Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை கருணா வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது."

இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்ததாவது

"போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் அமைப்பினர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள்.

போர்க்காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராகச் செயற்பட்டார். இதன்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கினார். இதன்பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

கருணா பல்வேறு இரகசியத் தகவல்களை அரசுக்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டே இறுதிக்கட்டப் போர் குறுகிய காலத்தில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆகவே, தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான கருத்துக்களைக் குறிப்பிடுவதை இவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இறுதிக்கட்டப் போரை மிக விரைவில் நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக்கொண்டோம்.

போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/145543?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

இறுதிக்கட்டப் போரை மிக விரைவில் நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக்கொண்டோம்.

இப்போ இலங்கையில் சர்வதேசத்தின் அழுத்தம் குறைப்புக்கும், நிறைவுக்கும்  இவரால் முடியுமென்றால் தொடர்ந்து பயன்படுத்துவோம். இல்லையெனில் இவரது முட்டாள் தனமான கருத்துக்களால் முன்னாள் போராளிகளில் பழியைப்போட்டுவிட்டு, ஒரு சுமந்திரனையோ, டக்கிலஸையோ, அங்கதனையோ, சுப்பனையோ, கொக்கனையோ தேடிப் போய்க்கொண்டே இருப்போம். 

33 minutes ago, satan said:

ஒரு சுமந்திரனையோ, டக்கிலஸையோ, அங்கதனையோ, சுப்பனையோ, கொக்கனையோ தேடிப் போய்க்கொண்டே இருப்போம். 

சுமந்திரனை கருணாவோட ஒப்பிட முடியுமா? 
சுமந்திரன் கருணாவைவிட படு மோசமான ஆள். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய கட்டத்தில் சுமந்திரனை விட வேறு தெரிவு தமிழருக்கு இல்லை. அவ்வளவு வல்லவர் சுமந்திரன் என்கிற கருத்தும் நிலவுகிறதே.... விநாயக மூர்த்தி முரளிதரன் நல்லவரா? சுமந்திரன் மோசமானவரா? என்கிற கேள்விதான் இப்போ எனக்கு. 

”என்னால் இப்போது வர முடியாது“ சி.ஐ.டிக்கு கருணா அறிவிப்பு

2000 அல்லது 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலான்ய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக கருணா அழைக்கப்பட்டார்.

எனினும் தனக்கு தற்போது வர முடியாது என கருணா அறிவித்தல் விடுத்துள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாக இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

தனக்கு உடல்நிலை சரியாக இல்லாததன் காரணத்தால் தமக்கு வர முடியாது என அறிவித்துள்ளர்.

மேலும் தனது உடல்நிலை சரியானதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் அவர் தனது வழங்கறிஞர்கள் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.ibctamil.com/srilanka/80/145724?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 05:03, Kali said:

சுமந்திரனை கருணாவோட ஒப்பிட முடியுமா? 
சுமந்திரன் கருணாவைவிட படு மோசமான ஆள். 

கருணாவால் நாம் அழிக்கப்பட்டோம்  அத்துடன் அவர் வேலை முடிந்தது .ஆனால் சுமத்திரனால் தமிழர்களின் ஒவ்வொருவரின் எதிர்காலமும் சிதைக்கப்பட போகிறது சுமத்திரன் வரும் தேர்தலில் வென்றால் அடுத்து வரும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர் எண்ட  இனம் இருக்கும் ஆனால் சிறுவர்களும் கஞ்சாமுதல் போதை வஸ்த்துவுக்கு அடிமையாக இருப்பார்கள்  திருட்டும் வன்புணர்வுகளும் மலிந்து போய்  இருக்கும்  படிப்பறிவு அற்ற நிலையில் இப்போ மலேசிய தமிழர்களின் நிலையை விட அதி  மோசமான நிலையில்தமிழ் இனம் இருக்கும் யாழில் மூலைக்கு  மூலை  முஸ்லீம் பள்ளிவாசல்கள் முளைத்து இருக்கும் போட்டிக்கு பன்சாலைகளும் அதில் தென்பகுதியில் குற்றம் புரிந்த பிக்குகளுமாய்  இருப்பினம்.இங்கிருந்து போய்  வாங்கிய புலம்பெயர் தமிழரின் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்பட்டு இருக்கும் அதற்கு சுமத்திரன் கோஸ்ட்டி முஸ்லிலிம்களுக்கு ஆதரவாய் வாதாடி வென்று கொடுப்பிணம் இப்பவே யாழ் கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் நடக்கும் கூத்துக்களை  சொல்ல முடியாது அவ்வளவு மோசமானவை .

கஞ்சாவும் போதைப்பொருளையும்  பரவும் மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பினம் ஆவா  போல் நாலு வாழ் வெட்டு குழுவை உருவாக்கி வைத்திருப்பினம்  இப்படியான விடயங்களை சமாளிக்க புலிகளுக்கு நான்கே நாலு நாட்கள் காணும் ஆனால் சுமத்திரன் அவற்றை அடக்க ராணுவம் தேவை என்று கோரிக்கை  வைத்து ராணுவம் வந்து பிலிம் காட்டும் .கருணாவின் காட்டி கொடுப்பால்  தமிழ் இனத்தை சிங்களம் வெற்றி கொள்ள மட்டுமே முடிந்தது ஆனால் சுமத்திரனால் தமிழ் இனம் அழிக்கப்படும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.