Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கப் பொலிஸாரின் காட்டு மிராண்டித்தனம்! மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! காணொளியால் மீண்டும் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் பொலிஸாரின் காட்டு மிராண்டித்தனம்! மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! காணொளியால் மீண்டும் பதற்றம்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, அட்லாண்டா காவல்துறைத் தலைவர் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்துள்ளார்.

காவல்துறைத் தலைவரின் ராஜினாமா தகவலை நகர மேயர் Keisha Lance Bottoms உறுதி செய்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மாகாண விசாரணை குழு பகீர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், கடந்து செல்லும் பாதையைத் தடுக்கும் வகையில் காரில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமை இரவு உணவகம் ஒன்றில் இருந்து அட்லாண்டா பொலிசாருக்கு புகார் சென்றுள்ளது.

புகாரையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அட்லாண்டா பொலிசார், அந்த இளைஞர் நிதானமாக இருக்கிறாரா என்ற சோதனையில் தோல்வியடைந்ததாகவும், பின்னர் அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றதால் போராடத் தொடங்கியதாகவும் கூறுகின்றனர்.

 

 

 

இதனிடையே பொலிசாரிடம் இருந்து தப்ப முயன்ற 27 வயது Rayshard Brooks என்ற கருப்பின இளைஞர் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் காட்டுத்தீயாக பரவிய நிலையில், சம்பவம் நடந்த உணவகம் முன்பு சுமார் 50 பேர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது அட்லாண்டா முழுவதும் நொடியிடையில் வியாபித்த நிலையில், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல்துறைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.91.jpg

https://www.ibctamil.com/usa/80/145146

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன, அமெரிக்காவுக்கு... வந்த சோதனை.
கொரோனா தடுப்பில்... அமெரிக்காவின் தோல்வி, 
கறுப்பினத்தவர்கள்  கொலை என்று....
கடந்த இரண்டு மாதமாக... உலகச்  செய்திகளில், முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.

அடுத்த தேர்தலில்... ட்ரம்ப்புக்கு, தோல்வி உறுதி போலுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கருப்பரினத்தைச் சேர்ந்த இன்னொரு நபரை போலீஸார் சுட்டுக் கொலை: உணவு விடுதிக்கு தீ வைப்பு

us-atlanta-ld-shooting-atlanta-police-chief-resigns-after-fatal-police-shooting ரெய்ஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பரைச் சுட்டுக்கொன்றதையடுத்து வலுக்கும் போராட்டம், உணவு விடுதிக்கு தீவைப்பு:

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் காவலில் பலியானதையடுத்து எழுந்த போராட்டங்கள் அடங்காத நிலையில் மேலும் ஒரு கருப்பரினத்தைச் சேர்ந்த நபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அட்லாண்டா போலீஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

27 வயது ரேய்ஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பரினத்தைச் சேர்ந்த நபரைக் கைது செய்யும் போது போலீஸாரிடமமிருந்து டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் இதனையடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1592108414298.jpg

அட்லாண்டாவில் உள்ள, புரூக்ஸ் என்ற இந்த நபர் சுடப்பட்ட இடத்தில் உள்ள வெண்டி உணவு விடுதியை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். நெடுஞ்சாலையில் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.

இதனையடுத்து அட்லாண்டா போலீஸ் உயரதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.

புரூக்ஸை சுட்டுக்கொன்ற அந்த அடையாளம் தெரியாத போலீஸ் ஆபீசர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக மேயர் அறிவித்தார்.

அட்லாண்டா தலைமை போலீஸ் அதிகாரி ராஜினாமா செய்ததையடுத்து இடைக்கால தலைமை அதிகாரியாக ரோட்னி பைரண்ட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவு விடுதியில் கார்கள் நிறுத்துமிடத்தில் ரேஷர்ட் புரூக்ஸ் என்ற நபர் காரிலேயே தூங்கியுள்ளார். இதனையடுத்து மற்ற வாடிக்கையாளர்கள் வருகையை அவர் வேண்டுமென்றே தடுக்கிறார் என்பதாக போலீஸாருக்கு சிலர் புகார் அளித்தனர்.

1592108471298.jpg

அவர் மதுபானம் அருந்தியிருந்ததாக சோதனையில் தெரிய வந்தது. இவரைப் போலீஸார் கைது செய்த முயற்சித்த போது போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதில் ஆபீசர் ஒருவரின் டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்தியுள்ளனர், ஆனால் அவர் துப்பாக்கியை போலீஸை நோக்கிக் காட்டி அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரைச் சுட்டுக் கொன்றதாக ஜார்ஜியா விசாரணை கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புரூக்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது.

கொல்லப்பட்ட புரூக்ஸ் 4 குழந்தைகளுக்கு தந்தை. மகளின் 8வது பிறந்த தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இவரது கொலை இன்னொரு பெரிய போராட்டத்தை அங்கு உருவாக்கியுள்ளது.

https://www.hindutamil.in/news/world/559342-us-atlanta-ld-shooting-atlanta-police-chief-resigns-after-fatal-police-shooting-2.html

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.