Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.  

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய் 
மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் 

குயிலிசை குழலோசை உன் கொஞ்சுமொழிக்கு இணையாமோ 
கொண்ட மனசஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமோ 

தேயாத என் நிதியே திகட்டா தெள்ளமுதே 
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகிலம் வாழ்ந்திட... மகிமை சிறந்திட... அகமது நபி பிறந்தார் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறை உறவொன்று எனக்கின்று வேண்டும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ந்து வரும் நாகாத்தம்மா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருத்தொண்டத்தொகை
பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்
393 தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
 இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
 விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

394 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
 ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
 கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
 எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

395 மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
 முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
 திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
 வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
 ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.
 
396 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
 திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
 பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
 ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

397 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
 மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
 ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
 நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

398 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
 மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
 செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
 கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


399 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
 பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
 விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
 கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.ச.ர.வ.ண.ப.வ


மங்களம் - 'ஏறுமயில் ஏறி' 

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
  மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
  புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
  ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
  களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கேசரின் ஆருயிர் நாயகி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை தேடுதே... உள்ளம் வாடுதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசனமிகவேற்றி - பழனி | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன்  | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

வசனமிகவேற்றி மறவாதே
மனது துயராற்றி உழலாதே

இசைபயில் ஷடாக்ஷரம் அதாலே
இகபர செளபாக்யம் அருள்வாயே

பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநிமலை வீற்றருளும் வேலா

அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர்சிறை மீட்ட பெருமாளே

இகபர செளபாக்யம் அருள்வாயே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே 
கள்ள பார்வை ஒன்றே போதுமே 
சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன ||

கார்முகில் போல் வண்ணன் கதிர் என்ன மதி என்ன 
கருவிழி கடலினை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தேன் 
அகம் குளிரும் கள்ள || 

அன்னை யேசொதை  அருகினிலே சென்றிவன்
வெண்ணை திருடி வந்து விந்தை சொல்ல போனான் 
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று 
சொல்லாதே என்று கண்ணால்  சொல்லிடும் ||

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாகாளியூர் கொல்லங்கோடு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கத்து மன்னர் தர்பார் வாசல்.... வேத வெளிச்சம் தெரிகிறது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரவேலே நீ பாக்கியவான் அனாதி தேவன் உன் அடைக்கலமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆநிரை மேய்த்த தாமரை கண்ணனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண, பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு, மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள், முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி, களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர, வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர, முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி, லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு, பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பித்தாபிறை சூடீபெரு     
  மானே அருளாளா    
எத்தான்மற வாதேநினைக்     
  கின்றேன்மனத் துன்னை    
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்     
  நல்லூர் அருட்டுறையுள்    
அத்தாஉனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  1 

நாயேன்பல நாளும்நினைப்    
  பின்றிமனத் துன்னைப்    
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற    
  லாகாவருள் பெற்றேன்    
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
ஆயாஉனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  2 

மன்னேமற வாதேநினைக்    
  கின்றேன்மனத் துன்னைப்    
பொன்னேமணி தானேவயி    
  ரம்மேபொரு துந்தி    
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
அன்னேஉனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  3 

முடியேன்இனிப் பிறவேன்பெறின்    
  மூவேன்பெற்றம் ஊர்தீ    
கொடியேன்பல பொய்யேஉரைப்    
  பேனைக்குறிக் கொள்நீ    
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
அடிகேளுனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  4 

பாதம்பணி வார்கள்பெறும்    
  பண்டம்மது பணியாய்    
ஆதன்பொருள் ஆனேன்அறி    
  வில்லேன் அருளாளா    
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
ஆதீஉனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே  5 

தண்ணார்மதி சூடீதழல்    
  போலும்திரு மேனீ    
எண்ணார்புரம் மூன்றும்எரி    
  உண்ணநகை செய்தாய்    
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்     
  நல்லூர் அருட்டுறையுள்    
அண்ணாஉனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே  6 


ஊனாய்உயிர் ஆனாய்உடல்    
  ஆனாய்உல கானாய்    
வானாய்நிலன் ஆனாய்கடல்    
  ஆனாய்மலை ஆனாய்    
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
ஆனாய்உனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  7 

ஏற்றார்புரம் மூன்றும்எரி    
  உண்ணச்சிலை தொட்டாய்    
தேற்றாதன சொல்லித்திரி    
  வேனோசெக்கர் வானீர்    
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
ஆற்றாயுனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  8 

மழுவாள்வலன் ஏந்தீமறை    
  ஓதீமங்கை பங்கா    
தொழுவார்அவர் துயர்ஆயின    
  தீர்த்தல்உன தொழிலே    
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
அழகாஉனக் காளாயினி     
  அல்லேன்எனல் ஆமே.  9 

காரூர்புனல் எய்திக்கரை    
  கல்லித்திரைக் கையால்    
பாரூர்புகழ் எய்தித்திகழ்    
  பன்மாமணி உந்திச்    
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    
  நல்லூர் அருட்டுறையுள்    
ஆரூரன்எம் பெருமாற்காள்     
  அல்லேன்எனல் ஆமே.  10

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி
ஓடோடி வந்தேன் கண்ணா நான்
உனக்கும் எனக்குமுள்ள உறவின்று அறிந்து 

அனுபல்லவி 
கோடானுகோடி தவம் செய்து உனைக்காண
கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனத்திடை   (ஓடோடி)

சரணம் 
குழலூதும் எழில் காணவே கூடும்
கோபியர்கள் முகம் நாணவே காதல்
விழியுன்றன் முகம் நாடவே
முறுவல் இதழோரம் சுழித்தோடவே

மத்யம காலம்
ஜகன்னாதன் இசை பாட நங்கை ஜதி போட
கால காலமெல்லாம் ஸ்ருதியும் லயமுமென
வேதப்பொருள்    உன்னில் -ஒன்றிஉறைந்திடவே  
போதம் மிகு காதல் பொன்னடி தனில் கொண்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யாரஸூலுல்லா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி பேகாக்
கான மழை பொழிகின்றான் கண்ணன் யமுனா தீரத்தில் யாதவ குலம் செழிக்க

அனுபல்லவி
ஆனந்தமாகவே அருள் பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன்

சரணம் 1
தேன்சுவை இதழில் வைங்குழல் வைத்தே திகட்டா அமுதாய் தேவரும் விரும்பும் வேணு-

சரணம் 2 பெளளி
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச

கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழல் ஊதி

சரணம் 3 மணிரங்கு
அம்பரம் தனிலே தும்புரு நாரதர் அரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட

அச்சுதன் அனந்தன் ஆயர்குல திலகன் அம்புஜனாபன் ஆர்வமுடன் முரளி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண் :காந்தாரம்
பாடல் எண் : 1
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.


பாடல் எண் : 2
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.


பாடல் எண் : 3
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.


பாடல் எண் : 4
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.


பாடல் எண் : 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.