil/2019/07/12/சர்ச்சைக்குரிய-அவுஸ்திர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.